யோகா உலகம் முழுவதையும் ஒன்றிணைத்துள்ளது: பிரதமர்
எல்லைகளுக்கு அப்பால், பல்வேறு பின்னணிகளுக்கு அப்பால், வயது அல்லது திறன்களுக்கு அப்பால் யோகா அனைவரையும் சென்றடைந்துள்ளது: பிரதமர்
உலக ஒற்றுமையை நோக்கிய பயணத்தில் யோகா நம்மை வழிநடத்துகிறது - நாம் தனித்த நபர்கள் அல்ல, இயற்கையின் ஒரு பகுதி என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது: பிரதமர்
யோகா என்பது தனி நபரில் இருந்து நாம் எனும் கூட்டு செயல்பாடு வரை நம்மை அழைத்துச் செல்லும் ஒரு கலையாகும்: பிரதமர்
யோகா என்பது மனிதகுலத்தை சமநிலைப்படுத்தத் தேவையான ஒரு கருவி: பிரதமர்
இந்த யோகா தினம் மனிதகுலத்திற்கான யோகா 2.0-வின் தொடக்கத்தைக் குறிக்கட்டும் - இதில் உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறட்டும்: பிரதமர்

ஆந்திரப் பிரதேச ஆளுநர் சையத் அப்துல் நசீர் அவர்களே, இந்த மாநிலத்தின் முதலமைச்சர், எனது அன்பு நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், கே. ராம்மோகன் நாயுடு அவர்களே, பிரதாப்ராவ் ஜாதவ் அவர்களே, சந்திரசேகர், பூபதி ராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா, மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்களே, பிற பிரமுகர்கள் மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

சர்வதேச யோகா தினத்தில் நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் வணக்கம்!

ஜூன் 21 அன்று 11-வது முறையாக உலகம் முழுவதும் ஒன்றாக யோகா செய்கிறது. யோகா என்பதற்கு இணைவது என்று பொருள், யோகா என்பது உலகம் முழுவதையும் எவ்வாறு இணைத்துள்ளது என்பதைப் பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் யோகாவின் பயணத்தை நான் திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு பல விஷயங்கள் நினைவிற்கு வருகின்றன. ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா முன்மொழிந்த நாள், பின்னர் மிகக் குறுகிய காலத்தில் உலகின் 175 நாடுகள் எங்கள் முன்மொழிவுக்கு ஆதரவாக நின்றன. இத்தகைய ஒற்றுமையும் ஆதரவும் இன்றைய உலகில் ஒரு பொதுவான நிகழ்வு அல்ல. இது ஒரு திட்டத்திற்கு ஆதரவு மட்டுமல்ல, மனிதகுலத்தின் நன்மைக்காக உலகின் கூட்டு முயற்சியாகும். இன்று, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக யோகா மாறிவிட்டது என்பதைக் காண்கிறோம். நமது மாற்றுத்திறனாளி  நண்பர்கள் பிரெய்லியில் யோகா சாஸ்திரங்களைப் படிப்பதையும், விஞ்ஞானிகள் விண்வெளியில் யோகா செய்வதையும், கிராமங்களில் உள்ள இளம் நண்பர்கள் யோகா ஒலிம்பியாட்டில் பங்கேற்பதையும் பார்க்கும்போது நான் பெருமைப்படுகிறேன். இங்கே பாருங்கள், அனைத்து கடற்படைக் கப்பல்களிலும் ஒரு அற்புதமான யோகா நிகழ்ச்சி நடக்கிறது. சிட்னி ஓபரா ஹவுஸின் படிகளாக இருந்தாலும் சரி, எவரெஸ்ட் சிகரமாக இருந்தாலும் சரி, அல்லது கடலின் விரிவாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் உள்ள செய்தி ஒன்றுதான் - யோகா அனைவருக்கும் சொந்தமானது, அனைவருக்கும் சொந்தமானது. யோகா அனைவருக்கும், எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, பின்னணிகளுக்கு அப்பாற்பட்டது, வயது அல்லது திறனுக்கு அப்பாற்பட்டது.

 

நண்பர்களே,

இன்று நாம் அனைவரும் விசாகப்பட்டினத்தில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நகரம் இயற்கை மற்றும் முன்னேற்றம் இரண்டின் சங்கமம். இங்குள்ள மக்கள் இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண்  ஆகியோரை நான் வாழ்த்துகிறேன், உங்கள் தலைமையில் ஆந்திர மாநிலம் யோக ஆந்திரா இயக்கம் என்ற சிறந்த முயற்சியை எடுத்தது. நாரா லோகேஷ் அவர்களின் முயற்சிகளையும் நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். யோகாவின் சமூக கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும், கடந்த ஒன்றரை மாதங்களாக யோக ஆந்திரா பிரச்சாரத்தில் இதை அவர் காட்டியுள்ளார், இதற்காக சகோதரர் லோகேஷ் பல வாழ்த்துகளுக்கு தகுதியானவர். மேலும், லோகேஷ் சகோதரரின் பணிகளை, அத்தகைய வாய்ப்புகளை எவ்வாறு சமூக மட்டத்திற்கு ஆழமாக எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான ஒரு உதாரணமாகக் கருத வேண்டும் என்பதையும் நான் என் நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

நண்பர்களே,

இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் யோக ஆந்திரா பிரச்சாரத்தில் தொடர்புடையவர்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவின் முக்கிய அடிப்படையான பொது பங்கேற்பின் உணர்வு இதுதான். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளும்போது, ஒரு இலக்கை வைத்திருக்கும்போது, அந்த இலக்கை அடைவதை யாரும் தடுக்க முடியாது. மக்களின் இந்த நல்லெண்ணமும் உங்கள் முயற்சிகளும் இந்த நிகழ்வில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.

 

நண்பர்களே,

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'ஒரே பூமி யோகா, ஒரரே ஆரோக்கியம்'. இந்தக் கருப்பொருள் ஒரு ஆழமான உண்மையைப் பிரதிபலிக்கிறது. பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளின் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. மனித நல்வாழ்வு நமது உணவை வளர்க்கும் மண்ணின் ஆரோக்கியத்தையும், நமக்கு தண்ணீர் தரும் ஆறுகளையும், நமது சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் விலங்குகளின் ஆரோக்கியத்தையும், நம்மை வளர்க்கும் தாவரங்களையும் சார்ந்துள்ளது. யோகா இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தன்மைக்கு நம்மை எழுப்புகிறது. யோகா உலகத்துடன் ஒற்றுமையை நோக்கிய பயணத்தில் நம்மை வழிநடத்துகிறது. நாம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அல்ல, மாறாக இயற்கையின் ஒரு பகுதி என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. ஆரம்பத்தில், நமது சொந்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் நன்கு கவனித்துக் கொள்ள கற்றுக்கொள்கிறோம். படிப்படியாக, நமது கவனிப்பும் அக்கறையும் நமது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் கிரகத்திற்கும் நீண்டுள்ளது. யோகா ஒரு சிறந்த தனிப்பட்ட ஒழுக்கம். அதே நேரத்தில், இது நம்மை நான் என்ற நிலையிலிருந்து நாம் என்ற நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு அமைப்பு.

நண்பர்களே,

'நானும் நாமும்' என்ற இந்த உணர்வு இந்தியாவின் ஆன்மாவின் சாராம்சம். ஒருவர் தனது சொந்த நலன்களை விட சமூகத்தைப் பற்றி சிந்திக்கும்போதுதான், முழு மனிதகுலமும் பயனடைகிறது. அனைவரின் நலனும் எனது கடமை என இந்திய கலாச்சாரம் நமக்குக் கற்பிக்கிறது. 'நான்' என்பதிலிருந்து 'நாம்' என்பதற்கான இந்தப் பயணம் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் சகவாழ்வின் அடிப்படையாகும். இந்தச் சிந்தனை சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது.

 

நண்பர்களே,

துரதிர்ஷ்டவசமாக, இன்று முழு உலகமும் ஒருவித பதற்றத்தை கடந்து வருகிறது. அமைதியின்மை மற்றும் உறுதியற்ற தன்மை பல பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், யோகா நமக்கு அமைதிக்கான திசையை வழங்குகிறது. யோகா என்பது மனிதகுலம் முழு ஆதாயமடையும்  சமநிலையை சுவாசிப்பதற்கான ஒரு வழிமுறையாகும்.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உலக சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இந்த யோகா தினம் மனிதகுலத்திற்கான யோகா 2.O இன் தொடக்கத்தைக் குறிக்கட்டும், அங்கு உள் அமைதி உலகளாவிய கொள்கையாகிறது. இங்கு யோகா என்பது ஒரு தனிப்பட்ட பயிற்சி மட்டுமல்ல, உலகளாவிய கூட்டாண்மைக்கான ஊடகமாகிறது. இங்கு ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமூகமும் யோகாவை வாழ்க்கை முறை மற்றும் பொதுக் கொள்கையின் ஒரு பகுதியாக ஆக்குகிறது. அமைதியான, சமநிலையான மற்றும் நிலையான உலகத்திற்கு நாம் ஒன்றாக உத்வேகம் அளிக்கும் இடம். உலகம் மோதலில் இருந்து ஒத்துழைப்புக்கும், பதற்றத்திலிருந்து தீர்வுக்கும் மாற யோகா உதவும்.

 

நண்பர்களே,

உலகில் யோகாவைப் பரப்ப, இந்தியா நவீன ஆராய்ச்சி மூலம் யோகா அறிவியலை மேலும் வலுப்படுத்துகிறது. நாட்டின் முக்கிய மருத்துவ நிறுவனங்கள் யோகா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. யோகாவின் அறிவியல் தன்மை நவீன மருத்துவ முறையில் ஒரு இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி. நாட்டின் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் யோகா துறையில் சான்றுகள் சார்ந்த சிகிச்சையையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். தில்லியில் உள்ள எய்ம்ஸ் இந்தத் திசையில் மிகச் சிறந்த பணிகளைச் செய்துள்ளது. இதய மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதிலும், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மன நலனிலும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எய்ம்ஸ் ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

நண்பர்களே,

தேசிய ஆயுஷ் இயக்கம் மூலம்,  யோகா மற்றும் நல்வாழ்வு என்ற மந்திரமும் ஊக்குவிக்கப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பமும் இதில் பெரும் பங்கு வகித்துள்ளது. யோகா தளம் மற்றும் யோக ஆந்திரா தளம் மூலம், நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பல இடங்களில் நயோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யோகாவின் நோக்கம் எவ்வளவு விரிவடைகிறது என்பதையும் இது காட்டுகிறது.

 

நண்பர்களே,

இன்று இந்தியாவில் குணப்படுத்துதல் என்ற மந்திரம் உலகளவில் மிகவும் பிரபலமடைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். உலகிற்கு குணப்படுத்துவதற்கான சிறந்த இடமாக இந்தியா மாறி வருகிறது. இதில் யோகாவும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. யோகாவிற்காக ஒரு பொதுவான யோகா நெறிமுறை உருவாக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். யோகா சான்றிதழ் வாரியத்தின் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், சுமார் 130 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 10 நாள் யோகா தொகுதி, இதுபோன்ற பல முயற்சிகள் ஒரு முழுமையான சூழல் அமைப்பை உருவாக்குகின்றன. நாடு முழுவதும் உள்ள எங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்தியாவின் இந்த நல்வாழ்வு சூழல் அமைப்பிலிருந்து உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் பயனடைய சிறப்பு மின்-ஆயுஷ் விசாக்கள் வழங்கப்படுகின்றன.

 

நண்பர்களே,

இன்று யோகா தினத்தன்று, உடல் பருமன் குறித்து மீண்டும் ஒருமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறேன். உடல் பருமன் அதிகரிப்பது முழு உலகிற்கும் ஒரு பெரிய சவாலாகும். மனதின் குரல்  நிகழ்ச்சியிலும் இதைப் பற்றி விரிவாக விவாதித்தேன். இதற்காக, நமது உணவில் 10 சதவீத எண்ணெயைக் குறைக்க ஒரு சவாலையும் நான் தொடங்கினேன். இந்தச் சவாலில் இணையுமாறு உலகெங்கிலும் உள்ள நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன். நமது உணவில் எண்ணெய் பயன்பாட்டை குறைந்தது 10 சதவிகிதம் குறைக்க முடியும் என்பது குறித்த விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும். எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது, ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்ப்பது மற்றும் யோகா செய்வது சிறந்த உடற்தகுதிக்கு முக்கியமாகும்.

நண்பர்களே,

நாம் ஒன்றிணைந்து யோகாவை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றுவோம். உலகை அமைதி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு இயக்கம். ஒவ்வொரு நபரும் யோகாவுடன் நாளைத் தொடங்கி வாழ்க்கையில் சமநிலையைக் காணும் இடம். ஒவ்வொரு சமூகமும் யோகாவுடன் இணைக்கப்பட்டு மன அழுத்தத்திலிருந்து விடுபடும் இடம். யோகா மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் ஒரு ஊடகமாக மாறும் இடம். மேலும் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்பது ஒரு உலகளாவிய தீர்மானமாக மாறும் இடம். மீண்டும் ஒருமுறை, ஆந்திராவின் தலைமையை வாழ்த்துவதோடு, ஆந்திர மக்களையும் வாழ்த்துவதோடு, உலகம் முழுவதும் பரவியுள்ள யோகா பயிற்சியாளர்கள் மற்றும் யோகா ஆர்வலர்களையும் வாழ்த்துகையில், உங்கள் அனைவருக்கும் சர்வதேச யோகா தின நல்வாழ்த்துகள். நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Second consignment of 37.5 tonnes HADR aid reaches flood-hit Nepal; India sends 47.5 tonnes of relief material in total

Media Coverage

Second consignment of 37.5 tonnes HADR aid reaches flood-hit Nepal; India sends 47.5 tonnes of relief material in total
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to Mahatma Ayyankali on his birth anniversary
August 28, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has paid homage to Mahatma Ayyankali on his birth anniversary, today. Shri Modi remembered Mahatma Ayyankali as a great pioneer of social justice, who dedicated his life to the empowerment and welfare of the marginalised. The Prime Minister highlighted his efforts to secure educational opportunities for the marginalised, improve the lives of agricultural workers and serve the poor.

The Prime Minister posted on X:

Paying homage to Mahatma Ayyankali on his birth anniversary!

He is remembered as a great pioneer of social justice. His efforts to secure educational opportunities for the marginalised, improve the lives of agricultural workers and serve the poor remain very inspiring. His life gives strength to all those working for social empowerment.