சுதர்சன சக்ரதாரி மோகன் மற்றும் சர்க்கதாரி மோகன் காட்டிய பாதையைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா இன்று வலுவடைந்து வருகிறது: பிரதமர்
இன்று, பயங்கரவாதிகளும் அவர்களின் மூளையாக இருப்பவர்களும் எங்கு மறைந்திருந்தாலும் தப்புவதில்லை: பிரதமர்
சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் அல்லது கால்நடை வளர்ப்பவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட எங்கள் அரசு அனுமதிக்காது: பிரதமர்
இன்று, குஜராத் மண்ணில் அனைத்து வகையான தொழில்களும் விரிவடைந்து வருகின்றன: பிரதமர்
புதிய நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் அதிகாரம் அளிப்பது எங்கள் தொடர்ச்சியான முயற்சி: பிரதமர்
இந்த தீபாவளி, அது வர்த்தக சமூகமாக இருந்தாலும் சரி அல்லது பிற குடும்பங்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் இரட்டை போனஸ் மகிழ்ச்சி கிடைக்கும்: பிரதமர்
பண்டிகைக் காலத்தில் அலங்காரத்திற்காக வீட்டிற்கு கொண்டு வரப்படும் அனைத்து கொள்முதல்கள், பரிசுகள் மற்றும் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கட்டும்: பிரதமர்

குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு  பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த  முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்த பருவமழைக் காலத்தில், குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதையும், இந்தியாவின் சில இடங்களில் மேக வெடிப்புகள் ஏற்படுவதையும் குறிப்பிட்ட திரு. மோடி, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார். இயற்கையின் இந்த சீற்றம் முழு நாட்டிற்கும் ஒரு சவாலாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து மாநில அரசுகளுடனும் ஒருங்கிணைந்து  நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.

 

குஜராத் இரண்டு மோகன்களின் பூமி என்பதை எடுத்துரைத்த பிரதமர், முதலாவது மோகன் சுதர்சன சக்கரத்தை ஏந்திய துவாரகாவின் ஸ்ரீ கிருஷ்ணர் என்று குறிப்பிட்டார். இரண்டாவது மோகன், ராட்டை சக்கரத்தை இயக்கும்  சபர்மதியின் துறவி மகாத்மா காந்தி  என்று அவர் வர்ணித்தார். "சுதர்சன சக்கரதாரி மோகன் மற்றும் சர்க்கதாரி மோகன் காட்டிய பாதையைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா இன்று வலுவடைந்து வருகிறது" என்று திரு மோடி கூறினார். சுதர்சன சக்ரதாரி மோகன் தேசத்தையும்,  சமூகத்தையும் எவ்வாறு பாதுகாப்பது என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்தார் என்பதை அவர் எடுத்துரைத்தார், மேலும் சுதர்சன சக்கரம் நீதி மற்றும் பாதுகாப்பின் கேடயமாக மாறியது, பாதாள உலகத்தின் ஆழத்திலும் எதிரிகளைத் தண்டிக்கும் திறன் கொண்டது என்றும் கூறினார். இந்த உணர்வு இன்றைய இந்தியாவின் முடிவுகளில் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் வலியுறுத்தினார். இன்று, பயங்கரவாதிகள் அல்லது அவர்களைக் கையாளுபவர்களை அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும், இந்தியா விடாது என்று உறுதியளித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எவ்வாறு பழிவாங்கியது என்பதை உலகம் கண்டதாக திரு மோடி கூறினார். இந்தியாவின் ஆயுதப் படைகளின் வீரத்தின் அடையாளமாகவும், சுதர்சன சக்ரதாரி மோகனால் ஈர்க்கப்பட்ட நாட்டின் உறுதிப்பாடாகவும் ஆபரேஷன் சிந்தூரை அவர் மேற்கோள் காட்டினார்.

சுதேசி மூலம் இந்தியாவின் செழிப்புக்கான பாதையைக் காட்டிய சர்க்கதாரி மோகனான மகாத்மா காந்தியின் மரபைப் பற்றிப் பேசிய பிரதமர், பாபுவின் பெயரில் பல தசாப்தங்களாக அதிகாரத்தை அனுபவித்த கட்சியின் செயல்கள் மற்றும் செயலற்ற தன்மைகளுக்கு சபர்மதி ஆசிரமம் சாட்சியாக நிற்கிறது என்று குறிப்பிட்டார். சுதேசி என்ற மந்திரத்தை வைத்து அந்தக் கட்சி என்ன செய்தது என்று அவர் கேள்வி எழுப்பினார். அறுபது முதல் அறுபத்தைந்து ஆண்டுகள் நாட்டை ஆண்ட கட்சி, பிற நாடுகளை  இந்தியா சார்ந்து இருக்க வைத்தது என்று விமர்சித்த திரு மோடி, இறக்குமதிகளைக் கையாளவும், ஊழலை ஊக்குவிக்கவும் இவ்வாறு செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டினார். இன்று, இந்தியா ஒரு வளர்ந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக சுயசார்பை மாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியா தனது விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் ஆற்றல் மூலம் இந்தப் பாதையில் வேகமாக முன்னேறி வருவதை வலியுறுத்திய திரு மோடி, குஜராத்தில் அதிக எண்ணிக்கையிலான கால்நடை வளர்ப்பாளர்கள் இருப்பதை எடுத்துரைத்தார். இந்தியாவின் பால்வளத் துறை, வலிமையின் ஆதாரமாகவும், இந்தத் துறையில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். பொருளாதார சுயநலத்தால் இயக்கப்படும் அரசியலை உலகம் காண்கிறது என்று பிரதமர் எச்சரித்தார். அகமதாபாத் மண்ணிலிருந்து, சிறு தொழில்முனைவோர், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நலன் தனக்கு மிக முக்கியமானது என்று திரு மோடி உறுதிப்படுத்தினார். சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் அல்லது கால்நடை வளர்ப்பாளர்களின் நலன்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய தனது அரசு அனுமதிக்காது என்று அவர் சூளுரைத்தார்.

"தற்சார்பு இந்தியா பிரச்சாரத்திற்கு குஜராத் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்து வருகிறது. இந்த முன்னேற்றம் இரண்டு தசாப்த கால அர்ப்பணிப்பு முயற்சியின் விளைவாகும்" என்று திரு மோடி வலியுறுத்தினார். இன்றைய இளைஞர்கள் இப்பகுதியில் ஊரடங்கு உத்தரவுகள் அடிக்கடி நிகழும் நாட்களைக் காணவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். வர்த்தகம் மற்றும் வணிகத்தை மேற்கொள்வது மிகவும் கடினமாக இருந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், அங்கு அமைதியின்மை நிறைந்த சூழல் நிலவியது என்று குறிப்பிட்டார். இருப்பினும், இன்று அகமதாபாத், நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக உள்ளது என்றும், இந்த மாற்றத்தை சாத்தியமாக்கியதற்காக மக்களைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

குஜராத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு சூழல் மாநிலம் முழுவதும் நேர்மறையான விளைவுகளைத் தருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், "இன்று, குஜராத்தில் அனைத்து வகையான தொழில்களும் விரிவடைந்து வருகின்றன" என்று கூறினார். குஜராத், உற்பத்தி மையமாக உருவெடுப்பதில் முழு மாநிலமும் பெருமை கொள்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ரயில் தொழிற்சாலையில் சக்திவாய்ந்த மின்சார லோகோமோட்டிவ் என்ஜின்கள் தயாரிக்கப்படும் தாஹோத் நகருக்கு சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகள் இப்போது மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். குஜராத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் பெரிய அளவில் உற்பத்தியாகி வருவதாகவும் அவர் கூறினார். முக்கிய தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மாநிலத்தில் தொழிற்சாலைகளை அமைத்து வருவதாக பிரதமர் கூறினார். குஜராத், ஏற்கனவே பல்வேறு விமானக் கூறுகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வதோதரா, தற்போது போக்குவரத்து விமானங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது என்று அவர் அறிவித்தார். மின்சார வாகன உற்பத்திக்கான முக்கிய மையமாக குஜராத் மாறி வருவதை வலியுறுத்திய பிரதமர், மின்சார வாகன உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி தொடங்கப்பட்டுள்ள ஹன்சல்பூருக்கு நாளை வருகை தரவிருப்பதைப் பகிர்ந்து கொண்டார். குறைக்கடத்திகள் இல்லாமல் நவீன மின்னணு சாதனங்களை உருவாக்க முடியாது என்பதை எடுத்துரைத்த திரு மோடி, குறைக்கடத்தித் துறையில் குஜராத் ஒரு முக்கிய பெயராக மாறத் தயாராக உள்ளது என்று கூறினார். ஜவுளி, ரத்தினக் கற்கள் மற்றும் நகைகளில் குஜராத் தனது அடையாளத்தை நிலைநாட்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உட்பட மருந்து உற்பத்தித் துறையில், நாட்டின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குஜராத்திலிருந்தே உருவாகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"சூரிய சக்தி, காற்றாலை மற்றும் அணுசக்தி துறைகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது, இந்த முன்னேற்றத்தில் குஜராத்தின் பங்களிப்பு மிக அதிகம்" என்று பிரதமர் வலியுறுத்தினார். பசுமை ஆற்றல் மற்றும் பெட்ரோ ரசாயனங்களுக்கான முக்கிய மையமாகவும் குஜராத் வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் பெட்ரோ ரசாயன தேவைகளைப் பூர்த்தி செய்வதில் குஜராத் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் தொழில், செயற்கை இழை, உரங்கள், மருந்துகள், வண்ணப்பூச்சுத் தொழில் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அனைத்தும் பெட்ரோ ரசாயன துறையை பெரிதும் நம்பியுள்ளன என்பதைக் குறிப்பிட்ட திரு. மோடி, குஜராத்தில் பாரம்பரிய தொழில்கள் விரிவடைந்து வருவதாகவும், புதிய தொழில்கள் நிறுவப்படுவதாகவும் கூறினார். இந்த முயற்சிகள் அனைத்தும், தற்சார்பு இந்தியா முயற்சியை வலுப்படுத்துவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். இந்த வளர்ச்சி குஜராத் இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

தொழில், விவசாயம் அல்லது சுற்றுலா என அனைத்துத் துறைகளுக்கும் சிறந்த இணைப்பு அவசியம் என்று பிரதமர் கூறினார். கடந்த 20-25 ஆண்டுகளில் குஜராத்தின் இணைப்பு முழுமையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இன்று, பல சாலை மற்றும் ரயில் தொடர்பான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். சர்தார் படேல் சுற்று வட்ட சாலை என்று அழைக்கப்படும் சர்குலர் சாலை இப்போது அகலப்படுத்தப்படுவதைக் குறிப்பிட்ட திரு மோடி, அது ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். இந்த விரிவாக்கம் நகரத்தின் மிகவும் நெரிசலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

வீரம்காம்-குத்ராத்-ராம்புரா சாலையின் அகலப்படுத்தல், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழில்களுக்கு பயனளிக்கும் என்றும் அவர் கூறினார். புதிதாக கட்டப்பட்ட சுரங்கப்பாதைகள் மற்றும் ரயில்வே மேம்பாலங்கள், நகரத்தின் இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் பழைய சிவப்பு நிற பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட ஒரு காலம் இருந்ததை நினைவு கூர்ந்த திரு மோடி, இன்று பி.ஆர்.டி.எஸ் ஜன்மார்க் மற்றும் ஏ.சி-மின்சார  பேருந்துகள் நவீன வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டார். மெட்ரோ ரயில் வலையமைப்பும் வேகமாக விரிவடைந்து வருவதை அவர் எடுத்துரைத்தார். இது, அகமதாபாத் மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். குஜராத்தில் உள்ள ஒவ்வொரு நகரமும் ஒரு பெரிய தொழில்துறை வழித்தடத்தால் சூழப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, துறைமுகங்களுக்கும் இதுபோன்ற தொழில்துறை கூட்டங்களுக்கும் இடையே சரியான ரயில் இணைப்பு இல்லாததை அவர் சுட்டிக்காட்டினார். 2014-ல் தாம் பிரதமரான பிறகு, குஜராத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தொடங்கியதாக திரு மோடி கூறினார். கடந்த பதினொரு ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 3,000 கிலோமீட்டர் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், குஜராத்தின் முழு ரயில்வே வலையமைப்பும் இப்போது முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். குஜராத்துக்காக அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்கள் விவசாயிகள், தொழில்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு  பயனளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நகர்ப்புற ஏழைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதில் தனது அரசு உறுதியாக உள்ளது என்பதை வலியுறுத்திய திரு மோடி, இந்த உறுதிப்பாட்டின் நேரடி சான்றாக ராமபிர் நோ டெக்ரோவை மேற்கோள் காட்டினார். பூஜ்ய பாபு, எப்போதும் ஏழைகளின் கண்ணியத்தை வலியுறுத்தியதை நினைவு கூர்ந்த அவர், சபர்மதி ஆசிரமத்திற்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் இந்த தொலைநோக்குப் பார்வையின் உயிருள்ள எடுத்துக்காட்டாக நிற்கின்றன என்று கூறினார். ஏழைகளுக்கு 1,500 நிரந்தர வீடுகள் ஒதுக்கீடு செய்வது எண்ணற்ற புதிய கனவுகளின் அடித்தளத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார். இந்த நவராத்திரி மற்றும் தீபாவளியில், இந்த வீடுகளில் வசிப்பவர்களின் முகங்களில் மகிழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சியுடன், பூஜ்ய பாபுவுக்கு ஒரு உண்மையான அஞ்சலியாக பாபுவின் ஆசிரமத்தின் புதுப்பித்தல் பணியும் நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

 

சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, சபர்மதி ஆசிரமத்தை புதுப்பிக்கும் பணியைத் தொடர முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒற்றுமை சிலை நாட்டிற்கும் உலகிற்கும் உத்வேகத்தின் ஆதாரமாக மாறியுள்ளது போல, சபர்மதி ஆசிரமத்தின் புதுப்பித்தல் முடிந்ததும், அது உலகின் மிகப்பெரிய அமைதிக்கான சின்னமாக மாறும் என்று அவர் வலியுறுத்தினார். தனது வார்த்தைகளை அனைவரும் நினைவுகூருமாறு கேட்டுக் கொண்ட திரு மோடி, புதுப்பித்தல் முடிந்ததும், சபர்மதி ஆசிரமம் உலகின் முதன்மையான அமைதிக்கான உத்வேகமாக உருவாகும் என்றார்.

"தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வது அரசின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது" என்று பிரதமர் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தில் குடிசைவாசிகளுக்கு நிரந்தர வாயில் சமூகங்களை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். பல ஆண்டுகளாக, இதுபோன்ற ஏராளமான வீட்டுத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன, குடிசைகளை கண்ணியமான வாழ்க்கை இடங்களாக மாற்றுகின்றன, மேலும் இந்த பிரச்சாரம் தொடரும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

புறக்கணிக்கப்பட்டவர்களை தான் வணங்குவதாக வலியுறுத்திய திரு மோடி, நகர்ப்புற ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது தனது அரசின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது என்று வலியுறுத்தினார். சாலையோர வியாபாரிகள் மற்றும் நடைபாதை தொழிலாளர்கள் முன்பு புறக்கணிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். அவர்களை ஆதரிக்க, அரசு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தைத் தொடங்கியதாக பிரதமர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கிட்டத்தட்ட எழுபது லட்சம் சாலையோர வியாபாரிகள் மற்றும் வண்டி இழுப்பவர்கள் வங்கிகளிடமிருந்து நிதி உதவியைப் பெற முடிந்துள்ளது என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். குஜராத்தில் உள்ள லட்சக்கணக்கான பயனாளிகளும் இந்த முயற்சியின் மூலம் ஆதரவைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கடந்த பதினொரு ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர், இது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும், அதே நேரத்தில் உலகப் பொருளாதார நிறுவனங்களிடையே இது விவாதப் பொருளாகும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டில் ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உருவாவதற்கு இந்த நபர்கள் பங்களித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். "புதிய நடுத்தர வர்க்கம் மற்றும் பாரம்பரிய நடுத்தர வர்க்கம் ஆகிய இரண்டையும் மேம்படுத்த எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடுகிறது" என்று திரு மோடி வலியுறுத்தினார். ஆண்டு வருமானம் ₹12 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஜிஎஸ்டி முறையில் அரசு இப்போது சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் அறிவித்தார். இந்த சீர்திருத்தங்கள் சிறு தொழில்முனைவோரை ஆதரிக்கும் என்றும் பல பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்கும் என்றும் பிரதமர் கூறினார். இந்த தீபாவளி பண்டிகையில், நாடு முழுவதும் உள்ள வர்த்தக சமூகம் மற்றும் குடும்பங்கள் இரட்டை மகிழ்ச்சியைப் பெறும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

 

பிரதமரின் இலவச சூரிய வீடு திட்டத்தின் கீழ், மின்சாரக் கட்டணங்கள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, குஜராத்தில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் குடும்பங்கள் ஏற்கனவே இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன என்பதை எடுத்துரைத்தார். குஜராத்தில் உள்ள இந்தக் குடும்பங்களுக்கு மட்டும் அரசு ₹3,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் பயனாளிகளுக்கு மாதாந்திர மின்சாரக் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க சேமிப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அகமதாபாத் நகரம் இப்போது கனவுகள் மற்றும் தீர்மானங்களின் நகரமாக மாறி வருவதாக திரு மோடி கூறினார். ஒரு காலத்தில் மக்கள் அகமதாபாத்தை "கர்தாபாத்" என்று கேலி செய்ததை நினைவு கூர்ந்த அவர், பறக்கும் தூசி மற்றும் அழுக்கு எவ்வாறு நகரத்தின் துரதிர்ஷ்டமாக மாறியது என்பதை விவரித்தார். இன்று அகமதாபாத் அதன் தூய்மைக்காக தேசிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு  அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த சாதனைக்கு, அகமதாபாத்தில் வசிக்கும் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியும் காரணம் என்று அவர் பாராட்டினார்.

 

 

சபர்மதி நதி வறண்ட வடிகால் போல இருந்த முந்தைய நாட்களை இன்றைய இளைஞர்கள் பார்த்ததில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், அகமதாபாத் மக்கள் இந்த நிலையை மாற்றத் தீர்மானித்துள்ளனர் என்பதை எடுத்துரைத்தார். சபர்மதி ஆற்றங்கரை இப்போது நகரத்தின் பெருமையை மேம்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். கங்காரியா ஏரியின் நீர் முன்பு பச்சை நிறத்தில், களைகள் காரணமாக துர்நாற்றம் வீசியதாகவும், இதனால் அருகில் நடப்பது கூட கடினமாக இருந்ததாகவும், அந்தப் பகுதி சமூக விரோதிகளுக்கு விருப்பமான இடமாக மாறியதாகவும் திரு. மோடி குறிப்பிட்டார். இன்று, ஏரி சிறந்த பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். ஏரியில் படகு சவாரி மற்றும் குழந்தைகள் நகரம் ஆகியவை குழந்தைகளுக்கு வேடிக்கை மற்றும் கற்றல் ஒன்றிணைக்கும் இடங்களாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் அகமதாபாத்தின் மாறிவரும் முகத்தை பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் வலியுறுத்தினார். கங்காரியா கார்னிவல் இப்போது நகரத்தின் புதிய அடையாளமாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

அகமதாபாத் ஒரு முக்கிய சுற்றுலா மையமாக வளர்ந்து வருவதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, அகமதாபாத், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க வாயில்களாக இருந்தாலும் சரி, சபர்மதி ஆசிரமமாக இருந்தாலும் சரி, நகரத்தின் வளமான பாரம்பரியமாக இருந்தாலும் சரி, அகமதாபாத் இப்போது உலக வரைபடத்தில் ஜொலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். நகரத்தில் நவீன மற்றும் புதுமையான சுற்றுலா வடிவங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். அகமதாபாத் இசை நிகழ்ச்சி, பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மையமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். சமீபத்தில் நகரில் நடைபெற்று, உலகளாவிய கவனத்தை ஈர்த்த கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார். ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய அகமதாபாத்தின் அரங்கம் ஒரு முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது என்று திரு மோடி தெரிவித்தார். பெரிய அளவிலான இசை நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் அகமதாபாத்தின் திறனை இது நிரூபிக்கிறது என்று அவர் உறுதிப்படுத்தினார்.

பண்டிகைக் காலம் குறித்த தனது முந்தைய குறிப்பை மீண்டும் வலியுறுத்தி, நாடு தற்போது நவராத்திரி, விஜயதசமி, தந்தேராஸ் மற்றும் தீபாவளி உள்ளிட்ட கொண்டாட்டங்களின் காலகட்டத்தில் நுழைகிறது என்பதைக் குறிப்பிட்டு, இந்தப் பண்டிகைகள், கலாச்சார கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, சுயசார்பு பண்டிகைகளாகவும் பார்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். பண்டிகைக் காலத்தில் வீட்டிற்கு கொண்டு வரப்படும் அனைத்து கொள்முதல்கள், பரிசுகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதை குடிமக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். உண்மையான பரிசு என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது - இந்திய குடிமக்களின் கைகளால் தயாரிக்கப்பட்டது என்பதை அவர் அனைவருக்கும் நினைவூட்டினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பெருமையுடன் விற்கவும் வியாபாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த சிறிய ஆனால் அர்த்தமுள்ள முயற்சிகள் மூலம், இந்த விழாக்கள் இந்தியாவின் செழிப்பின் பிரமாண்டமான கொண்டாட்டங்களாக மாறும் என்று பிரதமர் கூறினார். வளர்ச்சி முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

 

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கும் போக்குவரத்து இணைப்புக்குமான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் ₹1,400 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல ரயில் திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்தார். இதில் ₹530 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 65 கிலோ மீட்டர் மகேசனா-பலன்பூர் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல், 37 கிலோ மீட்டர் கலோல்-காடி-கடோசன் சாலை ரயில் பாதையை மேம்படுத்துதல், ₹ 860 கோடிக்கு மேல் மதிப்புள்ள 40 கிலோ மீட்டர் பெக்ராஜி-ராணுஜ் ரயில் பாதைப் பணிகள் ஆகியவை அடங்கும். அகலப்பாதை திறன் கூடுதலாக சேர்க்கப்படுவதால், இந்த திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தில் திறன்வாய்ந்த, பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யும். இது தினசரி பயணங்கள், சுற்றுலா, வணிகங்களுக்கான பயணம் ஆகியவற்றை கணிசமாக எளிதாக்கும். அதே நேரத்தில் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும். மேலும், கட்டோசன் சாலை - சபர்மதி இடையே பயணிகள் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தது, மத தலங்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து அணுகலை வழங்கி, பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டும். பெக்ராஜியில் இருந்து கார்களைக் கொண்டு செல்லும் சரக்கு ரயில் சேவை மாநிலத்தின் தொழில்துறை மையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். சரக்குப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துதல், பிராந்திய வளர்ச்சியை விரைவுபடுத்துதல் என்ற தனது தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்தும் வகையில், பிரதமர் விராம்காம்-குதாத்-ராம்புரா சாலையை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கி வைத்தார். அகமதாபாத்-மெஹ்சானா-பலன்பூர் சாலையில் ஆறு வழி வாகன சுரங்கப்பாதைகள், அகமதாபாத்-விராம்காம் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். ஒட்டுமொத்தமாக, இந்த முயற்சிகள் தொழில்துறை வளர்ச்சியை அதிகரித்து, போக்குவரத்து திறனையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

மாநிலத்தில் மின்சாரத்துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, உத்தர குஜராத் விஜ் கம்பெனி லிமிடெட் (UGVCL) நிறுவனத்தின் கீழ் அகமதாபாத், மெஹ்சானா, காந்திநகர் ஆகிய பகுதிகளுக்கான மின்சார விநியோகத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் மின் இழப்புகளைக் குறைத்தல், கட்டமைப்பை நவீனமயமாக்குதல், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டங்கள் ₹1000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலானவை. பாதகமான வானிலையின் போது ஏற்படும் மின் தடைகளை இவை குறைக்கும். பொதுமக்களின் பாதுகாப்பு, மின்மாற்றி பாதுகாப்பு, மின்சார விநியோக கட்டமைப்பின் நம்பகத்தன்மை ஆகியவற்றை இவை மேம்படுத்தும்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் குடிசை மறுவாழ்வு அம்சங்களின் கீழ் ராமபிர் நோ டெக்ரோவின் பிரிவு-3-ல் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளின் மேம்பாட்டுப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார். அகமதாபாத்தைச் சுற்றியுள்ள சர்தார் படேல் சுற்றுவட்டச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும் செயல்படுத்தப்படும் முக்கிய சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்த முக்கிய நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

நிர்வாகத் திறன் மற்றும் பொது சேவை வழங்கலை வலுப்படுத்தும் வகையில், குஜராத்தில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அகமதாபாத் மேற்குப் பகுதியில் ஒரு புதிய பத்திரப் பதிவு கட்டடம், குஜராத் முழுவதும் பாதுகாப்பான தரவு மேலாண்மை, டிஜிட்டல் நிர்வாக திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக காந்திநகரில் அமைக்கப்படும்  மாநில அளவிலான தரவு சேமிப்பு மையம் ஆகியவை இதில் அடங்கும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Exclusive: Just two friends in a car, says Putin on viral carpool with PM Modi

Media Coverage

Exclusive: Just two friends in a car, says Putin on viral carpool with PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
List of Outcomes: State Visit of the President of the Russian Federation to India
December 05, 2025

MoUs and Agreements.

Migration and Mobility:

Agreement between the Government of the Republic of India and the Government of the Russian Federation on Temporary Labour Activity of Citizens of one State in the Territory of the other State

Agreement between the Government of the Republic of India and the Government of the Russian Federation on Cooperation in Combating Irregular Migration

Health and Food safety:

Agreement between the Ministry of Health and Family Welfare of the Republic of India and the Ministry of Health of the Russian Federation on the cooperation in the field of healthcare, medical education and science

Agreement between the Food Safety and Standards Authority of India of the Ministry of Health and Family Welfare of the Republic of India and the Federal Service for Surveillance on Consumer Rights Protection and Human Well-being (Russian Federation) in the field of food safety

Maritime Cooperation and Polar waters:

Memorandum of Understanding between the Ministry of Ports, Shipping and Waterways of the Government of the Republic of India and the Ministry of Transport of the Russian Federation on the Training of Specialists for Ships Operating in Polar Waters

Memorandum of Understanding between the Ministry of Ports, Shipping and Waterways of the Republic of India and the Maritime Board of the Russian Federation

Fertilizers:

Memorandum of Understanding between M/s. JSC UralChem and M/s. Rashtriya Chemicals and Fertilizers Limited and National Fertilizers Limited and Indian Potash Limited

Customs and commerce:

Protocol between the Central Board of Indirect taxes and Customs of the Government of the Republic of India and the Federal Customs Service (Russian Federation) for cooperation in exchange of Pre-arrival information in respect of goods and vehicles moved between the Republic of India and the Russian federation

Bilateral Agreement between Department of Posts, Ministry of Communications of the Republic of India between and JSC «Russian Post»

Academic collaboration:

Memorandum of Understanding on scientific and academic collaboration between Defence Institute of Advanced Technology, Pune and Federal State Autonomous Educational Institution of Higher Education "National Tomsk State University”, Tomsk

Agreement regarding cooperation between University of Mumbai, Lomonosov Moscow State University and Joint-Stock Company Management Company of Russian Direct Investment Fund

Media Collaboration:

Memorandum of Understanding for Cooperation and Collaboration on Broadcasting between Prasar Bharati, India and Joint Stock Company Gazprom-media Holding, Russian Federation.

Memorandum of Understanding for Cooperation and Collaboration on Broadcasting between Prasar Bharati, India and National Media Group, Russia

Memorandum of Understanding for Cooperation and Collaboration on Broadcasting between Prasar Bharati, India and the BIG ASIA Media Group

Addendum to Memorandum of Understanding for cooperation and collaboration on broadcasting between Prasar Bharati, India, and ANO "TV-Novosti”

Memorandum of Understanding between "TV BRICS” Joint-stock company and "Prasar Bharati (PB)”

Announcements

Programme for the Development of Strategic Areas of India - Russia Economic Cooperation till 2030

The Russian side has decided to adopt the Framework Agreement to join the International Big Cat Alliance (IBCA).

Agreement for the exhibition "India. Fabric of Time” between the National Crafts Museum &Hastkala Academy (New Delhi, India) and the Tsaritsyno State Historical, Architectural, Art and Landscape Museum-Reserve (Moscow, Russia)

Grant of 30 days e-Tourist Visa on gratis basis to Russian nationals on reciprocal basis

Grant of Group Tourist Visa on gratis basis to Russian nationals