பிரதமர் திரு நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சனே தக்காய்சியுடன் உரையாடினார். பிரதமராக பொறுப்பேற்றுள்ள தக்காய்சிக்கு அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன்மிக்க தொழிலாளர்களின் இடம்பெயர்வு ஆகியவை குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டு இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியா-ஜப்பான் இடையேயான வலிமையான உறவுகள் உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழுமைக்கு முக்கியமானது என்று இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஜப்பான் பிரதமர் சனே தக்காய்சியுடன் உரையாடினேன், பிரதமராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன்.
பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன்மிக்க தொழிலாளர்களின் இடம்பெயர்வு ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டு, இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை குறித்து விவாதித்தோம்.
இந்தியா-ஜப்பான் இடையேயான வலிமையான உறவுகள் உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழுமைக்கு முக்கியமானது என்று நாங்கள் ஒப்புகொண்டோம்.
Had a warm conversation with Sanae Takaichi, Prime Minister of Japan. Congratulated her on assuming office and discussed our shared vision for advancing the India-Japan Special Strategic and Global Partnership, with focus on economic security, defence cooperation and talent…
— Narendra Modi (@narendramodi) October 29, 2025


