'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' கொள்கையில் இந்தியா உறுதிபூண்டுள்ளது: பிரதமர்
அண்டை நாடுகளில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் நாடு இந்தியா: பிரதமர்

இலங்கையின் கொழும்பில் நேற்று, 1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்தகே கலந்துரையாடலின் போது, பிரதமரை சந்தித்ததில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய  கிரிக்கெட் வீரர்கள்  அவருக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்திய மக்கள், அணியின் தாக்கத்தை ஏற்படுத்திய செயல்திறனை, குறிப்பாக நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய மறக்கமுடியாத வெற்றியை இன்னும் நினைவில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களின் சாதனைகள் தேசத்தில் தொடர்ந்து எதிரொலிப்பதாக அவர் மேலும் கூறினார். 2010 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஒரு போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர் நடுவராகப் பணியாற்றியதைப் பார்த்ததை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்தியாவின் 1983 உலகக் கோப்பை வெற்றி மற்றும் இலங்கை அணியின் 1996 உலகக் கோப்பை வெற்றியின் உருமாறும் தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார், இந்த மைல்கற்கள் கிரிக்கெட் உலகை எவ்வாறு மாற்றியமைத்தன என்பதை வலியுறுத்தினார். டி 20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை, 1996 போட்டிகளில் அப்போதைய இலங்கை கிரிக்கெட் அணி வெளிப்படுத்திய புதுமையான விளையாட்டு பாணியில் காணலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். வீரர்களின் தற்போதைய முயற்சிகள் குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிய அவர், அவர்கள் இன்னும் கிரிக்கெட் மற்றும் பயிற்சியாளர்  பணிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரித்தார்.

 

1996 குண்டு வெடிப்புகளால் மற்ற அணிகள் பின்வாங்கிய போதிலும், இலங்கையில் பங்கேற்க இந்தியா எடுத்த முடிவை நினைவுகூர்ந்த திரு மோடி, கடினமான காலங்களில் இந்தியாவின் ஒற்றுமைக்கு இலங்கை வீரர்கள் காட்டிய பாராட்டுகளை எடுத்துரைத்தார். இலங்கையை உலுக்கிய 1996 குண்டு வெடிப்புகள் உட்பட துன்பங்களை இந்தியா எவ்வாறு வென்றது என்பதை வலியுறுத்திய அவர், இந்தியா வெளிப்படுத்திய நீடித்த விளையாட்டுத் திறனைப் பற்றிக் குறிப்பிட்டார். 2019 தேவாலய குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கைக்கான  தனது சொந்த பயணத்தை அவர் குறிப்பிட்டு, அவ்வாறு செய்த முதல் உலகளாவிய தலைவராக தாம் திகழ்ந்ததாகக் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியும் 2019 ஆம் ஆண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தியாவின் அசைக்க முடியாத உணர்வையும், இலங்கையின் மகிழ்ச்சி மற்றும் துயரத்தில் துணை நிற்பதற்கான உறுதிப்பாட்டையும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார், இது நாட்டின் நீடித்த மதிப்புகளை பிரதிபலிக்கிறது.

 

தற்போது இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் திரு சனத் ஜெயசூர்யா, சமீபத்திய நிதி நெருக்கடியின் போது இலங்கைக்கு இந்தியா அளித்த  உறுதியான   ஆதரவிற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா ஆராய முடியுமா என்று அவர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார், இது இலங்கையின் ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும் இலங்கையின் வடகிழக்கு பிராந்திய மக்களுக்கும் உதவும்.

 

திரு. ஜெயசூர்யா தெரிவித்த கருத்துக்களுக்குப் பாராட்டு தெரிவித்த பிரதமர், "அண்டை நாடுகளுக்கு முதலிடம்" என்ற கொள்கையில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று வலியுறுத்தினார். அண்டை நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு இந்தியாவின் விரைவான பதிலை அவர் எடுத்துரைத்தார், சமீபத்தில் மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தை மேற்கோள் காட்டி, அங்கு இந்தியா முதல் பதிலளிப்பவராக செயல்பட்டது, என்றார். தனது அண்டை மற்றும் நட்பு நாடுகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய ஒரு நாடு என்ற முறையில் இந்தியாவின் பொறுப்புணர்வு குறித்து அவர் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, சவால்களை சமாளிப்பதில் இலங்கைக்கு உதவுவதை  ஒரு பொறுப்பாக இந்தியா கருதுகிறது என்று கூறினார். பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், யாழ்ப்பாணம் மீது திரு ஜெயசூர்யாவின் அக்கறையைப் பாராட்டினார், அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த ஆலோசனையை தனது குழு கவனத்தில் எடுத்து அதன் சாத்தியக்கூறுகளை ஆராயும் என்று அவர் உறுதியளித்தார்.

அனைவருடனும் மீண்டும் இணையவும், பழைய நினைவுகளை மீட்டெடுக்கவும், பழக்கமான முகங்களைக் காணவும் வாய்ப்பு கிடைத்ததற்காக  பிரதமர் நன்றி தெரிவித்தார். இலங்கையுடனான இந்தியாவின் நீடித்த உறவை மீண்டும் உறுதிப்படுத்தி, இலங்கை கிரிக்கெட் சமூகம் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் தனது முழு ஆதரவையும் உறுதியளித்தார்.

 

Click here to read full text speech

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
1 in 4 iPhones are now made in India as Apple ramps up production by 53 per cent

Media Coverage

1 in 4 iPhones are now made in India as Apple ramps up production by 53 per cent
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 11, 2026
March 11, 2026

From Silent Medical Revolution to Global Manufacturing Hub: Salute to PM Modi's Relentless Push for a Stronger, Self-Reliant India