திரு டி. ஞானசுந்தரத்தின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கு திரு டி. ஞானசுந்தரம் ஆற்றிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். தனது எழுத்துக்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன், அவர் சமூகத்தின் கலாச்சார உணர்வை வளப்படுத்தினார் என்றும்,  அவரது படைப்புகள் தலைமுறை தலைமுறையாக வாசகர்கள் மற்றும் அறிஞர்களை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

ஜனவரி 2024 இல் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்றபோது அவருடன் உரையாடியதை நினைவு கூர்ந்த பிரதமர், கம்ப ராமாயணம் குறித்த அவரது புரிதல் விதிவிலக்கானது என்று தெரிவித்தார்.

 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன், அவரது ஆன்மா சாந்தியடையவும் தாம் பிரார்த்திப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

 

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், திரு மோடி கூறியதாவது:

 

“திரு டி. ஞானசுந்தரம் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழ் கலாச்சாரத்திற்கும், இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது எழுத்துக்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் காட்டிய அர்ப்பணிப்பு மூலம், அவர் சமூகத்தின் கலாச்சார உணர்வை வளப்படுத்தினார். அவரது படைப்புகள் தலைமுறை தலைமுறையாக வாசகர்கள் மற்றும் அறிஞர்களை ஊக்குவிக்கும்.

 

ஜனவரி 2024 இல் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்கு நான் சென்றபோது அவருடன் உரையாடியதை நான் நினைவு கூர்கிறேன். கம்ப ராமாயணம் பற்றிய அவரது புரிதல் தனிச்சிறப்பு வாய்ந்தது.

 

அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From conflict to progress: Remote Irpanar village in Chhattisgarh gets electricity

Media Coverage

From conflict to progress: Remote Irpanar village in Chhattisgarh gets electricity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 27, 2026
April 27, 2026

Sabka Saath, Sabka Vikas 2.0: PM Modi Delivers Self-Reliance, Global Trade & National Pride