பகிர்ந்து
 
Comments

நாட்டு மக்களுடன் உரையாற்றிய சற்று நேரத்தில், மிஷன் சக்தித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாடினார்.

மிஷன் சக்தித் திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகனை வாயிலாக, எதிரிகளின் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் திறனைப் பெற்ற உலகின் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்காக விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர், தாங்கள் திட்டமிட்டதை வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனைப் படைத்த விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த நாடே பெருமிதம் அடைவதாக தெரிவித்தார்.

“இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின்படி, இந்தியா எந்தவொரு நாட்டிற்கும் சளைத்தது அல்ல என்பதை நமது விஞ்ஞானிகள் உலகிற்கு பறைசாற்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகம் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தை இந்தியா பின்பற்றி வருவதாகவும் பிரதமர் கூறினார். எனினும், அமைதி மற்றும் நல்லெண்ணத்திற்காக பாடுபட்டு வரும் சக்திகள், எப்போதும் வலிமையானதாக திகழ வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலக அளவிலும், பிராந்திய அளவிலும் அமைதி நிலவ வேண்டுமெனில் இந்தியா திறமை வாய்ந்ததாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய விஞ்ஞானிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியிருப்பதாகவும் அவர் கூறினார். விஞ்ஞானிகளுக்கு ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பு அளித்தமைக்காக, விஞ்ஞானிகள், பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Head-on | Why the India-Middle East-Europe corridor is a geopolitical game-changer

Media Coverage

Head-on | Why the India-Middle East-Europe corridor is a geopolitical game-changer
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM congratulates Eabad Ali for winning Bronze medal in RS:X Men’s event at the Asian Games
September 26, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has hailed the splendid performance of Eabad Ali in Sailing and congratulated him for winning the Bronze medal in RS:X Men’s event at the Asian Games 2022 in Hangzhou.

The Prime Minister posted on X:

“A splendid performance by Eabad Ali in Sailing. He makes us proud by winning a Bronze medal in RS:X Men’s event at the Asian Games.

His accomplishments show that nothing is impossible for our young talents. My best wishes to him.”