1896-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் மாதாந்திர சஞ்சிகையான 'பிரபுத்த பாரதா'-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் 31 ஜனவரி அன்று பிற்பகல் 3.15 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார். மாயாவதியில் உள்ள அத்வைத ஆசிரமத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

'பிரபுத்த பாரதா' பற்றி…..

இந்தியாவின் பண்டைய ஆன்மிக ஞானம் குறித்த செய்திகளை பரப்புவதற்கான முக்கிய ஊடகமாக 'பிரபுத்த பாரதா' திகழ்கிறது. சென்னையில் தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை, இரண்டு வருடங்கள் கழித்து ஆல்மோராவில் இருந்து வெளியிடப்பட்டது. 1989 ஏப்ரலில் இருந்து அத்வைத ஆசிரமத்தில் இருந்து வெளியாகி வருகிறது.

இந்திய கலாச்சாரம், ஆன்மிகம், தத்துவம், வரலாறு, உளவியல், கலை மற்றும் இதர சமூக விஷயங்கள் குறித்து பல்வேறு தலைசிறந்த நபர்கள் 'பிரபுத்த பாரதா'-வில் எழுதி தங்களது முத்திரையை பதித்துள்ளார்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பால கங்காதர திலகர், சகோதரி நிவேதிதா, குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் 'பிரபுத்த பாரதா'-வுக்கு பங்களித்துள்ளனர்.

ஒட்டுமொத்த 'பிரபுத்த பாரதா' இதழ்களையும் தனது இணையதளத்தில் வெளியிட அத்வைத ஆசிரமம் பணியாற்றி வருகிறது.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 5, 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions