"இன்றைய நிகழ்வு தொழிலாளர்களின் ஒற்றுமை (மஸ்தூர் ஏக்தா) பற்றியது, நீங்களும் நானும் தொழிலாளி"
"களத்தில் கூட்டாகச் செயல்படுவது பிளவுகளை நீக்கி ஒரு அணியை உருவாக்குகிறது"
"கூட்டுணர்வில் வலிமை இருக்கிறது"
"நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிகழ்வு நீண்டகால நன்மைகளைக் கொண்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகள் அமைப்பில் விரக்தி உணர்வை ஏற்படுத்தியது, அதே நேரத்தில் ஜி 20 நாட்டிற்கு பெரிய விஷயங்களைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியது’’.
"மனிதகுலத்தின் நலனுக்காக இந்தியா வலுவாக நிற்கிறது, தேவைப்படும் காலங்களில் எல்லா இடங்களிலும் சென்றடைகிறது"

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாரத் மண்டபத்தில் ஜி 20 குழுவினருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஜி 20 ஐ வெற்றிகரமாக ஒழுங்கமைத்ததற்காக பொழியப்படும் பாராட்டுக்களை எடுத்துரைத்தார்.  மேலும் இந்த வெற்றிக்காக உழைத்த அடிமட்ட மற்றும் கீழ்நிலை நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

 

விரிவான திட்டமிடல் மற்றும் செயலாக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அதிகாரிகள் தங்கள் அனுபவங்களையும் கற்றல்களையும் ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம், எதிர்கால நிகழ்வுகளுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களைத் தயாரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தொழில் முனைவோரின் முக்கியத்துவத்தை உணர்தல் என்றும், ஒவ்வொருவருக்கும் அந்த நிறுவனத்தின் மையப் பகுதியாக இருப்பதற்கான உணர்வுதான் இதுபோன்ற பெரிய நிகழ்வுகளின் வெற்றியின் ரகசியம் என்றும் பிரதமர் கூறினார்.

 

அதிகாரிகள் அந்தந்த துறைகளில் உள்ள அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். இது ஒருவரின் செயல்திறனை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் வைக்கிறது என்றும் அவர் கூறினார். மற்றவர்களின் முயற்சிகளை நாம் அறிந்தால், அது நம்மை சிறப்பாகச் செய்யத் தூண்டுகிறது என்றும் அவர் கூறினார். 'இன்றைய நிகழ்வு தொழிலாளர்களின் ஒற்றுமை, நீங்களும் நானும் தொழிலாளி ' என்று அவர் கூறினார்.

வழக்கமான அலுவலகப் பணிகளில் நமது சகாக்களின் திறன்களை நாம்  அறிந்து கொள்வதில்லை என்று பிரதமர் கூறினார். களத்தில் கூட்டாக வேலை செய்யும் போது, இதுபற்றி அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது நடைபெற்று வரும் தூய்மை இயக்கத்தின் உதாரணத்துடன் இந்த விஷயத்தை விளக்கிய அவர், அதைத் துறைகளில் ஒரு கூட்டு முயற்சியாக மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். இது திட்டத்தை ஒரு வேலையாக இல்லாமல் திருவிழாவாக மாற்றும் என்றும் அவர் கூறினார். கூட்டு மனப்பான்மையில் வலிமை உள்ளது என்றார் அவர்.

 

அலுவலகங்களில் உள்ள படிநிலைகளில் இருந்து வெளியே வரவும், சக ஊழியர்களின் பலத்தை அறிய முயற்சி செய்யவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மனிதவளம் மற்றும் கற்றல் கண்ணோட்டத்தில் இத்தகைய வெற்றிகரமான நிறுவனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், ஒரு நிகழ்வு வெறுமனே நடைபெறுவதை விட ஒழுங்காக நடக்கும்போது, அது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார். காமன்வெல்த்  விளையாட்டுப் போட்டிகளை உதாரணமாகக் காட்டி, அது நாட்டை அடையாளப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கலாம், ஆனால் அது சம்பந்தப்பட்ட மக்களையும் நாட்டையும் இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல், ஆளும் அமைப்பில் விரக்தி உணர்வையும் ஏற்படுத்தியது. மறுபுறம், ஜி 20 இன் ஒட்டுமொத்த விளைவு நாட்டின் வலிமையை உலகிற்குக் காண்பிப்பதில் வெற்றியாகும். "தலையங்கங்களில் உள்ள பாராட்டுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரை, எனது நாடு இப்போது அத்தகைய எந்தவொரு நிகழ்வையும் சிறந்த முறையில் நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது" என்று அவர் கூறினார்.

 

நேபாளத்தில் பூகம்பம், ஃபிஜியில் சூறாவளி,  இலங்கையில் புயல், மாலத்தீவுகளில்  மின்சாரம் மற்றும் தண்ணீர் நெருக்கடி, ஏமனில் இருந்து வெளியேற்றம், துருக்கி பூகம்பம் போன்ற உலகளாவிய அளவில் பேரழிவுகளின் போது மீட்புக்கு இந்தியாவின் பெரும் பங்களிப்பை மேற்கோள் காட்டி இந்த வளர்ந்து வரும் நம்பிக்கையை அவர் மேலும் விவரித்தார். இவை அனைத்தும், மனிதகுலத்தின் நலனுக்காக, இந்தியா வலுவாக நிற்கிறது என்பதையும், தேவைப்படும் நேரங்களில் எல்லா இடங்களையும் சென்றடைகிறது என்பதையும் நிறுவியுள்ளது என்று அவர் கூறினார்.  ஜி 20 உச்சிமாநாட்டின் நடுவில் கூட ஜோர்டான் பேரழிவுக்கான மீட்புப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அவர் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வில்,  அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பின் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர் என்றும், அடிமட்ட நிர்வாகிகள் முன்னணியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். "இந்த ஏற்பாட்டை நான் விரும்புகிறேன், ஏனெனில் இது எனது அடித்தளம் வலுவானது என்பதை உறுதிப்படுத்துகிறது", என்று அவர் கூறினார்.

 

மேலும் மேம்பட உலகளாவிய வெளிப்பாடு தேவை என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இப்போது உலகளாவிய அணுகுமுறை மற்றும் சூழல் நமது அனைத்துப் பணிகளையும் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று அவர் கூறினார். ஜி 20 மாநாட்டின் போது  முக்கிய முடிவுகளை எடுக்கும் ஒரு லட்சம் பேர்  இந்தியாவுக்கு வருகை தந்ததாகவும், அவர்கள் இந்தியாவின் சுற்றுலாத் தூதர்களாகத் திரும்பி சென்றுள்ளதாகவும் கூறிய அவர்,   இந்த தூதர் பதவிக்கான விதை அடிமட்ட நிர்வாகிகளின் நல்ல பணியால் விதைக்கப்பட்டது என்றார். சுற்றுலாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார்.

இந்த கலந்துரையாடலில் ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த சுமார் 3000 பேர் பங்கேற்றனர். உச்சிமாநாட்டை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக அடிமட்டத்தில் பணியாற்றியவர்கள், கிளீனர்கள், ஓட்டுநர்கள், பணியாளர்கள்,  மற்றும் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த பிற ஊழியர்கள் உள்ளிட்டோர் இதில் அடங்குவர். இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Teachers: The artists of education

Media Coverage

Teachers: The artists of education
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 7, 2026
September 07, 2026

Vasudhaiva Kutumbakam in Action: Tech Hub, Border Villages, Global Leadership by PM Modi