For the vision of a developed India, the development of Eastern India remains a priority, and with this goal, the Central Government is continuously working: PM
Yesterday, India’s first Vande Bharat Sleeper Train was launched from West Bengal. Nearly half a dozen Amrit Bharat Express trains were introduced earlier, and three more began operations today: PM
The Extended Port Gate System being built in Balagarh will open the doors to new opportunities for Hooghly and the surrounding areas: PM
India is placing strong emphasis on multi-modal connectivity and green mobility, with ports, waterways, highways and airports being interconnected for seamless transport: PM

மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில் இன்று (18.01.2026) ₹830 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி அவசியம் என்றும், இதற்கு மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார்.

மேற்கு வங்கத்தில் நீர்வழிப் பாதைகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது என்றும், மத்திய அரசு இதை மேம்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சிறிது நேரத்திற்கு முன்பு, துறைமுகங்கள், நதி நீர்வழிகள் தொடர்பான திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதாக அவர் கூறினார். மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு இவை மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

 

துறைமுகங்களுடன் தொடர்புடைய திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், இங்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். கடந்த 11 ஆண்டுகளில், ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் திறன் விரிவாக்கத்தில் மத்திய அரசு பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது என்று அவர் கூறினார். சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்த துறைமுகத்தின் இணைப்பை மேம்படுத்த சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சிகளின் பலன்கள் இப்போது தெரியத் தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு சரக்கு கையாளுதலில் கொல்கத்தா துறைமுகம் புதிய சாதனைகளைப் படைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

பாலகாரில் மேம்படுத்தப்பட்டு வரும் நீட்டிக்கப்பட்ட துறைமுக வாயில் அமைப்பு ஹூக்ளி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிய வாய்ப்புகளைத் வழங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கங்கையில் கட்டப்பட்ட நீர்வழிப்பாதை மூலம் சரக்கு போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். இந்த முழு உள்கட்டமைப்பும் ஹூக்ளியை ஒரு வர்த்தக மையமாக மாற்ற உதவும் என்றும், நூற்றுக்கணக்கான புதிய முதலீடுகளைக் கொண்டுவரும் என்றும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

இந்தியா பசுமைப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். தடையற்ற போக்குவரத்தை செயல்படுத்த, துறைமுகங்கள், நதி நீர்வழிகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இது சரக்குப் போக்குவரத்துச் செலவுகள், போக்குவரத்து நேரம் ஆகியவற்றைக் குறைக்கிறது என்று அவர் கூறினார். போக்குவரத்து முறைகள் இயற்கைக்கு உகந்ததாக இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

மீன்பிடித் தொழிலிலும், கடல் உணவு ஏற்றுமதியிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தத் துறையில் மேற்கு வங்கம் நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற தமது கனவை அவர் வெளிப்படுத்தினார். மத்திய அரசால் தொடங்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிப் பயணத்தை துரிதப்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுத்  தமது உரையை நிறைவு செய்தார்.

 

மேற்கு வங்க ஆளுநர் திரு சி.வி. ஆனந்த போஸ், மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனோவால், திரு சாந்தனு தாக்கூர், திரு சுகந்த மஜும்தார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

ஹூக்ளியின் சிங்கூரில் ₹830 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பாலகாரில் விரிவாக்கப்பட்ட துறைமுக நுழைவாயில் அமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 

கொல்கத்தாவில் ஒரு அதிநவீன மின்சார மோட்டார் படகையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

ஜெயராம்பதி - பரோகோபிநாத்பூர் - மைனாபூர் புதிய ரயில் பாதையையும் அவர் தொடங்கி வைத்தார்.

மூன்று அம்ரித் பாரத் விரைவு ரயில்களை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கொல்கத்தா (ஹவுரா) - ஆனந்த் விஹார் முனையம்; கொல்கத்தா (சீல்டா) - பனாரஸ்; கொல்கத்தா (சந்திரகாச்சி) - தாம்பரம் அம்ரித் பாரத் விரைவு ரயில் ஆகியவை அந்த ரயில்களாகும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report

Media Coverage

India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Mr. Andy Burnham on assuming office as Prime Minister of the United Kingdom
July 21, 2026

Prime Minister Shri Narendra Modi today extended congratulations to Mr. Andy Burnham on assuming office as Prime Minister of the United Kingdom.

Shri Modi noted that India and the UK are bound by shared democratic values and enjoy wide-ranging cooperation across trade, investment, technology, defence, and people-to-people relations. With CETA entering into force this month, the Prime Minister pointed out that the bilateral partnership is poised to grow even stronger.

The Prime Minister stated that he looks forward to working closely with him to further deepen the India-UK Comprehensive Strategic Partnership and advance their shared Vision 2035.

In a post on X, the Prime Minister shared:

"Warmest congratulations to Mr. Andy Burnham on assuming office as Prime Minister of the United Kingdom.

India and the UK are bound by shared democratic values and enjoy wide-ranging cooperation across trade, investment, technology, defence and people-to-people relations. With CETA entering into force this month, our bilateral partnership is poised to grow even stronger.

I look forward to working closely with you to further deepen the India-UK Comprehensive Strategic Partnership and advance our shared Vision 2035.

@andyburnham"