சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் மற்றும் க்ளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் டாங்கிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் - க்ளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் டாங்கிக்கு வாழ்த்துகள். அவரது அசாதாரண திறமையும் அர்ப்பணிப்பும் நமது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன. இந்த வெற்றியால் இந்தியா மகிழ்ச்சியடைகிறது."
Well done Sandeep Dangi for securing the Bronze Medal in Table Tennis Men's Singles - Class 1 event. His exceptional skill and dedication have brought honor to our nation. India rejoices in this success. pic.twitter.com/UDb7iaL3AT
— Narendra Modi (@narendramodi) October 25, 2023



