பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கு ரபிப் பருவம், 2022-23 (01.11.2023 முதல் 31.03.2023 வரை )க்கான ஊட்டச்சத்து அடிப்படையில் மானியத்தை திருத்தியமைக்கவும் கரீஃப் பருவம், 2023 ( 01.04.2023 முதல் 30.09.2023 வரை ) க்கான ஊட்டச்சத்து அடிப்படையில் மானியத்தை நிர்ணயிக்கவும், உரங்கள் துறையின் ஆலோசனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 கிரேடு பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரம் கிடைக்கச் செய்வதற்கு இந்த ஒப்புதல் பயன்படும். விவசாயிகளுக்கு மானிய விலையில் தரமான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரம் கிடைக்கச் செய்வது என்ற அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற கரீஃப் 2023-க்கு அரசு ரூ.38,000 கோடி மானியம் வழங்கும்.
கரீஃப் பருவத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் குறைந்த செலவில், நியாயமான விலையில் டிஏபி மற்றும் இதர பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் உரங்கள் கிடைப்பதை அமைச்சரவை முடிவு உறுதி செய்யும்.
देश के किसान भाई-बहनों पर खाद की कीमतों का बोझ कम करने के लिए हमारी सरकार प्रतिबद्ध है।https://t.co/mJYaiJ8b1Z https://t.co/Mb91qqFuaR
— Narendra Modi (@narendramodi) May 17, 2023


