இந்தியா - சிலி கூட்டறிக்கை

Published By : Admin | April 1, 2025 | 18:11 IST

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சிலி குடியரசின் அதிபர் மேதகு திரு. கேப்ரியல் போரிக் ஃபாண்ட்  இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், 2025 ஏப்ரல் 1 முதல் 5 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் திரு போரிக் அவர்களுடன் வெளியுறவு, விவசாயம், சுரங்கம், பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரிய துறைகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான வர்த்தகத் தலைவர்கள் வந்துள்ளனர். புதுதில்லி தவிர, ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூருவுக்கு அதிபர் திரு  போரிக் செல்கிறார். அதிபர்  இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அதிபர் திரு போரிக் மற்றும் பிரதமர் திரு மோடி இருவரும் 2024 நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த

ஜி20 உச்சிமாநாட்டின் போது முதன்முதலில் சந்தித்தனர்.

பாலம் விமானப்படை நிலையத்திற்கு வந்திறங்கிய அதிபர் திரு போரிக்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2025 ஏப்ரல் 1 அன்று ஹைதராபாத் இல்லத்தில் அதிபர் திரு போரிக்குடன் பிரதமர் திரு மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபருடன் வந்த குழுவினரையும் அவர் சந்தித்து விருந்து அளித்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அதிபர் திரு போரிக்கைச் சந்தித்தார்.

1949-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தூதரக உறவுகள், வளர்ந்து வரும் வர்த்தகத் தொடர்புகள், மக்களுக்கு இடையேயான தொடர்புகள், கலாச்சார உறவுகள், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சூடான மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகள் ஆகியவற்றை அதிபர் திரு போரிக் மற்றும் பிரதமர் திரு மோடி நினைவு கூர்ந்தனர். பரஸ்பர நலன்களுக்கான அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்முக உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம் மற்றும் மருந்துகள்,  பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுரங்கம் மற்றும் கனிம வளங்கள், வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு, பசுமை எரிசக்தி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல், கண்டுபிடிப்பு, பேரிடர் மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு, கல்வி மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுக்கு மேலும் வேகம் அளிக்கும் வகையில் பல்வேறு மட்டங்களில் வழக்கமான பரிமாற்றங்களைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இருதரப்பு உறவுகளில் வர்த்தகம் மற்றும் வணிகம் வலுவான தூணாக உள்ளது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். 2017 மே மாதம் இந்தியா-சிலி முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் விரிவுபடுத்தப்பட்டதன் விளைவாக இருதரப்பு வர்த்தகம் கணிசமாக அதிகரித்துள்ளது குறித்து சுட்டிக்காட்டிய இரு தலைவர்களும், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இருதரப்பு வர்த்தக வழிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். இரு தரப்பிலும் உள்ள வர்த்தக தூதுக்குழுக்களின் வருகைகள் சமீபத்தில் அதிகரித்திருப்பது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத் தொடர்புகளை தீவிரப்படுத்த உதவும் வகையில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கொண்ட வர்த்தகத் தூதுக்குழுவை அழைத்து வந்ததற்காக அதிபர் திரு போரிக்கிற்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர இருவரும் ஒப்புக்கொண்டனர்.

உலகப் பொருளாதாரத்தில் சிலிக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்த அதிபர் திரு போரிக், இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தகத்திற்கான உத்திகளை ஆராய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இரு தலைவர்களும் ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பை அடைவதற்காக சமநிலையான, லட்சியமிக்க, விரிவான, பரஸ்பரம் பயனளிக்கும் ஒப்பந்தமான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டதை வரவேற்றனர். இந்தியா மற்றும் சிலி இடையேயான வர்த்தகம் மற்றும் வர்த்தக உறவுகளின் முழு திறனையும் வெளிக்கொணர்வது, வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை சி.இ.பி.ஏ நோக்கமாகக் கொண்டிருக்கும்.

வர்த்தக உறவுகள் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக, இந்திய தொழிலதிபர்களுக்கு பல நுழைவு அனுமதி வழங்குவதற்கான சிலியின் முடிவை அதிபர் திரு போரிக் அறிவித்தார். இது விசா செயல்முறையை ஒழுங்குபடுத்தும். வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதில் இரு தரப்பினரின் விருப்பத்தையும், சிலி மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கும்.  இந்த நடவடிக்கையைப் பிரதமர் திரு மோடி வரவேற்றார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும், வர்த்தகம், சுற்றுலா, மாணவர்கள் மற்றும் கல்வி பரிமாற்றங்களை எளிதாக்குவதற்கும் மக்களுக்கு இடையேயான இணைப்புகள் ஒரு முக்கிய தூண் என்பதை ஒப்புக் கொண்ட இந்தியா, இந்தியாவுக்கு வரும் சிலி பயணிகளுக்கு மின்னணு விசா வசதியை விரிவுபடுத்துவது உட்பட ஒரு நெகிழ்வான விசா நடைமுறையை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட உற்பத்தி மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றங்கள் ஆகியவற்றில் முக்கிய கனிமங்களின் ராஜதந்திர முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். பரஸ்பர நலனுக்காக ஒட்டுமொத்த முக்கிய கனிம மதிப்பு சங்கிலியிலும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் ஆய்வு, சுரங்கம் மற்றும் செயலாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரைவுபடுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். முக்கியமான கனிமங்கள் மற்றும் மேம்பட்ட பொருட்கள் உள்ளிட்ட நம்பகமான மற்றும் நெகிழ்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். சிலியில் இருந்து இந்தியாவுக்கு கனிமங்கள் மற்றும் பொருட்களை நீண்டகாலமாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, சுரங்கம் மற்றும் கனிமங்களில் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மை மற்றும் புரிதலை வளர்ப்பதன் மூலம் விநியோகச் சங்கிலிகள் மற்றும் உள்ளூர் மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயல்பட இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

சுகாதாரம் மற்றும் மருந்துப் பொருட்கள், விண்வெளி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், விவசாயம், பசுமை எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம், அண்டார்டிகா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இயற்கை பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, புத்தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் ஒலி-ஒளி கூட்டு உற்பத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை உருவாக்குவது குறித்து ஆராய இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

குறைந்த செலவில், உயர்தர பொருட்களை வழங்குவதில் இந்திய மருந்துத் தொழில் முன்னிலை வகிப்பதாகவும், சிலிக்கு முக்கிய பங்குதாரராக விளங்குவதாகவும்  அதிபர் திரு போரிக் ஒப்புக் கொண்டார். மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்தை அதிகரிக்க இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கு வசதி செய்ய இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. சுகாதாரம் மற்றும் மருந்துகள் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்திய மருந்துகளுக்கான சந்தை அணுகல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், இந்திய மருந்தகத்திற்கு சிலி அங்கீகாரம் அளிப்பதை மேம்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் பாரம்பரிய மருந்துகள் மற்றும் யோகாவின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், நீடித்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக பாரம்பரிய மருந்துகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்குமாறு தங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதற்காக, சான்றுகள் அடிப்படையிலான, ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவம், ஹோமியோபதி மற்றும் யோகா ஆகியவற்றை மேம்படுத்தவும், பயன்பாட்டை தீவிரப்படுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

இரு நாடுகளிலும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பணியாற்ற இருதரப்பும் ஒப்புக் கொண்டன. ரயில்வே துறை உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் பங்கேற்க இந்திய நிறுவனங்களை சிலி தரப்பு வரவேற்றது.

திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கணிசமான பகுதிகளைக் கண்டறிவதற்காக இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று இரு தலைவர்களும் ஊக்குவித்தனர். தற்போதுள்ள முறையான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஒருவருக்கொருவர் திறன்களை மேம்படுத்துவது  குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனர். பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, என்.டி.சி மற்றும் ஹெச்.டி.எம்.சி ஆகியவற்றில் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும்போது, சிலிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை இந்திய தரப்பு எடுத்துரைத்தது. பரஸ்பர நலன்கள் உள்ள துறைகளில் சிலி ராணுவத்தை வரவேற்று பயிற்சி அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்தது.

அண்டார்டிகா கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் இருதரப்பு பேச்சுவார்த்தைகள், கூட்டு முயற்சிகள் மற்றும் அண்டார்டிகா மற்றும் அண்டார்டிகா கொள்கை தொடர்பான கல்விசார் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு கூட்டாண்மை மேலும் வழிவகுக்கும். தற்போதுள்ள அண்டார்டிகா ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உத்தேச ஒப்புதல் ஆவணத்தில் கையெழுத்திட்டது குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவும் சிலியும் அண்டார்டிகா ஒப்பந்தத்தில் ஆலோசனை தரப்பினராக உள்ளன. இரு தரப்பினரும்  உலக சமூகத்தின் நலனுக்காக அண்டார்டிக் குறித்த அறிவியல் புரிதலை ஆழப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.

தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த பயன்பாட்டிற்கான முக்கிய சட்ட கட்டமைப்பாக, தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல்சார் பல்லுயிர் பெருக்கம் குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடுவதை இரு தரப்பினரும் வரவேற்றனர், மேலும் நிலம் முதல் கடல் வரை பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல்  மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் அந்தந்த நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.  இந்த பிரச்சினைகளைக் கையாளும் சர்வதேச அரங்குகளில் ஒன்றிணைந்து பணியாற்றவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும் ஒப்புக் கொண்டனர். பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான உரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம், பன்முகத்தன்மையில் உலகளாவிய தெற்கிலிருந்து ஒரு தொலைநோக்கை வலுப்படுத்துவதற்கான தங்கள் நோக்கத்தை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின.

விண்வெளியில் இரு நாடுகளின் பல தசாப்த கால கூட்டாண்மையை நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், வர்த்தக ஏற்பாட்டின் கீழ் 2017 ஆம் ஆண்டில் இந்தியா இணை பயணியாக சிலிக்கு சொந்தமான செயற்கைக்கோளை (சுசாய் -1) விண்ணில் செலுத்தியது உட்பட இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளித் துறையில் நடந்து வரும் ஈடுபாடுகளைக் குறிப்பிட்டனர். விண்வெளி மற்றும் வானியற்பியல் துறைகளில் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்த விஷயத்தைப் பொருத்தவரை, விண்வெளி ஆய்வு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி, செயற்கைக்கோள் உருவாக்கம்,  செலுத்துதல் மற்றும் இயக்குதல், விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துதல் ஆகிய துறைகளில் இஸ்ரோ, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புக்காக சிலி விண்வெளி நிர்வாகக் குழுவை அமைத்ததை அவர்கள் வரவேற்றனர்.

தத்தமது துடிப்பான தகவல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளைக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், இந்தத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை ஆராய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். முதலீடுகள், கூட்டு முயற்சிகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் இடத்தில் சந்தைகளின் வளர்ச்சி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உட்பட பரஸ்பர ஆர்வத்தை அவர்கள் வெளிப்படுத்தினர், இதன் மூலம் மக்கள் மற்றும் வணிகங்களுக்கான டிஜிட்டல் சேவைகளுக்கான அணுகலை ஜனநாயகப்படுத்தினர். டிஜிட்டல் பணப் பட்டுவாடா துறையில் ஒத்துழைப்பை விரைவில் அமல்படுத்துவதற்கான முயற்சிகளை இரு தரப்பினரும் மேற்கொண்டு வருவதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளிலும் உள்ள துடிப்பான புத்தொழில் சூழலியல் அமைப்புகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பணியாற்ற அவர்கள் உறுதி பூண்டனர். இரு நாடுகளின் தொழில்நுட்ப சமூகங்களுக்கு இடையே ஆழமான ஈடுபாட்டை எளிதாக்கும் வகையில், டிஜிட்டல் உருமாற்றத் துறைகளில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் முன்னேறுவதற்கான தங்கள் விருப்பத்தை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்.

21-ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பன்முகத்தன்மை கொண்ட நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு பிரிவுகளில் விரிவாக்கம் செய்வது உட்பட விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தங்களது உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான தனது ஆதரவை சிலி தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. உலக அமைதியை வலுப்படுத்த ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்த இணைந்து பணியாற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர், அமைதியான பேச்சுவார்த்தை மூலம் அனைத்து மோதல்களையும் தீர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான பொதுவான போராட்டத்தில் ஒன்றாக இணைந்து நிற்பது என்ற உறுதிப்பாட்டையும் பகிர்ந்து கொண்டனர். ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

பாதுகாப்புக் கவுன்சிலின் 1267-வது தீர்மானத்தை அமல்படுத்தி, பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள், அடிப்படைக் கட்டமைப்புகளை அகற்றவும், பயங்கரவாத வலைப்பின்னல்கள் மற்றும் அனைத்து பயங்கரவாத நிதியுதவி வழிகளைச் சீர்குலைக்கவும் அனைத்து ஐ‌.நா உறுப்பு நாடுகளையும் இரு தலைவர்களும் கேட்டுக் கொண்டனர். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட  பன்னாட்டு அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இருவரும் மீண்டும் வலியுறுத்தினர். சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான மாநாட்டை விரைவில் இறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும், சுதந்திரமான கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தை உறுதி செய்யும் மற்றும் தடையற்ற சட்டபூர்வமான வர்த்தகத்தை உறுதி செய்யும் மற்றும் சர்வதேச சட்டத்தின் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி, குறிப்பாக ஐ.நா.வின் கடல் சட்ட உச்சி மாநாடு (ஐ.நா.சி.எல்.ஓ.எஸ்) தொடர்பான சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு காண விரும்பும் விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு குறித்த தொலைநோக்கு பார்வைக்கு இரு தலைவர்களும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

 

" உலகளாவிய தெற்கின் குரல்" உச்சிமாநாடுகளின் மூன்று பதிப்புகளிலும் சிலி பங்கேற்றதற்கு பிரதமர் திரு மோடி பாராட்டு தெரிவித்தார். உலகின் தெற்கில் உள்ள நாடுகளை ஒன்றிணைத்து, வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வைகளைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. 2024 ஆகஸ்டில் நடைபெற்ற 3-வது உலகளாவிய தெற்கின் குரல் உச்சிமாநாட்டில் தனது மதிப்புமிக்க கண்ணோட்டங்கள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அதிபர் திரு போரிக்கிற்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்ததுடன், பயனுள்ள உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களின் தேவை மற்றும் தூய்மையான மற்றும் பசுமை தொழில்நுட்பங்களுக்கு உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு சமமான அணுகல் உள்ளிட்ட பல சமகால உலகளாவிய பிரச்சினைகளில் இரு நாடுகளும் வலுவான ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார். உலகின் தெற்கத்திய நாடுகளுக்கு இடையேயான ஈடுபாடுகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் தலைமைத்துவத்தை அதிபர் திரு போரிக் வரவேற்றார்.

வளர்ச்சித் திட்டத்தை மைய நிலைக்குக் கொண்டு வந்த ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் தலைமைக்கு அதிபர் திரு போரிக் பாராட்டு தெரிவித்தார். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் (டி.பி.ஐ) திறனை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தும் தொழில்நுட்பத்தின் உருமாறும் மற்றும் உள்ளடக்கிய பங்கை அங்கீகரித்தார். ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தைச் சேர்ப்பது, நீடித்த வளர்ச்சிக்கான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் முன்னேற்றங்கள், பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் சீர்திருத்தங்கள், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் போன்ற முக்கிய முன்முயற்சிகள் மற்றும் வெளிப்பாடுகளை முன்னுக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஜி20 தலைமைப் பொறுப்பு, உலகளாவிய தெற்கின் குரல் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளது என்பதை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். இது தொடர்பாகவும், ஜி20 அமைப்புக்குள் அதிக ஒருங்கிணைப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், சிலி மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை ஜி20 விருந்தினர் நாடுகளாக விவாதங்களில் சேர்ப்பதை இந்தியா ஆதரிக்கும்.

பருவநிலை மாற்றம் மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வு, காலநிலை நெகிழ்திறன் கொண்ட பொருளாதாரங்களுக்கு மாறுவது ஆகியவற்றால் தங்கள் பொருளாதாரங்களுக்கு முன்வைக்கப்பட்ட சவால்களை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். அதன்படி, தூய்மையான எரிசக்தி மற்றும் மிகவும் திறமையான எரிசக்தி தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்க அவர்கள் ஆர்வம் தெரிவித்தனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், பயன்பாடு மற்றும் சேமிப்பு தொழில்நுட்பங்கள், எரிசக்தி திறன் மற்றும் பிற குறைந்த கார்பன் தீர்வுகளில் கூட்டு முதலீடுகளை அதிகரிக்க இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர், இது நிலையான பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும்.

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் இந்தியாவின் தலைமையை வரவேற்ற அதிபர் திரு போரிக், 2023 நவம்பர் முதல் உறுப்பினர் என்ற முறையில் தனது வலுவான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். நிலையான வளர்ச்சி இலக்குகளின் நோக்கங்களை அடைய அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பை நெகிழ்திறன் கொண்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, 2021 ஜனவரியில் பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் சிலி இணைந்ததற்கு பிரதமர் திரு மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் பிராந்தியக் குழுவின் 7-வது கூட்டத்தை நடத்த சிலி முன்வந்ததை இரு தலைவர்களும் மதித்தனர்.

தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் தீர்வுகள், திறன் மேம்பாடு மற்றும் நிறுவன திறன் மேம்பாடு ஆகியவற்றின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அங்கீகரித்த இந்தியாவும், சிலியும் இந்தத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. எட்சில் (இந்தியா) லிமிடெட் மற்றும் சிலி பல்கலைக்கழகங்களின் ரெக்டர்கள் கவுன்சில், சிலி கல்வி அமைச்சகம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் உள்ளிட்ட முக்கிய சிலி நிறுவனங்களுக்கு இடையே கூட்டாண்மைகளை எளிதாக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன, இதன் மூலம் டிஜிட்டல் கற்றல், ஆராய்ச்சி பரிமாற்றங்கள், திறன்மிகுந்த கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன, கல்வியில் புதுமை மற்றும் அறிவு பகிர்வை ஊக்குவிக்க இரு நாடுகளின் பலத்தையும் மேம்படுத்துகின்றன.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் இந்தியாவில் கல்வித் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சிலி நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்திய கல்வி நிறுவனங்களுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டாண்மையை வலுப்படுத்தவும், கூட்டு / இரட்டை பட்டம் மற்றும் இரட்டை ஏற்பாடுகள் மூலம் நிறுவன இணைப்புகளை உருவாக்கவும் ஊக்குவித்தார். வானியல் மற்றும் வானியற்பியலில் இரு நாடுகளும் பரஸ்பரம் பலம் பெற்றிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் துறைகளில் நிறுவன ஈடுபாடுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சிலியில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் இந்திய ஆய்வுகளுக்கான ஐ.சி.சி.ஆர் இருக்கையை அமைக்கும் முன்மொழிவை இரு தலைவர்களும் வரவேற்றனர். இதை விரைவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

ராஜதந்திரத் துறையில் பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பில் தற்போது நடைபெற்று வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றதுடன், உலகளாவிய உத்தி சார் முயற்சிகள் மற்றும் ராஜதந்திரத்தை மிகவும் திறமையானதாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இந்தத் துறையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குறிப்பிட்டனர். இரு நாட்டு மக்களையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டு வருவதில் கலாச்சார உறவுகளின் பங்கை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தியா மற்றும் சிலியின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தை அவர்கள் பாராட்டியதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால கலாச்சார பரிமாற்றங்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். இரு நாடுகளிலும் கலாச்சாரம் மற்றும் மொழிகள் குறித்து ஆய்வு செய்வதில் ஆர்வம் அதிகரித்து வருவதை இரு தலைவர்களும் பாராட்டினர். இந்தியாவில் பிரபலமான வெளிநாட்டு மொழிகளில் ஸ்பானிஷ் மொழியும் ஒன்றாகும். இந்தியா-சிலி கலாச்சார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளின் கலாச்சார நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் பரஸ்பர ஆர்வத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

இசை, நடனம், நாடகம், இலக்கியம், அருங்காட்சியகங்கள் மற்றும் விழாக்கள் ஆகியவற்றில் இருதரப்பு பரிமாற்றங்களை மேம்படுத்த புதிய கலாச்சார பரிமாற்றத் திட்டத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர்.

போதை மருந்துகள் மற்றும் மனநிலையை மாற்றும் பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதை எதிர்க்கவும், பொதுவாக சுங்க சட்ட மீறல்களை புலனாய்வு செய்யவும், தடுக்கவும், ஒடுக்கவும், சிறந்த நடைமுறைகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

 

மாற்றுத்திறனாளிகள் துறையில் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு தரப்பினரும் மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் அவர்கள் வரவேற்றனர். இது மனிதாபிமானம் உள்ள மற்றும் நேர்மையான சமுதாயத்திற்கு பங்களிக்கும். இந்த ஆவணங்களை விரைந்து முடிக்குமாறு இரு தலைவர்களும் தங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

பரஸ்பர அக்கறை கொண்ட விஷயங்களில் வழக்கமான கலந்துரையாடல்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இருதரப்பு உறவின் குணாம்சமான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் பிணைப்புகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் வாய்ப்புகளை உருவாக்க அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்தப் பயணத்தின் போது தனக்கும் தனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பு மற்றும் விருந்தோம்பலுக்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அதிபர் திரு கேப்ரியல் போரிக், சிலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s space programme, a people’s space journey

Media Coverage

India’s space programme, a people’s space journey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Congratulates Shri S. Suresh Kumar Ji on Inspiring Cycling Feat
January 01, 2026

āThe Prime Minister, Shri Narendra Modi, today lauded the remarkable achievement of Shri S. Suresh Kumar Ji, who successfully cycled from Bengaluru to Kanniyakumari.

Shri Modi noted that this feat is not only commendable and inspiring but also a testament to Shri Suresh Kumar Ji’s grit and unyielding spirit, especially as it was accomplished after overcoming significant health setbacks.

PM emphasized that such endeavors carry an important message of fitness and determination for society at large.

The Prime Minister personally spoke to Shri Suresh Kumar Ji and congratulated him for his effort, appreciating the courage and perseverance that made this journey possible.

In separate posts on X, Shri Modi wrote:

“Shri S. Suresh Kumar Ji’s feat of cycling from Bengaluru to Kanniyakumari is commendable and inspiring. The fact that it was done after he overcame health setbacks highlights his grit and unyielding spirit. It also gives an important message of fitness.

Spoke to him and congratulated him for effort.

@nimmasuresh

https://timesofindia.indiatimes.com/city/bengaluru/age-illness-no-bar-at-70-bengaluru-legislator-pedals-702km-to-kanyakumari-in-five-days/articleshow/126258645.cms#

“ಬೆಂಗಳೂರಿನಿಂದ ಕನ್ಯಾಕುಮಾರಿಯವರೆಗೆ ಸೈಕಲ್ ಸವಾರಿ ಕೈಗೊಂಡ ಶ್ರೀ ಎಸ್. ಸುರೇಶ್ ಕುಮಾರ್ ಅವರ ಸಾಧನೆ ಶ್ಲಾಘನೀಯ ಮತ್ತು ಸ್ಫೂರ್ತಿದಾಯಕವಾಗಿದೆ. ಆರೋಗ್ಯದ ಹಿನ್ನಡೆಗಳನ್ನು ಮೆಟ್ಟಿ ನಿಂತು ಅವರು ಈ ಸಾಧನೆ ಮಾಡಿರುವುದು ಅವರ ದೃಢ ನಿರ್ಧಾರ ಮತ್ತು ಅಚಲ ಮನೋಭಾವವನ್ನು ಎತ್ತಿ ತೋರಿಸುತ್ತದೆ. ಇದು ಫಿಟ್ನೆಸ್ ಕುರಿತು ಪ್ರಮುಖ ಸಂದೇಶವನ್ನೂ ನೀಡುತ್ತದೆ.

ಅವರೊಂದಿಗೆ ಮಾತನಾಡಿ, ಅವರ ಈ ಪ್ರಯತ್ನಕ್ಕೆ ಅಭಿನಂದನೆ ಸಲ್ಲಿಸಿದೆ.

@nimmasuresh

https://timesofindia.indiatimes.com/city/bengaluru/age-illness-no-bar-at-70-bengaluru-legislator-pedals-702km-to-kanyakumari-in-five-days/articleshow/126258645.cms#