பிரதமர் ஸ்டார்மர் அவர்களே,
நண்பர்களே,
வணக்கம்!
முதலில், பிரதமர் ஸ்டார்மரின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பல வருட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த ஒப்பந்தம் வெறும் பொருளாதாரக் கூட்டாண்மை மட்டுமல்ல; இது பகிரப்பட்ட முன்னேற்றத்துக்கான ஒரு வரைபடமாகும். ஒருபுறம், இது இந்திய ஜவுளி, காலணிகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், கடல் உணவு மற்றும் பொறியியல் பொருட்களுக்கு இங்கிலாந்தில் மேம்பட்ட சந்தை அணுகலுக்கு வழி வகுக்கிறது. இது இந்தியாவின் விவசாய விளைபொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் தொழிலுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் எம்எஸ்எம்இ துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மறுபுறம், மருத்துவ சாதனங்கள் மற்றும் விண்வெளி கூறுகள் போன்ற இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இந்திய நுகர்வோர் மற்றும் தொழில்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் கிடைக்கும்.
வர்த்தக ஒப்பந்தத்தைத் தவிர, இரட்டை பங்களிப்பு மாநாட்டிலும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இது இரு நாடுகளின் சேவைத் துறைகளிலும், குறிப்பாகத் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையிலும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். இது வணிகம் செய்வதை எளிதாக்கும், செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கும் மற்றும் வணிகம் செய்வதில் நம்பிக்கையை அதிகரிக்கும். கூடுதலாக, திறமையான இந்திய திறமையாளர்களை அணுகுவதன் மூலம் இங்கிலாந்து பொருளாதாரம் பயனடையும்.
இந்த ஒப்பந்தங்கள் இருதரப்பு முதலீட்டை அதிகரிக்கும் மற்றும் இரு நாடுகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், இரு சிறந்த ஜனநாயக நாடுகளுக்கும் முக்கிய உலகளாவிய பொருளாதாரங்களுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தங்கள், உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை வலுப்படுத்தவும் பங்களிக்கும்.

நண்பர்களே,
அடுத்த தசாப்தத்தில் நமது விரிவான கூட்டாண்மையில் புதிய உத்வேகத்தையும் ஆற்றலையும் செலுத்த, விஷன் 2035 தொடங்கப்படுகிறது. இது தொழில்நுட்பம், பாதுகாப்பு, பருவநிலை, கல்வி மற்றும் மக்களுடன் மக்கள் இணைப்பு ஆகிய துறைகளில் வலுவான, நம்பகமான மற்றும் லட்சிய கூட்டாண்மைக்கான ஒரு வழிகாட்டியாக செயல்படும்.
பாதுகாப்பு மற்றும் தற்காப்பில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு பாதுகாப்பு தொழில் வழித்தடம் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நமது தொழில்நுட்ப பாதுகாப்பு முயற்சியை மேலும் வலுப்படுத்தவும் நாம் பாடுபடுவோம்.
செயற்கை நுண்ணறிவு முதல் முக்கியமான கனிமங்கள் வரை, குறைக்கடத்திகள் முதல் சைபர் பாதுகாப்பு வரை, நாம் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவோம் என்பது நமது உறுதிப்பாடாகும்.
நண்பர்களே,
கல்வித் துறையிலும், நமது இரு நாடுகளும் இணைந்து ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆறு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்கின்றன. கடந்த வாரம்தான், இந்தியாவின் குருகிராமில் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் அதன் வளாகத்தைத் திறந்தது.
நண்பர்களே,
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்ததற்காக பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அவரது அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை என்ற நமது கருத்தில் நாம் ஒன்றுபட்டுள்ளோம். தீவிரவாத சித்தாந்தங்களைக் கொண்ட சக்திகள் ஜனநாயக சுதந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம்.
ஜனநாயகத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்த ஜனநாயக சுதந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் பொறுப்பேற்கப்பட வேண்டும்.
பொருளாதாரக் குற்றவாளிகளை நாடு கடத்தும் விஷயத்திலும், நமது நிறுவனங்கள் கூட்டு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

நண்பர்களே,
இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, உக்ரைனில் நடந்து வரும் மோதல் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்த நமது முன்னோக்குகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொண்டுள்ளோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை அவசியம். இன்றைய சகாப்தம் வளர்ச்சியைக் கோருகிறது, விரிவாக்கத்தை அல்ல.
நண்பர்களே,
கடந்த மாதம், அகமதாபாத்தில் நடந்த துயர விமான விபத்தில், உயிரிழந்தவர்களில் பலர் இங்கிலாந்தைச் சேர்ந்த எங்கள் சகோதர சகோதரிகள். அவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் எங்கள் உறவில் ஒரு உயிருள்ள பாலமாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் இந்தியாவில் இருந்து, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு மற்றும் குணத்தையும் கொண்டு வந்தனர். அவர்களின் பங்களிப்பு இங்கிலாந்தின் செழிப்பான பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல - இது நாட்டின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொது சேவையிலும் சமமாகக் காணப்படுகிறது.
நண்பர்களே,
இந்தியாவும் இங்கிலாந்தும் ஒன்றாக வரும்போது, குறிப்பாக ஒரு டெஸ்ட் தொடரின் போது கிரிக்கெட்டைப் பற்றி நான் குறிப்பிடாமல் இருக்க மாட்டேன். நம் இருவருக்கும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல, அது ஒரு ஆர்வம். மேலும், நமது கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த உருவகமாகும். சில நேரங்களில் ஒரு ஊசலாட்டம் மற்றும் ஒரு தவறுதல் இருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் நேரான மட்டையுடன் விளையாடுகிறோம். அதிக ஸ்கோரிங் கொண்ட திடமான கூட்டாண்மையை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
எங்கள் தொலைநோக்கு 2035 உடன் இன்று முடிவடைந்த ஒப்பந்தங்கள், இந்த உணர்வை முன்னெடுத்துச் செல்லும் மைல்கற்கள்.
பிரதமர் அவர்களே,
உங்கள் அன்பான விருந்தோம்பலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். இந்தியாவுக்கு வருகை தருமாறு உங்களை அழைக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். விரைவில் இந்தியாவில் உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி.
सबसे पहले मैं प्रधानमंत्री स्टार्मर के गर्मजोशी भरे स्वागत-सत्कार के लिए, हार्दिक आभार व्यक्त करता हूँ।
— PMO India (@PMOIndia) July 24, 2025
आज हमारे संबंधों में एक एतिहासिक दिन है।
मुझे प्रसन्नता है कि कई वर्षों की मेहनत के बाद, आज दोनों देशों के बीच Comprehensive Economic and Trade Agreement संपन्न हुआ है: PM…
एक ओर, भारतीय टेक्सटाइल्स, फुटवियर, Gems एण्ड ज्वेलरी, Seafood और इंजीनियरिंग Goods को UK में बेहतर Market Access मिलेगा।
— PMO India (@PMOIndia) July 24, 2025
भारत के ऐग्रिकल्चर produce और प्रोसेस्ड फूड industry के लिए UK की मार्किट में नए अवसर बनेंगे: PM @narendramodi
भारत के युवाओं, किसानों, मछुआरों और MSME Sector के लिए यह समझौता विशेष रूप से लाभकारी सिद्ध होगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 24, 2025
वहीं दूसरी ओर, भारत के लोगों और इंडस्ट्री के लिए UK में बने Products - जैसे मेडिकल डिवाइसेज़ और aerospace parts सुलभ और किफायती दरों पर उपलब्ध हो सकेंगे: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 24, 2025
अगले दशक में हमारी comprehensive strategic partnership को नयी गति और ऊर्जा देने के लिए, आज हम Vision 2035 पर भी बात करेंगे।
— PMO India (@PMOIndia) July 24, 2025
यह टेक्नोलॉजी, डिफेंस, क्लाइमेट, एजुकेशन और पीपल-टू-पीपल कनेक्ट के क्षेत्रों में एक मजबूत, भरोसेमंद और महत्वाकांक्षी साझेदारी का रोडमैप होगा: PM…
पहलगाम में हुए आतंकवादी हमले की कठोर निंदा के लिए हम प्रधानमंत्री स्टार्मर और उनकी सरकार का आभार व्यक्त करते हैं ।
— PMO India (@PMOIndia) July 24, 2025
हम एकमत हैं कि आतंकवाद के खिलाफ लड़ाई में दोहरे मापदंडों का कोई स्थान नहीं है।
हम इस बात पर भी सहमत हैं, कि Extremist विचारधारा वाली शक्तियों को Democratic…
Those who misuse democratic freedoms to undermine democracy itself, must be held to account: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 24, 2025
इंडो-पैसिफिक में शांति और स्थिरता, यूक्रेन में चल रहे संघर्ष और पश्चिम एशिया की स्थिति पर हम विचार साझा करते रहे हैं।
— PMO India (@PMOIndia) July 24, 2025
सभी देशों की संप्रभुता और क्षेत्रीय अखंडता का सम्मान अनिवार्य है।
आज के युग की मांग, विस्तारवाद नहीं, विकासवाद है: PM @narendramodi
पिछले महीने, अहमदाबाद में हवाई दुर्घटना में मारे गए लोगों में कई UK के नागरिक भी थे। उनके परिवार वालों के प्रति हम संवेदनाएं प्रकट करते हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 24, 2025
For both of us, Cricket is not just a game, but a passion.
— PMO India (@PMOIndia) July 24, 2025
And also, a great metaphor for our partnership.
There may be a swing and a miss at times, but we always play with a straight bat!
We are committed to building a high scoring solid partnership: PM @narendramodi


