2014-க்கு முன்பு 10-12 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் பாதை 200 கி.மீ அளவுக்கு இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 400 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறினார். 27 நகரங்களில் 1000 கி.மீ தூர புதிய ரயில் பாதைகளுக்கு அரசு பணி புரிந்து வருகிறது.
முன்பு ஒருங்கிணைந்த நவீன சிந்தனை இல்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். மெட்ரோவுக்கு என தேசிய கொள்கை இருக்கவில்லை. அதன் விளைவாக, பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கத்துக்கான சீரான தொழில்நுட்பம் மற்றும் முறைகள் இல்லை. நகரத்தின் மற்ற போக்குவரத்துடன் இணைப்பது தொடர்பான சிந்தனையும் இல்லாமல் இருந்தது. போக்குவரத்து முறைகளுக்கு இடையே இணக்கமான அணுகுமுறையும் கிடையாது. இன்று, இந்த நகரங்களில், ஒருங்கிணைந்த முறை உருவாக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரயில் தனியாக இயங்காமல், கூட்டு முறையில் இயங்கி வருகிறது.
அண்மையில் தொடங்கப்பட்ட தேசிய பொது நகர்வு அட்டை மூலம் இந்த ஒருங்கிணைப்பு மேலும் வலுவடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.