விருது பெற்றவர் - நான் மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளேன், புத்தகங்கள் எழுதுவதற்கு முக்கிய காரணம் நான் வாசிப்பை நேசிப்பதுதான். எனக்கு அரிய வகை நோய் உள்ளது, நான் உயிர் வாழ இரண்டு ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தேன். ஆனால் என் அம்மா, என் சகோதரி, என் பள்ளி, ...... மற்றும் நான். என் புத்தகங்களை வெளியிட்ட தளம், இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னால் வர முடிந்தது.

பிரதமர்- உங்களை ஊக்குவித்தவர் யார்?

விருது பெற்றவர் - எனது ஆங்கில ஆசிரியராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

பிரதமர்– இப்போது நீங்கள் மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறீர்கள். உங்கள் புத்தகத்தைப் படித்து, அவர்கள் உங்களுக்கு ஏதாவது எழுதுகிறார்களா?

விருது பெற்றவர் - ஆம்.

பிரதமர் – உங்களுக்கு என்ன மாதிரியான செய்திகள் வருகின்றன?

விருது பெற்றவர் - எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒன்று, மக்கள் தங்கள் சொந்த புத்தகங்களை எழுதத் தொடங்கியுள்ளனர்.

பிரதமர் - எங்கே செய்தீர்கள்? எங்கிருந்து பயிற்சி பெற்றீர்கள்? அது எப்படி நடந்தது?

விருது பெற்றவர்- எனக்கு முறையான பயிற்சி இல்லை.

பிரதமர் - ஒன்றுமில்லையா? நீங்கள் அதை செய்ய வேண்டும் என்று உணர்ந்தீர்களா?

விருது பெற்றவர் - ஆம் ஐயா.

 

பிரதமர் - வேறு எந்தெந்த போட்டிகளில் நீங்கள் பங்கேற்றிருக்கிறீர்கள்?

விருது பெற்றவர்- நான் ஆங்கிலம், உருது, காஷ்மீரி மொழிகளில் பங்கேற்றுள்ளேன்.

பிரதமர் – உங்களிடம் யூடியூப் சேனல் இருக்கிறதா? எங்காவது நிகழ்ச்சி நடத்துகிறீர்களா?

விருது பெற்றவர் - ஆம் ஐயா. நான் யூடியூபில் இருக்கிறேன், நானும் பங்கேற்கிறேன்.

பிரதமர் - உங்கள் குடும்பத்தில் வேறு யாராவது பாடுகிறார்களா?

விருது பெற்றவர் - இல்லை ஐயா, வேறு யாருமில்லை.

பிரதமர் - நீங்கள்தான் ஆரம்பித்தீர்களா?

விருது பெற்றவர் - ஆம் ஐயா.

பிரதமர் - என்ன செய்தீர்கள்? நீங்கள் சதுரங்கம் விளையாடுவீர்களா?

விருது பெற்றவர் - ஆம் .

பிரதமர் - உங்களுக்கு சதுரங்கம் கற்றுக் கொடுத்தது யார்?

விருது பெற்றவர் - என் தந்தையும் யூடியூபும்.

பிரதமர் - அப்படியா.

விருது பெற்றவர் - என் ஆசிரியரும் கூட.

 

பிரதமர் – தில்லியில் மிகவும் குளிராக இருக்கிறது, உண்மையில் மிகவும் குளிராக இருக்கிறது.

விருது பெறுபவர் – இந்த ஆண்டு, கார்கில் வெற்றி தின வெள்ளி விழாவைக் குறிக்கும் வகையில், நான் கார்கில் போர் நினைவுச்சின்னத்திலிருந்து தேசிய போர் நினைவுச்சின்னம் வரை 1,251 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா  மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்த நாளைக் கொண்டாட, மொய்ராங்கில் உள்ள ஐஎன்ஏ நினைவகத்திலிருந்து புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடம் வரை நான் சைக்கிளில் சென்றேன்.

பிரதமர்– ஒவ்வொரு பயணத்திற்கும் எத்தனை நாட்கள் செலவழித்தீர்கள்?

விருது பெற்றவர்- முதல் பயணமாக, 32 நாட்கள் சைக்கிள் ஓட்டியது 2,612 கி.மீ. இதற்கு, 13 நாட்கள் ஆனது.

பிரதமர் - ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு தூரம் கடக்கிறீர்கள்?

விருது பெற்றவர்- இரண்டு பயணங்களிலும், ஒரே நாளில் அதிகபட்சமாக 129.5 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டினேன்.

விருது பெற்றவர்கள் - வணக்கம் ஐயா.

பிரதமர் - வணக்கம்.

விருது பெற்றவர்- நான் இரண்டு சர்வதேச புத்தக சாதனைகளை அடைந்துள்ளேன். முதலாவது ஒரு நிமிடத்தில் 31 அரை கிளாசிக்கல் ஸ்லோகங்களை பாராயணம் செய்வது, இரண்டாவது ஒரு நிமிடத்தில் 13 சமஸ்கிருத ஸ்லோகங்களை பாராயணம் செய்வது.

பிரதமர் - இதையெல்லாம் எங்கே கற்றுக் கொண்டீர்கள்?

 

விருது பெற்றவர் - ஐயா, யூடியூபில்  கற்றுக்கொண்டேன்.

பிரதமர் - சரி. ஒரு நிமிடம், நீ என்ன செய்கிறாய் என்று எனக்குக் காட்டு.

விருது பெறுபவர்- (சமஸ்கிருதத்தில் ஸ்லோகம் சொல்கிறார்)

விருது பெற்றவர்கள் - வணக்கம் ஐயா.

பிரதமர்  - வணக்கம்.

விருது பெற்றவர்: ஜூடோ போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளேன்.

பிரதமர் - எல்லோரும் உங்களைப் பார்த்து பயப்பட வேண்டும்! இதை எங்கே படித்தீர்கள் - பள்ளியிலா?

விருது பெற்றவர் - இல்லை ஐயா. நான் அதை ஒரு செயல்பாட்டு பயிற்சியாளரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

பிரதமர் - அது சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்து என்ன இலக்கு வைத்துள்ளீர்கள்?

விருது பெற்றவர்: ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.

பிரதமர் - ஆஹா, நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள்.

விருது பெற்றவர் - ஆம் ஐயா.

 

பிரதமர் – உங்களிடம் எத்தனையோ ஹேக்கர் கிளப்புகள் இருக்கின்றன.

விருது பெற்றவர் - ஆம். தற்போது, ஜம்மு-காஷ்மீரில் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்த நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம். 5,000 குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் புகட்டியுள்ளோம். எங்கள் நலன்களைப் பின்தொடரும் அதே நேரத்தில் சமூகத்திற்கு சேவை செய்யும் மாதிரிகளை செயல்படுத்துவதே எங்கள் நோக்கம்.

பிரதமர் – உங்கள் பிரார்த்தனா திட்டம் எவ்வாறு முன்னேறுகிறது?

விருது பெற்றவர்- "பிரார்த்தனா" திட்டம் இன்னும் வளர்ச்சி கட்டத்தில் உள்ளது. டச்சு மற்றும் சில சிக்கலான  மொழிகளில் வேதங்களின் மொழிபெயர்ப்புகளைச் சேர்ப்பதற்கான ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

விருது பெற்றவர்- கூடுதலாக, பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு சுய உறுதிப்படுத்தும் கரண்டியை நான் உருவாக்கியுள்ளேன்,  மூளை வயது முன்கணிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளோம்.

பிரதமர் – இதற்காக நீங்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்தீர்கள்?

விருது பெற்றவர் - ஐயா, இரண்டு ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்.

பிரதமர் - அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

விருது பெற்றவர் - ஐயா, எனது ஆராய்ச்சியைத் தொடர திட்டமிட்டுள்ளேன்.

பிரதமர் - நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

விருது பெற்றவர் - ஐயா, நான் பெங்களூரில் இருக்கிறேன். எனக்கு இந்தி அவ்வளவாக வராது.

பிரதமர் -  என்னுடையதை விட சிறந்தது.

விருது பெற்றவர் - நன்றி ஐயா.

விருது பெற்றவர்- கர்நாடக இசை மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களின் கலவையுடன் ஹரிகதை நிகழ்ச்சிகளை செய்கிறேன்.

பிரதமர் – எத்தனை ஹரிகதை நிகழ்ச்சிகள் செய்துள்ளீர்கள்?

விருது பெற்றவர் - நான் சுமார் நூறு நிகழ்ச்சிகள் செய்துள்ளேன்.

 

பிரதமர் - ரொம்ப நல்லது.

விருது பெற்றவர்- கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து வெவ்வேறு நாடுகளின் மிக உயர்ந்த ஐந்து சிகரங்களில் ஏறி, ஒவ்வொன்றிலும் இந்தியக் கொடியை உயர்த்தியுள்ளேன். நான் வேறொரு நாட்டிற்குச் செல்லும்போதெல்லாம், நான் இந்தியாவைச் சேர்ந்தவன் என்பதை மக்கள் அறியும் போதெல்லாம், அவர்கள் என்னிடம் அளவற்ற அன்பையும், மரியாதையையும் காட்டுகிறார்கள்.

பிரதமர் – நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று உங்களைச் சந்தித்து அறிந்தால் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

விருது பெற்றவர்- அவர்கள் எனக்கு நிறைய அன்பையும் மரியாதையையும் தருகிறார்கள். நான் ஏறும் ஒவ்வொரு மலைக்கும் பின்னால் உள்ள நோக்கம் பெண் குழந்தை அதிகாரம் மற்றும் உடல் தகுதியை ஊக்குவிப்பதாகும்.

விருது பெற்றவர்- நான் கலை ரோலர் ஸ்கேட்டிங் செய்கிறேன். இந்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் ஒரு சர்வதேச தங்கப் பதக்கம் வென்றேன்.

விருது பெற்றவர் - நானும் ஒரு பாரா தடகள வீரன் தான் ஐயா. இந்த மாதம் டிசம்பர் 1 முதல் 7 வரை தாய்லாந்தில் நடைபெற்ற பாரா ஸ்போர்ட்ஸ் இளைஞர் போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தேன்.

பிரதமர் - வாவ்.

விருது பெற்றவர்- இந்த ஆண்டு இளைஞர் சாம்பியன் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். 57 கிலோ பிரிவில் தங்கம் வென்றேன், 76 கிலோ பிரிவில் உலக சாதனை படைத்தேன், அங்கும் தங்கம் வென்றேன். ஒட்டுமொத்த போட்டியில் கூட தங்கப் பதக்கம்  வென்றேன்.

பிரதமர் - பதக்கங்களை எல்லாம் பறிக்கிறீர்களே!

விருது பெற்றவர் - இல்லை  ஐயா.

விருது பெற்றவர்- ஒருமுறை, ஒரு பிளாட் தீப்பிடித்தது, அதை யாரும் ஆரம்பத்தில் உணரவில்லை. வீட்டிலிருந்து புகை வருவதை நான் கவனித்தேன், ஆனால் யாருக்கும் உள்ளே நுழைய தைரியம் இல்லை, ஏனென்றால் அவர்கள் எரிந்துவிடுவோமோ என்று பயந்தார்கள். நான் பைத்தியக்காரன் என்றும், உள்ளே சென்றால் இறந்துவிடுவேன் என்றும் கூறி அவர்கள் என்னைத் தடுக்க முயன்றனர். ஆனால் நான் தைரியத்தைக் காட்டி உள்ளே சென்று தீயை அணைத்தேன்.

பிரதமர் - பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதா?

விருது பெற்றவர்- அந்தக் கட்டிடத்தில் 70 வீடுகளும் 200 குடும்பங்களும் இருந்தன.

பிரதமர் - நீச்சல் தெரியுமா?

விருது பெற்றவர் - ஆம்.

பிரதமர் - எல்லோரையும் காப்பாற்றினீர்களே?

விருது பெற்றவர் - ஆம்.

பிரதமர் - உங்களுக்கு பயமாக இல்லையா?

விருது பெற்றவர்- இல்லை.

பிரதமர் – எல்லாம் முடிந்த பிறகு, நீங்கள் ஏதோ பெரிய காரியம் செய்திருக்கிறீர்கள் என்று நினைத்து நன்றாக உணர்ந்தீர்களா?

விருது பெற்றவர் - ஆம்.

பிரதமர் - வாழ்த்துகள்!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Vande Bharat AC chair car fares much lower than those in China, Japan, France: Railway Minister Ashwini Vaishnaw

Media Coverage

Vande Bharat AC chair car fares much lower than those in China, Japan, France: Railway Minister Ashwini Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 12 பிப்ரவரி 2026
February 12, 2026

Sustainable, Strong, and Global: India's 2026 Surge Under PM Modi's Transformative Leadership