உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.07.2025) இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹ 50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000-ம் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi)”
Deeply saddened by the loss of lives in an accident in Sambhal, Uttar Pradesh. Condolences to those who have lost their loved ones in the mishap. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) July 5, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured…


