PM to attend Annual DGP Conference at BSF Academy in Tekanpur

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தேகன்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை அகாடெமியில் ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் டிஜிபி-க்கள் மற்றும் ஐஜி-க்களின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.

டிஜிபி-க்கள் மாநாடு ஆண்டுக்கொருமுறை நடத்தப்படுகிறது. இதில், நாடு முழுவதையும் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். இதற்கு முன்னதாக, கடந்த 2014-ம் ஆண்டில் அசாமின் குவஹாத்தியிலும், 2015-ம் ஆண்டில் குஜராத்தின் கட்ச்சில் உள்ள பாலைவனப் பகுதியான தோர்டோ-விலும், 2016-ம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடெமியிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தின்போது, எல்லைதாண்டிய தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தலைமைப் பண்பு, தகவல் தொடர்புத் திறன், ஒருங்கிணைந்த பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். குறிப்பாக, காவல் படையில் தொழில்நுட்பம் மற்றும் மனித தொடர்புக்கான கருவி (human interface) ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

 

இதுபோன்ற கருத்தரங்குகளை தில்லியில் மட்டும் நடத்தாமல், நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம். அதனடிப்படையிலேயே தேசிய தலைநகருக்கு வெளியே வருடாந்திர டிஜிபி-க்கள் மாநாடு நடத்தப்படுகிறது.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India among top nations in quantum technology, says science minister Jitendra Singh

Media Coverage

India among top nations in quantum technology, says science minister Jitendra Singh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi shares a Sanskrit Subhashitam highlighting the eight essential qualities that enhance a person’s life and character
August 11, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the eight essential qualities that brighten a person's life and build character.

The Prime Minister wrote on X;

"अष्टौ गुणाः पुरुषं दीपयन्ति प्रज्ञा सुशीलत्वदमौ श्रुतं च।
पराक्रमश्च बहुभाषिता च दानं यथाशक्ति कृतज्ञता च।।"

These eight qualities brighten a person's life. Wisdom shows him the right path. Good conduct keeps his character pure, and self-control keeps him disciplined. Knowledge gives him understanding, courage helps him stand firm in difficult situations, and skillful speech earns him respect in society. Giving according to one's ability and being grateful for kindness make a person complete.