2025 ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டு 48 பதக்கங்களை வென்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தள பதிவில்,“2025 ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நமது இளம் விளையாட்டு வீரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டு 48 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர். குழுவினருக்கு வாழ்த்துகள். அவர்களின் ஆர்வம், உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு அவர்களது வெற்றியில் தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
Our young athletes have scripted history at the Asian Youth Games 2025 with their best-ever performance, winning an impressive 48 medals. Congrats to the contingent. Their passion, determination and hardwork are clearly visible. My best wishes for their future endeavours. pic.twitter.com/OWWW7F8O1M
— Narendra Modi (@narendramodi) November 2, 2025


