மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லால் நினைவு தபால்தலை வெளியீடு
"சித்ரகூட் வந்தது எனக்கு அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது"
"மகான்களின் பணியால் சித்ரகூட்டின் மகிமையும் முக்கியத்துவமும் என்றென்றும் நிலைத்திருக்கும்"
"நமது தேசம் பல மகான்களின் பூமியாகும். அவர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களை கடந்து, பெரிய நன்மைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்கள்"
"ஒருவரின் வெற்றி அல்லது செல்வத்தைப் பாதுகாக்க தியாகம் மிகவும் பயனுள்ள வழியாகும்"
"அரவிந்த் பாயின் பணி மற்றும் ஆளுமையை நான் அறிந்தபோது, நான் ஒரு உணர்ச்சிபூர்வமான இணைப்பை ஏற்படுத்திக் கொண்டேன்"
"இன்று, நாடு பழங்குடி சமூகங்களின் மேம்பாட்டிற்கு முழுமையான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது"

மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட்டில் இன்று (27.10.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளை 1968 ஆம் ஆண்டில் பரம் பூஜ்ய ரஞ்சோதாஸ்ஜி மகராஜ் என்பவரால் நிறுவப்பட்டது. ஸ்ரீ அரவிந்த் பாய் மஃபத்லால் பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜால் ஈர்க்கப்பட்டு அறக்கட்டளையை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர்களில் ஒருவராக திகழ்ந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லால், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சித்ரகூட் என்ற தெய்வீக பூமியை ராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணன் ஆகியோரின் வசிப்பிடமாக புனிதர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று கூறினார். சிறிது நேரத்திற்கு முன்பு தாம், ஸ்ரீ ரகுபீர் கோயில் மற்றும் ஸ்ரீ ராம் ஜானகி கோவிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்ததை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஹெலிகாப்டர் மூலம் சித்ரகூட் செல்லும் வழியில் காமத்கிரி பர்வதத்திற்கு மரியாதை செலுத்தியது குறித்தும், பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறித்தும் அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமர் மற்றும் ஜானகி தரிசனம், துறவிகளின் வழிகாட்டுதல் மற்றும் ஸ்ரீ ராம் சமஸ்கிருத மகாவித்யாலயாவின் மாணவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறன் ஆகியவை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். மறைந்த ஸ்ரீ அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை அனைத்து ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழைகளின் சார்பாக ஏற்பாடு செய்த ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளைக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஜங்கிகுண்ட் சிகித்சாலயாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட பிரிவு, லட்சக்கணக்கான ஏழைகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கும் என்றும், ஏழைகளுக்கு சேவை செய்யும் பணி வரும் காலங்களில் அதிக உயரங்களை எட்டும் என்றும் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். மறைந்த அரவிந்த் பாய் மஃபத்லாலின் நினைவாக தபால்தலையை வெளியிடுவது மிகுந்த மனநிறைவையும் பெருமையையும் அளிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

அரவிந்த் மஃபத்லாலின் பணிகளை குடும்பத்தினர் முன்னெடுத்துச் செல்வதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். பல்வேறு விருப்பங்கள் இருந்தபோதிலும், நூற்றாண்டு விழா நடைபெறும் இடமாக சித்ரகூட் தேர்வு செய்யப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார்.

 

மகான்களின் பணியால் நித்தியமாக்கப்பட்ட சித்ரகூட்டின் மகிமையையும் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது உத்வேகத்தை நினைவுகூர்ந்தார். பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜின் பயணத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு சமூக சேவையின் உன்னதமான தன்மையைப் பற்றி அவர் கூறிய கருத்துக்களை பிரதமர் எடுத்துரைத்தார். பரம் பூஜ்ய ரஞ்சோதாடஜி மகராஜ் பல நிறுவனங்களை நிறுவியதாகவும் அவை இன்னும் மனிதகுலத்திற்கு சேவை செய்கின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இயற்கை சீற்றத்தின் போது பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜின் பணிகளும் முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார். நமது தேசத்தின் குணம், தன்னைத் தாண்டி உலகளாவிய நிலைக்குச் செல்லும் மகான்களை ஈன்றெடுக்கிறது என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

 

பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜின் வழிகாட்டுதலில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அரவிந்த் மஃபத்லாலின் வாழ்க்கையை புனிதர்களின் சகவாசத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக திரு நரேந்திர மோடி மேற்கோள் காட்டினார். இந்தச் சந்தர்ப்பத்தில் அரவிந்த் பாயின் உத்வேகங்களை நாம் உள்வாங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். அரவிந்த் பாயின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையை நினைவு கூர்ந்த பிரதமர், நாட்டின் முதல் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை நிறுவியவர் அவர் தான் என்று கூறினார். தொழில் மற்றும் விவசாயத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். பாரம்பரிய ஜவுளித் தொழிலின் பெருமையை மீட்டெடுப்பதில் மறைந்த மஃபத்லால் முக்கிய பங்கு வகித்தார் எனவும் அவரது பங்களிப்புகளுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

ஒருவரின் வெற்றி அல்லது செல்வ வளத்தைப் பாதுகாக்க தியாகம் மிகவும் பயனுள்ள வழியாகும் என்று கூறிய பிரதமர், அரவிந்த் பாய் மஃபத்லால் அதை ஒரு பணியாக மாற்றி தமது வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார் என்று கூறினார். ஸ்ரீ சத்குரு சேவா அறக்கட்டளை, மஃபத்லால் அறக்கட்டளை, ரகுபீர் மந்திர் அறக்கட்டளை, ஸ்ரீ ராம்தாஸ் ஹனுமான் ஜி அறக்கட்டளை, ஜே.ஜே குழும மருத்துவமனைகள், பார்வையற்றோர் சங்கம் போன்ற பல நிறுவனங்கள், சாரு தாரா ஆரோக்கிய மண்டல் போன்ற பல நிறுவனங்கள் ஒரே கொள்கையுடன் செயல்படுகின்றன  என்றும் சேவையை  அவை முன்வைக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார். ஸ்ரீ ரகுபீர் மந்திர் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்குவதுடன் லட்சக்கணக்கான துறவிகளுக்கு மாதாந்திர உணவு தானியங்களுக்கு ஏற்பாடு செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் குருகுலத்தின் பங்களிப்புகள் குறித்தும், ஜானகி மருத்துவமனையில் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் அவர் பேசினார். அயராது உழைக்க ஆற்றலை வழங்கும் இந்தியாவின் சக்திக்கு இது சான்று என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். கிராமப்புற தொழில் துறையில் பெண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

 

சத்குரு நேத்ரா சிகித்சாலயா இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிறந்த கண் மருத்துவமனைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 12 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதை அவர் எடுத்துரைத்தார். இந்த அமைப்பு காசியில் நடத்தி வரும் ஸ்வஸ்த திருஷ்டி சம்ருத் காசி இயக்கம் குறித்து பேசிய பிரதமர், வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அறுவை சிகிச்சைகள் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் போன்றவற்றை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பரிசோதித்ததாகத் தெரிவித்தார். சிகிச்சை பெற்ற அனைவர் சார்பிலும் சத்குரு கண் மருத்துவமனைக்கு திரு  நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

 

சேவைக்கு வளங்கள் முக்கியம் என்றாலும், அர்ப்பணிப்பு மிக முக்கியமானது என்று பிரதமர் கூறினார். அரவிந்தின் களப்பணியின் தரத்தை நினைவு கூர்ந்த அவர், பிலோடா மற்றும் தாஹோத் ஆகிய பழங்குடி பகுதிகளுக்காக அவர் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டார். சேவை மனப்பான்மை மற்றும் பணிவு ஆகியவற்றையும் திரு நரேந்திர மோடி விவரித்தார். அவரது பணி மற்றும் ஆளுமையை அறிந்தபோது, அவரது பணிக்காக உணர்ச்சிபூர்வமான இணைப்பை ஏற்டுத்திக்கொண்டதாக  அவர் கூறினார்.

 

சித்ரகூட், நானாஜி தேஷ்முக் பணியாற்றிய இடம் என்றும், பழங்குடி சமூகத்திற்கு சேவை செய்வதில் அவரது முயற்சிகள் அனைவருக்கும் சிறந்த உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் கூறினார். அந்த லட்சியங்களைப் பின்பற்றுவதன் மூலம் பழங்குடி சமூகத்தின் நலனுக்காக நாடு விரிவான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய பிரதமர், பிர்சா முண்டாவின் பிறந்த நாளில் பழங்குடியின கௌரவ தினம்  கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்டார். பழங்குடி சமூகத்தின் பங்களிப்பு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றுவதற்காக பழங்குடியின  அருங்காட்சியகங்களின் வளர்ச்சி, பழங்குடியின குழந்தைகளின் கல்விக்கான ஏகலவ்யா உறைவிடப் பள்ளிகள் மற்றும் வன சம்பதா சட்டம் போன்ற கொள்கை முடிவுகள் குறித்தும் அவர் பேசினார். பழங்குடியின சமூகத்தினரை அரவணைக்கும் பகவான் ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதங்களும் எங்களின் இந்த முயற்சிகளுடன் தொடர்புடையவை என்று அவர் தெரிவித்தார். இந்த ஆசீர்வாதம் ஒரு இணக்கமான மற்றும் வளர்ந்த இந்தியாவின் இலக்கை நோக்கி நம்மை வழிநடத்தும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

 

மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு  சிவராஜ் சிங் சவுகான், ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளையின் தலைவர் திரு விஷாத் பி மஃபத்லால் மற்றும் ஸ்ரீ ரகுபீர் மந்திர் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு ரூபால் மஃபத்லால் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

Click here to read full text speech

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
'Operation Sindoor on, if they fire, we fire': India's big message to Pakistan

Media Coverage

'Operation Sindoor on, if they fire, we fire': India's big message to Pakistan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi's address to the nation
May 12, 2025
Today, every terrorist knows the consequences of wiping Sindoor from the foreheads of our sisters and daughters: PM
Operation Sindoor is an unwavering pledge for justice: PM
Terrorists dared to wipe the Sindoor from the foreheads of our sisters; that's why India destroyed the very headquarters of terror: PM
Pakistan had prepared to strike at our borders,but India hit them right at their core: PM
Operation Sindoor has redefined the fight against terror, setting a new benchmark, a new normal: PM
This is not an era of war, but it is not an era of terrorism either: PM
Zero tolerance against terrorism is the guarantee of a better world: PM
Any talks with Pakistan will focus on terrorism and PoK: PM

நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் திறனையும் அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம்.

நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும் நமது உளவுத்துறையினருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.

நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ஆப்ரேஷன் சிந்தூரின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நான் அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும், பராக்கிரமத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு அன்னைக்கும், ஒவ்வொரு சகோதரிக்கும் மற்றும் ஒவ்வொரு மகளுக்கும் இந்த பராக்கிரமத்தை சமர்ப்பிக்கிறேன்.

நண்பர்களே, ஏப்ரல் 22ம் தேதி பகல்காமில் தீவிரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்கவந்த குற்றமற்ற அப்பாவி குடிமகன்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு,,,, அவர்களது குடும்பத்திற்கு முன்னே,,,, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர்.

இது தீவிரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும்

ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும்

ஒரே குரலில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின.

நாங்கள் தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி கொடுத்தோம்

இன்று ஒவ்வொரு தீவிரவாதியும், தீவிரவாதத்தினால் ஏற்படும் தொல்லையை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

அதாவது, நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிப்பதற்கான அந்த செயலின் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.

நண்பர்களே,

ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு ‍பெயர் மட்டுமல்ல

இந்த நாட்டின் கோடி கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு

ஆப்ரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு உறுதிமொழி

மே 6 ம் தேதி இரவு, மே 7 ம் தேதி காலை இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதை கண்டார்கள்.

இந்தியாவின் ராணுவம், பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது

அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீது சரியாக தாக்குதல் நடத்தினார்கள்

தீவிரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, பாரதம் இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள்

ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டது

அடிப்படையான முடிவு எடுக்கும்போது, அது சரியான முடிவுகளை கொண்டுவந்து தருகிறது

பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது பாரதம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியபோது,

பாரதம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாதக் குழுக்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவற்றின் நம்பிக்கையும் தவிடுபெடியானது.

பகவல்பூர் மற்றும் முரிதுகே போன்ற தீவிரவாதிகளின் வாழ்விடங்கள், உலக தீவிரவாதிகளின் பல்கலைக்கழகமாக விளங்கியது

உலகில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் எங்கேயாவது நடந்தால்,

செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும்

லண்டன் பாதாள ரயில் தாக்குதலாக இருக்கட்டும் அல்லது பாரதத்தில் பல ஆண்டுகளாக நடந்த பெரிய பெரிய தீவிரவாத தாக்குதலாக இருக்கட்டும்

இவற்றின் தொடர்பு எப்படியாவது இந்த தீவிரவாத முகாம்களோடு இணைந்திருந்தது

தீவிரவாதிகள் நமது சசோதரிகளின் நெற்றி குங்குமத்தை அழித்தனர். இதனால் பாரதம் தீவிரவாதத்தின் தலைமை பீடத்தை இப்போது அழித்திருக்கிறது.

பாரதத்தின் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான கொடுமையான தீவிரவாதிகள் இறந்திருக்கிறார்கள்.

தீவிரவாதத்தின் பல கிளைகள்

கடந்த 25-30 ஆண்டுகளாக வெளிப்படையாக பாகிஸ்தானில் உலாவி வருகிறார்கள்.

இவர்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தார்கள்.

அவர்களை பாரதம் ஒரே அடியில் அழித்து விட்டது.

நண்பர்களே,

பாரதத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மிகப்பெரிய நிராசையில் வீழ்ந்து விட்டது.

தோல்வி மனப்பான்மையில் வீழ்ந்து விட்டது.

நிலைகுலைந்து போய் விட்டது.

இந்த நிலைகுலைவின் காரணமாக பாகிஸ்தான் மற்றுமொரு அசட்டுத்தனமான நடவடிக்கை எடுத்தது.

தீவிரவாதத்தின் மீது பாரதத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறியாகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் நம்முடைய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை பாரதத்தின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது.

இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன.

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்த தயாராக இருந்தது.

ஆனால், பாரதம் பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது.

பாரதத்தின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சரியாக தாக்குதல் நடத்தின.

பாகிஸ்தானின் விமானப்படையின் ஏர் பஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம்.

இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது

பாரதம் முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

எனவே,

பாரதத்தின் தாக்குதல் செயல்பாடுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேட தொடங்கியது

பாகிஸ்தான் உலகம் முழுவதிலும் இந்த தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்யுங்கள் என வேண்டியது.

மேலும், முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10 ம் தேதி மதியத்திற்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத்தளபதி நம்முடைய ராணுவத்தளபதியோடு தொடர்பு கொண்டார்.

அதுவரை நாம் தீவிரவாத கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் அழித்து விட்டோம்.

தீவிரவாதிகளை சாவின் எல்லைக்கு கொண்டு சென்றோம்.

பாகிஸ்தான் தன் நெஞ்சத்தில் மறைத்து வைத்திருந்த தீவிரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம்.

இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து இது சொல்லப்பட்டபோது,

அதாவது, அவர்களது தரப்பிலிருந்து தீவிரவாத தாக்குதலோ, அல்லது ராணுவத்தின் மூலம் அசட்டுத்தனமான தாக்குதல்களோ இனிமேல் இருக்காது என்று சொன்னபோது,

உடனே, பாரதம் அதை பற்றி யோசனை செய்தது.

நான் மீண்டும் சொல்கிறேன்.

பாகிஸ்தானின் தீவிரவாத ராணுவ முகாம்கள் மீது எங்களுடைய பதிலடி நடவடிக்கைகள் இப்போது சிறிதுகாலத்திற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது.

வருகிற நாட்களில்

பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம்.

அது எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை பார்ப்போம்.

நண்பர்களே,

பாரத்தின் மூன்று படைகளும், நம்முடைய விமானப்படை, நம்முடைய தரைப்படை, கடற்படை, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப்படை, பாரதத்தின் துணை ராணுவப்படை அனைத்தும் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன

சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதலுக்கு பிறகு இப்போது ஆப்ரேஷன் சிந்தூர் பாரதத்தின் வழிமுறையாகி விட்டது.

ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய கோட்டை கிழித்துள்ளது.

ஒரு புதிய அளவுகோல், ஒரு புதிய தரக்கட்டுப்பாடு உருவாகி இருக்கிறது.

முதலில், பாரதத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்.

நாங்கள் எங்களுடைய வழிமுறையில், எங்களுடைய விதிமுறைகளுக்கேற்ப, பதிலடி தருவோம்.

தீவிரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

இரண்டாவதாக, பாரதம் அணுஆயுத தாக்குதல் என்ற மிரட்டலையெல்லாம் பொருத்துக்கொள்ளாது.

அணுஆயுத தாக்குதல் என்கின்ற மிரட்டலோடு செயல்படுகின்ற தீவிரவாத முகாம்கள் மீது பாரதம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்

மூன்றாவதாக, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு மற்றும் தீவிரவாத குழுக்கள் இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், உலகம் பாகிஸ்தானின் உண்மையான ரூபம் என்ன என்று பார்த்திருக்கிறது.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது,

பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர்.

ஒரு நாட்டால் ஆதரிக்கப்படும் தீவிரவாதத்திற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன இருக்கிறது.

நாங்கள் பாரதம் மற்றும் எங்களுடைய குடிமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவண்ணம் திடமான முடிவுகளை எடுப்போம்.

நண்பர்களே, யுத்த பூமியில் நாங்கள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இருக்கிறோம்.

மேலும், இந்த முறை ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புதிய கோணத்தை சேர்த்திருக்கிறது.

நாங்கள் பாலைவனங்கள், மலைகள் மீது எங்களுடைய திறமையை மிக பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம்.

மேலும்,

நியு ஏஜ் வார் பேரில் எங்களது திறமையை காண்பித்திருக்கிறோம்.

இந்த ஆப்ரேஷன் மூலமாக

நம்முடைய இந்தியாவிலேயே தயாரிப்போம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் திறமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது

21 ம் நூற்றாண்டின் போர் முறைகளில் இந்தியாவின் போர்க்கருவிகள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது

நண்பர்களே

இந்த மாதிரியான தீவிரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்

நம்முடைய ஒற்றுமை, நம்முடைய மிகப்பெரிய சக்தியாகும்

உண்மையில் இந்த யுகம், போருக்கானது அல்ல, ஆனால் இந்த யுகம் தீவிரவாதத்திற்கானதும் அல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான Zero Tolerance, ஒரு நல்ல உலகத்திற்கு உறுதி அளிக்கிறது

நண்பர்களே

பாகிஸ்தானின் ராணுவம், பாகிஸ்தானின் ஆட்சி எந்த வகையில் தீவிரவாதத்திற்கு துணைபோகின்றதோ அது ஒருநாள் பாகிஸ்தானை முடிவுக்கு கொண்டுவரும்

பாகிஸ்தான் தப்பிக்கவேண்டும் என்றால், தம் நாட்டில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளை சுத்தப்படுத்தவேண்டும்

இதைதவிர, அமைதிக்கு வேறு வழியே இல்லை

பாரதத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது

தீவிரவாதமும் அமைதிப் பேச்சுவார்த்தையும் ஒருங்கே செல்லவியலாது

தீவிரவாதமும், வாணிகமும் ஒருங்கே செல்லவியலாது

மேலும், தண்ணீரும், ரத்தமும் ஒரேசேர பாய முடியாது

நான் இன்று உலக சமுதாயத்திற்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

எங்களுடைய அறிவிக்கப்பட்ட நீதி என்னவென்றால்,

பாகிஸ்தானுடன் ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால் அது தீவிரவாதம் பற்றிதான் இருக்கும்

ஒருவேளை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்ற காஷ்மீரை பற்றியதாக இருக்கும்

அன்புக்குரிய நாட்டுமக்களே

இன்று புத்த பூர்ணிமா

பகவான் புத்தர் நமக்கு அமைதியின் பாதையை காட்டியிருக்கிறார்

அமைதியின் பாதை பலத்தோடுதான் செல்கிறது

மனிதகுலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் நடக்கவேண்டும்

ஒவ்வொரு பாரதவாசியும் அமைதியோடு வாழ வேண்டும்

வளர்ச்சியடைந்த பாரதம் என்கின்ற நம்முடைய கனவு நிறைவேறவேண்டும்

இதற்காக பாரதம் சக்திசாலி நாடாக இருக்கவேண்டியது அவசியம்

மேலும் ‍தேவை ஏற்படும்போது இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும்

மேலும் கடந்த சில நாட்களில் பாரதம் இதைதான் செய்திருக்கிறது

நான் மீண்டும் ஒருமுறை பாரதத்தின் ராணுவம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன்

இந்த பாரத குடிமக்களின் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் வணக்கம் செலுத்துகிறேன்

நன்றி

பாரத் மாதாகி ஜெய்

பாரத் மாதாகி ஜெய்

பாரத் மாதாகி ஜெய்