இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உரத் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஜார்க்கண்டில் ரூ.17,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
தியோகர் – திப்ருகர் ரயில் சேவை, டாடா நகர் மற்றும் பதம்பஹர் (தினசரி) இடையே மெமு ரயில் சேவை மற்றும் ஷிவ்பூர் ரயில் நிலையத்திலிருந்து நீண்ட தூர சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சத்ராவில் உள்ள வடக்கு கரன்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் அலகு 1-ஐ (660 மெகாவாட்) நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரித் துறை தொடர்பான திட்டங்களை அர்ப்பணித்தார்
"சிந்த்ரி ஆலை மோடியின் உத்தரவாதமாக இருந்தது- இன்று இந்த உத்தரவாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது"
"புத்துயிர் பெற்றுள்ள 5 ஆலைகள் 60 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும்- இது இந்தியாவை இந்த முக்கியமான துறையில் தற்சார்பை நோக்கி விரைவாகக் கொண்டு செல்லும்"
&"கடந்த 10 ஆண்டுகளில் அரசு, பழங்குடி சமூகம், ஏழைகள், இளைஞர்கள் மற
எச்யுஆர்எல் மாதிரியை ஆய்வு செய்த பிரதமர், சிந்த்ரி ஆலை கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார்.

ஜார்க்கண்ட் ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு. சம்பாய் சோரன் அவர்களே, மதிப்பிற்குரிய அமைச்சரவை சகா அர்ஜுன் முண்டா அவர்களே, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, இதர பிரமுகர்களே, ஜார்க்கண்டின் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, வணக்கம் !

 

இன்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ .35 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்கள் உள்ளன. எனது விவசாய சகோதரர்கள், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மக்களை இந்த முன்முயற்சிகளுக்காக நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே

இன்று, சிந்த்ரி உரத் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த உர ஆலையைத் தொடங்குவது எனது உறுதியின்படி மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

2018 ஆம் ஆண்டில் இந்த ஆலைக்கு நான் அடிக்கல் நாட்டினேன், இப்போது, சிந்த்ரி தொழிற்சாலை செயல்படத் தொடங்கியிருப்பது மட்டுமல்லாமல், இது இந்தியா மற்றும் ஜார்க்கண்ட் இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துள்ளது.

இந்த உரத் தொழிற்சாலை தொடங்கப்பட்டதன் மூலம், இந்தியா தற்சார்பை நோக்கி குறிப்பிடத்தக்க அடி எடுத்து வைக்கிறது. ஆண்டுக்கு சுமார் 360 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படுகிறது. 2014-ல் எங்கள் அரசு பதவியேற்றபோது, நாட்டின் யூரியா உற்பத்தி 225 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே இருந்தது.

 

இந்த கணிசமான இடைவெளியை நிரப்ப, கணிசமான அளவு யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. எனவே, யூரியா உற்பத்தியில் நாட்டை தற்சார்புடையதாக மாற்ற நாங்கள் உறுதியேற்றோம். அரசின் முயற்சிகள் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் யூரியா உற்பத்தி 310 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

 

கடந்த 10 ஆண்டுகளில், ராமகுண்டம், கோரக்பூர் மற்றும் பரோனி ஆகிய இடங்களில் உள்ள உரத் தொழிற்சாலைகளுக்கு நாங்கள் புத்துயிர் அளித்துள்ளோம். இன்று, சிந்திரியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

தால்செர் உரத் தொழிற்சாலையும் அடுத்த 1.5 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும், அதைத் தொடங்கி வைக்கும் கவுரவம் எனக்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். ஒட்டுமொத்தமாக, இந்த ஐந்து ஆலைகளும் 60 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்ய நாட்டுக்கு உதவும், மேலும் இந்த முக்கியமான பகுதியில் தற்சார்பை நோக்கி தேசத்தை விரைவாக நகர்த்தும். இந்த சாதனை அந்நியச் செலாவணியை சேமிப்பது மட்டுமல்லாமல், அந்த நிதி விவசாயிகளின் நலனுக்காக செலவிடப்படும்..

 

நண்பர்களே

கடந்த பத்தாண்டுகளாக, ஜார்க்கண்டில் பழங்குடி சமூகங்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்.

நண்பர்களே

2047-ம் ஆண்டுக்குள் நாட்டை மேம்படுத்த விரும்புகிறோம். தற்போது, இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக பெருமை கொள்கிறது, நேற்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஊக்கமளிக்கும் பொருளாதார புள்ளிவிவரங்களிலிருந்து இது தெளிவாகிறது. அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்தியா 8.4 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைந்தது.

வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடைய, ஜார்க்கண்டின் வளர்ச்சியை ஒரே நேரத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். ஜார்க்கண்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதியான ஆதரவை அளிக்கும். பகவான் பிர்ஸா முண்டாவின் பூமி, வளர்ச்சியடைந்த பாரதத்தின் விருப்பங்களை இயக்கும் சக்தி மையமாக உருவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அனைத்து திட்டங்களுக்கும், முன்முயற்சிகளுக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகவும் நன்றி. வணக்கம் !

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India remains fastest-growing major economy, domestic investors power market resilience

Media Coverage

India remains fastest-growing major economy, domestic investors power market resilience
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 15, 2026
March 15, 2026

Empowering Bharat: From Loans to Global Leadership Under PM Modi