பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2024 நவம்பர் 18 அன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் இந்தியா இத்தாலி ராஜாங்க கூட்டாண்மையின் இணையற்ற ஆற்றலுக்கு, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைக்கான கூட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மேலும் உத்வேகம் அளிக்க முடிவு செய்தனர். இந்த நோக்கத்திற்காக, இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.

ஒரு அரசின் தலைவர்கள், வெளிநாட்டலுவல்கள், வர்த்தக மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையில் பல்தரப்பு நிகழ்வுகள் உட்பட வழக்கமான அடிப்படையில் சந்திப்புகள் மற்றும் பரஸ்பர பயணஙகளைப் பேணுதல்,

வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் உட்பட மூத்த அதிகாரிகள் மட்டத்தில் இரு வெளிநாட்டு அமைச்சகங்களுக்கிடையில் வருடாந்திர இருதரப்பு ஆலோசனைகளை தொடர்ந்து நடத்துதல்,

பொதுவான அக்கறையுள்ள அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த மற்ற அமைச்சகங்களின் தலைவர்களிடையே கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இருதரப்பு வர்த்தகம், சந்தை அணுகல் மற்றும் முதலீட்டை, குறிப்பாக போக்குவரத்து, வேளாண் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், ரசாயன மருந்துகள், மரம் மற்றும் மரச்சாமான்கள், முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உணவு பதனப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் குளிர்பதன சங்கிலி, பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் நீடித்த நகர்வு போன்ற துறைகளில் இருதரப்பு வர்த்தகம், சந்தை அணுகல் மற்றும் முதலீட்டை அதிகரிக்க பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையம் மற்றும் உணவு பதப்படுத்துதல் குறித்த இத்தாலி-இந்தியா கூட்டு பணிக்குழுவின் பணிகளை பயன்படுத்துதல். பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க இசைவு தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

கைத்தொழில் மற்றும் பொருளாதார சங்கங்கள், வர்த்தக குழுமங்களின் ஈடுபாட்டுடன் வர்த்தக சந்தைகள் மற்றும் காலத்திற்குரிய வர்த்தக அரங்குகளில் பங்குபற்றுதலை மேம்படுத்துதல்.

வாகனம், குறைகடத்திகள், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் தொழில்துறை கூட்டாண்மை, தொழில்நுட்ப மையங்கள் மற்றும் பரஸ்பர முதலீடுகளை ஊக்குவித்தல்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் பின்னணியில் நீடித்த போக்குவரத்தில் ஒத்துழைப்பை வளர்த்தல்.

இந்தியா-மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEEC) கட்டமைப்புக்கு உட்பட்டு கடல்சார் மற்றும் நில உள்கட்டமைப்பிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல். கடல்சார் மற்றும் துறைமுகத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தல்.

தொலைத்தொடர்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் சேவைகளில் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற துறைகளில் இரு நாடுகளிலும் தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலி கூட்டாண்மைகளை உருவாக்குதல், முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்.

தொழில் துறை 4.0, மேம்பட்ட உற்பத்தி, தூய்மையான எரிசக்தி, முக்கிய கனிமங்கள் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு, கல்வியாளர்கள் மற்றும் இரு நாடுகளின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உள்ளிட்ட தொழில்கள் சம்பந்தப்பட்ட புதிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்தல்.

இத்தாலி மற்றும் இந்தியாவின் தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, பொதுவான அக்கறை உள்ள துறைகளில் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியின் பின்னணியில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை அதிகரித்தல், குறிப்பாக ஸ்டெம் களத்தில், உதவித்தொகைகளில் கவனம் செலுத்துதல், அதே நேரத்தில் முன்னணி அறிவியல் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத் திட்டங்களுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்த்தல்.

இரு நாடுகளின் புதிய தொழில்கள் மற்றும் தொடர்புடைய புதுமை சூழல் அமைப்புகளுக்கு இடையே கலந்துரையாடலை ஊக்குவித்தல். ஃபின்டெக், எஜூடெக், ஹெல்த் கேர், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின், அக்ரிடெக், சிப் வடிவமைப்பு மற்றும் கிரீன் எனர்ஜி ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.

கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அடைகாக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை வளர்ப்பதற்கான கூட்டு நிபுணத்துவம் மற்றும் திறனை மேம்படுத்த இந்திய-இத்தாலிய கண்டுபிடிப்பு மற்றும் அடைகாப்பு பரிமாற்ற திட்டத்தைத் தொடங்குதல்.

ஒத்துழைப்புக்கான புதிய இருதரப்பு வழிமுறைகள் மூலம் வளப்படுத்தக்கூடிய ஒத்துழைப்புக்கான நிர்வாகத் திட்டத்தின் பாரம்பரியத்தை அங்கீகரித்தல்.

2025-27 ஆண்டுகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான நிர்வாகத் திட்டத்தை அமல்படுத்துதல் ஆகியவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயல்படுத்தப்படும், இதன் மூலம் இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அடிப்படையிலான கூட்டுத் திட்டங்களை இணைந்து நிறுவுவார்கள்.

இத்தாலிய விண்வெளி முகமை (ஏ.எஸ்.ஐ) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, சந்திர அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புவி கண்காணிப்பு, சூரிய இயற்பியல் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் பொதுவான ஆர்வமுள்ள திட்டங்களை உள்ளடக்குதல்.

விண்வெளியை அமைதியான முறையிலும், நீடித்த பயன்பாட்டிலும் தத்தமது தொலைநோக்குப் பார்வை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

பெரிய தொழிற்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புதிய தொழில்கள் நிறுவனங்களை ஈடுபடுத்தி பரஸ்பர வர்த்தக வாய்ப்புகள் ஒத்துழைப்பை கண்டறிதல் மற்றும் வசதி செய்தல்.

ஆராய்ச்சி, விண்வெளி ஆய்வு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், விண்வெளித் துறையின் பிரதிநிதிகள் அடங்கிய இத்தாலிய தூதுக்குழு இந்தியாவுக்கு 2025 ஆம் ஆண்டின் மத்தியில் ஒரு பயணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பரஸ்பரம் தொழில் சூழல் அமைப்புகள் பற்றிய அறிவை மேம்படுத்தவும், தொழில்துறை கூட்டாண்மைக்கு வசதி செய்யவும் "தொழில்நுட்ப உச்சிமாநாடுகளை" ஏற்பாடு செய்தல்.

பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிபொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் மேற்கூறிய ஒத்துழைப்பை எளிதாக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கூட்டு பணிக்குழுவுக்கு மேலும் உத்வேகம் அளித்தல்.

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மற்றும் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை வலுப்படுத்த இணைந்து செயல்படுதல்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான புதுமையான கிரிட் மேம்பாட்டு தீர்வுகள் மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

ஆண்டுதோறும் கூட்டுப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்கள், தகவல் பரிமாற்றங்கள், பயணங்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க கூட்டுப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை ஆகியவற்றை முறையாக நடத்துவதை உறுதி செய்தல்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இத்தாலியின் வளர்ந்து வரும் ஆர்வத்தின் கட்டமைப்பிற்கு ஏற்ப அந்தந்த ஆயுதப் படைகளுக்கு இடையேயான கலந்துரையாடல்கள்.  இது பரஸ்பர இயக்கத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கூட்டு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் தளவாடங்களின் கூட்டு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பொது மற்றும் தனியார் பங்குதாரர்களிடையே மேம்பட்ட கூட்டாண்மை மற்றும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை ஆராய்தல்.

கடல்சார் மாசு எதிர்வினை மற்றும் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புத் துறை உள்ளிட்ட கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐடிஎம்) மற்றும் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான இத்தாலிய தொழில் கூட்டமைப்பு (ஏஐஏடி) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்குதல்.

பாதுகாப்பு ஆராய்ச்சியில் இரு தரப்பிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய வழக்கமான கலந்துரையாடல்களை நடத்துதல்.

சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் வழக்கமான பரிமாற்றங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

சைபர் உரையாடல் போன்ற துறை சார்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்துதல், கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் குறித்த புதுப்பிப்புகளை பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் பொருத்தமான நேரங்களில் பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனைகளை நடத்துதல்.

சர்வதேச பயங்கரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு பணிக்குழுவின் வருடாந்திர இருதரப்பு கூட்டங்களை தொடர்ந்து நடத்துதல்.

இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல். இந்த ஒத்துழைப்பின் உணர்வின் அடிப்படையில், இரு தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள்:

நீதித்துறை விவகாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையேயான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தகவல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.

பரஸ்பர பாதுகாப்பு மற்றும் ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தல்.

பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான இடம்பெயர்வு வழிகள், அத்துடன் நியாயமான மற்றும் வெளிப்படையான தொழிலாளர் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல். ஒரு முன்னோடித் திட்டம் இந்தியாவில் சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதையும், அதைத் தொடர்ந்து இத்தாலியில் வேலைவாய்ப்பையும் உள்ளடக்கும்.

முறையற்ற குடியேற்றத்தை எதிர்கொள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

உயர்கல்விக்குப் பொறுப்பான அந்தந்த நிர்வாகங்களுக்கிடையே ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் இடப்பெயர்ச்சியை அதிகரித்தல்.

கலாச்சாரம், கல்வி, திரைப்படம், சுற்றுலா போன்ற மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள்,

இரு நாடுகளினதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை அதிகரித்தல் அதேபோல் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி துறையில் ஒத்துழைப்பு.

அருங்காட்சியகங்களுக்கிடையில் கூட்டாண்மைகளை நிறுவுவதன் மூலம் பரஸ்பர அறிவை ஆழப்படுத்த கண்காட்சிகள் மற்றும் கலாச்சார முயற்சிகளை மேம்படுத்துதல்.

அந்தந்த நாடுகளில் திரைப்பட இணை தயாரிப்புகள் மற்றும் திரைப்படத் தயாரிப்பை அதிகரிக்க பணியாற்றுதல்.

பழைய மற்றும் பாரம்பரிய இடங்கள் மற்றும் கட்டிடங்களை பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

இரு திசைகளிலும் இணைப்புகள் மற்றும் சுற்றுலா ஓட்டங்களை வளர்ப்பது.

இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் மற்றும் நீண்டகால நட்புறவுகளை மேம்படுத்துவதில் துடிப்பான இந்தியா மற்றும் இத்தாலிய சமூகங்களின் பங்களிப்பை அங்கீகரியுங்கள்.

2023 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட கலாச்சார ஒத்துழைப்பை செயல்படுத்துவதற்கான பணிகளை துரிதப்படுத்துதல் ஆகியவை சந்திப்பில் முக்கிய இடம் பிடித்தன.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
On Puri’s Grand Road, a devotee’s submission

Media Coverage

On Puri’s Grand Road, a devotee’s submission
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister speaks with the Amir of Qatar
July 16, 2026
PM conveys heartfelt condolences on the passing of the Father Amir of Qatar
PM recalls the Father Amir’s visionary leadership and his contribution to strengthening India-Qatar relations
The two leaders reaffirm their resolve to carry forward the Father Amir’s legacy

Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with the Amir of the State of Qatar, H.H. Sheikh Tamim bin Hamad Al Thani.

Prime Minister conveyed his heartfelt condolences on the passing of H.H. Sheikh Hamad bin Khalifa Al Thani, the Father Amir of Qatar.

Recalling the Father Amir’s significant contributions as the chief architect of modern Qatar, Prime Minister paid tribute to his visionary leadership, and recalled his pivotal role in strengthening India-Qatar relations over the years as well as his deep affection for India and the Indian community in Qatar.

The Amir of Qatar thanked Prime Minister for his call and conveyed his appreciation for the words of support in this difficult hour.

The two leaders reaffirmed their resolve to carry forward the Father Amir’s legacy and further strengthen the India-Qatar Strategic Partnership and people-to-people ties.

They agreed to remain in close touch.