மகாராஷ்டிராவின் பால்கரில் ஒரு குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்து, பலர் பாதிக்கப்பட்டு, ஏராளமானோர் காயமடைந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
"மகாராஷ்டிராவின் பால்கரில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து குறித்து மிகவும் வருத்தமடைந்தேன். இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்: பிரதமர் @narendramodi"
Deeply saddened by the mishap due to the collapse of a building in Palghar, Maharashtra. My thoughts are with the affected people and their families in this difficult hour. Praying for the speedy recovery of the injured. Authorities are providing all possible assistance to those…
— PMO India (@PMOIndia) August 28, 2025


