நவ்கார் மகாமந்திரம் வெறும் மந்திரம் மட்டுமல்ல - அது நமது நம்பிக்கையின் மையம்: பிரதமர்
நவ்கார் மகாமந்திரம் பணிவு, அமைதி, உலகளாவிய நல்லிணக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது: பிரதமர்
பஞ்ச பரமேஷ்டி வழிபாட்டுடன் கூடிய நவ்கர் மகாமந்திரம் அறிவு, புலனுணர்வு, நன்னடத்தை, மோட்சம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் பாதையைக் குறிக்கிறது: பிரதமர்
இந்தியாவின் அறிவுசார் பெருமையின் முதுகெலும்பாக சமண இலக்கியம் உள்ளது: பிரதமர்
பருவநிலை மாற்றம் இன்றைய மிகப்பெரிய நெருக்கடி ; அதற்கான தீர்வு நிலையான வாழ்க்கை முறையாகும்- இதை சமண சமூகம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருவதுடன் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்திற்கு ஏற்பவும் செயல்படுகிறது: பிரதமர்
நவ்கார் மகாமந்திர தினம் குறித்து 9 தீர்மானங்களை பிரதமர் முன்மொழிந்தார்

ஜெய் ஜினேந்திரா,

மனம் சாந்தி பெற்றது, மனம் நிலைபெற்றது, அமைதி மட்டுமே, ஒரு அற்புதமான உணர்வு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது. நவ்கார் மகாமந்திரம் இன்னும் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நவ்கார் மஹாமந்திரத்தின் ஆன்மீக சக்தியை நான் இன்னும் எனக்குள் உணர்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் இதேபோன்ற வெகுஜன மந்திர உச்சாடனத்தை நான் பார்த்தேன். இன்று அதே உணர்வு, அதே ஆழத்துடன் எனக்கு ஏற்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான புண்ணிய ஆத்மாக்கள் ஒரே உணர்வோடு, வார்த்தைகள் ஒன்றாகப் பேசப்பட்டு, ஒன்றாக எழுப்பப்பட்ட சக்தி உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்.

சகோதர சகோதரிகளே,

இந்த உடல் குஜராத்தில் பிறந்தது. ஒவ்வொரு தெருவிலும் சமண மதத்தின் தாக்கம் தென்படும்.  அங்கு சிறு வயது முதலே எனக்கு ஜெயின் ஆச்சாரியர்களின் கனிவான சகவாசம் கிடைத்தது.

 

நண்பர்களே,

 

நவ்கார் மஹாமந்திரம் வெறும் மந்திரம் மட்டுமல்ல, அது நமது நம்பிக்கையின் மையம். நம் வாழ்க்கையின் அடிப்படை தொனியும் அதன் முக்கியத்துவமும் ஆன்மீகம் மட்டுமல்ல. இது ஒவ்வொருவருக்கும் சுயத்திலிருந்து சமூகத்திற்குச் செல்லும் பாதையைக் காட்டுகிறது. இது மக்களிடமிருந்து உலகிற்கு ஒரு பயணம். இந்த மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு எழுத்தும் ஒரு மந்திரம். நவ்கார் மஹாமந்திரத்தை உச்சரிக்கும் போது பஞ்ச பரமேஷ்டியை வணங்குகிறோம். பஞ்ச பரமேஷ்டிகள் யார்? அரிஹந்த் - அறிவை மட்டுமே பெற்றவர்கள், 12 தெய்வீக குணங்களைக் கொண்ட பெரிய மனிதர்களுக்கு அறிவூட்டுபவர்கள். சித்தர் - 8 கர்மாக்களை அழித்து, முக்தி அடைந்தவர்கள், 8 தூய குணங்களைக் கொண்டவர்கள். ஆச்சார்ய - வழிகாட்டிகளான மஹாவிரதத்தை பின்பற்றுபவர்களின் ஆளுமை 36 குணங்கள் நிறைந்தது. உபாத்யாயா - இரட்சிப்பின் பாதையின் அறிவை போதனைகளாக வார்ப்பவர்கள், 25 குணங்கள் நிறைந்தவர்கள். சாது - தவம் என்னும் நெருப்பில் தங்களை சோதித்துப் பார்ப்பவர்கள். முக்தியை நோக்கி பயணிப்பவர்களிடம் 27 பெரிய குணங்களும் உள்ளன.

நண்பர்களே,

நாம் நவ்கார் மஹாமந்திரத்தை உச்சரிக்கும் போது, 108 தெய்வீக குணங்களை வணங்குகிறோம். மனித குலத்தின் நலனை நினைவில் கொள்கிறோம். உங்களை நம்புங்கள், உங்கள் சொந்த பயணத்தைத் தொடங்குங்கள், எதிரி வெளியே இல்லை, எதிரி உள்ளே இருக்கிறார். எதிர்மறை சிந்தனை, அவநம்பிக்கை, பகைமை, சுயநலம் இவர்கள்தான் எதிரிகள். இவற்றை தோற்கடிப்பதே உண்மையான வெற்றி. அதனால்தான் சமண மதம் நம்மை நாமே வெல்லத் தூண்டுகிறதே தவிர, வெளி உலகை அல்ல. நம்மை நாமே வெல்லும்போது, நாம் அரிஹந்த் ஆகிறோம். எனவே, நவ்கார் மஹாமந்திரம் ஒரு கோரிக்கை அல்ல. அது ஒரு பாதை. ஒரு நபரை உள்ளிருந்து தூய்மைப்படுத்தும் பாதை. இது ஒரு நபருக்கு நல்லிணக்கத்தின் பாதையைக் காட்டுகிறது.

நண்பர்களே,

நவ்கார் மஹாமந்திரம் உண்மையிலேயே மனித தியானம், சாதனா, சுய சுத்திகரிப்பு ஆகியவற்றின் மந்திரமாகும். இந்த மந்திரம் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த நித்திய மகாமந்திரம், இந்தியாவின் மற்ற ஸ்ருதி-ஸ்மிருதி மரபுகளைப் போலவே, முதலில் பல நூற்றாண்டுகளாக வாய்மொழியாகவும், பின்னர் கல்வெட்டுகள் மூலமாகவும், இறுதியாக பிராகிருத கையெழுத்துப் பிரதிகள் மூலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும், இன்றும் நம்மை வழிநடத்துகிறது.

 

வாழ்க்கையின் 9 கூறுகள் உள்ளன என்பதை நாம் அறிவோம். இந்த ஒன்பது கூறுகளும் வாழ்க்கையை முழுமையை நோக்கி வழிநடத்துகின்றன. எனவே, 9 நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சமண மதத்தில், நவ்கார மஹாமந்திரம், ஒன்பது பூதங்கள், ஒன்பது புண்ணியங்கள், மற்ற மரபுகளில் ஒன்பது நிதி, நவத்வார், நவதுர்க்கை, நவ்த பக்தி, ஒன்பது  எங்கும் உள்ளது. ஒவ்வொரு கலாச்சாரத்திலும், ஒவ்வொரு சாதனாவிலும். நாமஜபம் 9 முறை அல்லது 27, 54, 108 முறை, அதாவது 9-ன் மடங்குகளில் செய்யப்படுகிறது. ஏனென்றால் 9 என்பது பரிபூரணத்தின் அடையாளம். 9 மணிக்கு பிறகு எல்லாம் திரும்ப நிகழ்கிறது. 9-ஐ எதனாலும் பெருக்கவும், பதிலின் மூலம் மீண்டும் 9 ஆகும். இது வெறும் கணிதம் அல்ல, இதுதான் தத்துவம். நாம் பரிபூரணத்தை அடையும்போது, நம் மனம், நமது மூளை ஆகியவை நிரந்தரத்தன்மையுடன் மேல்நோக்கி இருக்கும். புதிய விஷயங்களில் ஆசை இல்லை. முன்னேற்றம் அடைந்த பிறகும், நாம் நமது பூர்வீகத்தை விட்டு விலகிச் செல்வதில்லை, இதுதான் நவ்கார் மஹாமந்திரத்தின் சாரம்.

நண்பர்களே,

நவ்கார் மகாமந்திரத்தின் இந்தத் தத்துவம் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குடன் இணைகிறது. செங்கோட்டையில் இருந்தபடியே நான் சொன்னேன் – வளர்ந்த இந்தியா என்றால் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்று! செயலை நிறுத்தாத இந்தியா, இடை நில்லா இந்தியா. அது உச்சங்களைத் தொடும், ஆனால் அதன் வேர்களிலிருந்து துண்டிக்கப்படாது. வளர்ந்த இந்தியா தனது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்ளும். அதனால்தான் தீர்த்தங்கரர்களின் உபதேசங்களைப் பாதுகாக்கிறோம். பகவான் மகாவீரரின் 2550-வது நிர்வாண மஹோத்சவத்திற்கான நேரம் வந்தபோது, நாம் அதை நாடு முழுவதும் கொண்டாடினோம். இன்று வெளிநாட்டில் இருந்து பழங்கால சிலைகள் திருப்பி அனுப்பப்படும்போது, நமது தீர்த்தங்கரர்களின் சிலைகளும் திருப்பி அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில், 20-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர்களின் சிலைகள் வெளிநாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன, அவை ஏதோ ஒரு சமயத்தில் திருடப்பட்டவை ஆகும்.

நண்பர்களே,

இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் சமணத்தின் பங்கு விலைமதிப்பற்றது. அதைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்களில் எத்தனை பேர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு சென்றிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஜனநாயகத்தின் ஆலயமாக மாறியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அங்கும் சமணத்தின் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. ஷார்துல் துவாரத்தின் வழியாக நீங்கள் நுழைந்தவுடன், கட்டிடக்கலை கேலரியில் சம்மத் ஷிகர் தெரியும். மக்களவை நுழைவாயிலில் தீர்த்தங்கரரின் சிலை உள்ளது. இந்தச் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியது. அரசியலமைப்பு காட்சியகத்தின் கூரையில் மகாவீரரின் அற்புதமான ஓவியம் உள்ளது. 24 தீர்த்தங்கரர்களும் தெற்கு கட்டிடத்தின் சுவரில் ஒன்றாக உள்ளனர். சிலர் உயிருடன் வர நேரம் எடுக்கும், அது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வருகிறது, ஆனால் அது வலுவாக வருகிறது. இந்தத் தத்துவங்கள் நமது ஜனநாயகத்தின் திசையைக் காட்டுகின்றன, சரியான பாதையைக் காட்டுகின்றன. பண்டைய ஆகம நூல்களில் சமண மதத்திற்கான இலக்கணங்கள் மிகத் தொகுக்கப்பட்ட சூத்திரங்களில் வகுக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

இந்தியாவின் அறிவார்ந்த பெருமையின் முதுகெலும்பே சமண இலக்கியமாகும். இந்த அறிவைப் பாதுகாப்பது நமது கடமை. அதனால்தான் பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளோம். இனி சமண இலக்கியம் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய முடியும்.

மொழி வாழ்ந்தால் அறிவு பிழைக்கும். மொழி வளர்ந்தால் அறிவு விரிவடையும். நம் நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான சமண ஓலைச்சுவடிகள் உள்ளன.  துரதிர்ஷ்டவசமாக, பல முக்கியமான நூல்கள் மெதுவாக மறைந்து கொண்டிருந்தன. அதனால்தான் ஞான பாரதம் இயக்கத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம். இது இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், பழமையை நவீனத்துடன் இணைப்போம். பட்ஜெட்டில் இது மிக முக்கியமான அறிவிப்பு, நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். ஆனால் உங்கள் கவனம் ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கு குறித்து சென்றிருக்கும்.

 

நண்பர்களே,

நாங்கள் தொடங்கியுள்ள பணி ஒரு அமிர்த சங்கல்பம்! புதிய இந்தியா செயற்கை நுண்ணறிவு மூலம் வாய்ப்புகளைக் கண்டறிந்து, ஆன்மிகத்தின் மூலம் உலகிற்கு வழிகாட்டும்.

நண்பர்களே,

சமண மதத்தைப் பற்றி நான் அறிந்த வரையிலும், புரிந்து கொண்டவரையிலும் சமண மதம் மிகவும் அறிவியல் பூர்வமானது, மிகவும் உணர்திறன் கொண்டது. போர், பயங்கரவாதம் அல்லது சுற்றுச்சூழல் பிரச்சனைகள் போன்ற பல சூழ்நிலைகளை உலகம் இன்று எதிர்கொள்கிறது, அத்தகைய சவால்களுக்கான தீர்வு சமண மதத்தின் அடிப்படைக் கொள்கைகளில் உள்ளது. இது சமண பாரம்பரியத்தின் அடையாளமாக எழுதப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. எனவே, சமண மரபு மிகச்சிறிய வன்முறையைக் கூட தடை செய்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான சிறந்த செய்தி இதுவாகும். சமண மதத்தின் 5 முக்கிய கொள்கைகளைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மற்றொரு முக்கிய கொள்கை உள்ளது.  அனேகாந்த்வாத்தின் தத்துவம் இன்றைய சகாப்தத்தில் இன்னும் பொருத்தமானதாகிவிட்டது. அனேகாந்த்வாதத்தை நாம் நம்பும்போது, போர் மற்றும் மோதலுக்கான சூழ்நிலை இல்லை. அப்போதுதான் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களின் கண்ணோட்டத்தையும் புரிந்து கொள்வார்கள். இன்று முழு உலகமும் அனேகந்தவாதத்தின் தத்துவத்தை அதிகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

நண்பர்களே,

இன்று இந்தியா மீதான உலகின் நம்பிக்கை ஆழமாகி வருகிறது. நமது முயற்சிகள், நமது முடிவுகள் ஆகியவையே நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்குகின்றன.  ஏனெனில் இந்தியா முன்னேறியுள்ளது. நாம் முன்னேறிச் செல்லும்போது, இதுதான் இந்தியாவின் சிறப்பு, இந்தியா முன்னேறும்போது, மற்றவர்களுக்கும் பாதைகள் திறக்கப்படுகின்றன. இதுதான் சமண மதத்தின் சாரம். பரஸ்பர ஒத்துழைப்புடன்தான் வாழ்க்கை இயங்குகிறது. இந்தச் சிந்தனையின் காரணமாக, இந்தியா மீதான உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம். இன்று, மிகப்பெரிய நெருக்கடி என்னவென்றால், பல நெருக்கடிகளில், ஒரு நெருக்கடி அதிகம் விவாதிக்கப்படுகிறது - காலநிலை மாற்றம். இதற்கான தீர்வு என்ன? நிலையான வாழ்க்கை முறை. அதனால்தான் இந்தியா மிஷன் லைஃப் என்ற அமைப்பைத் தொடங்கியது. மிஷன் லைஃப் என்றால் 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' என்று பொருள். மேலும் சமண சமூகம் பல நூற்றாண்டுகளாக இப்படி வாழ்ந்து வருகிறது. எளிமை, கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. சமண மதத்தில் கூறப்பட்டுள்ளது. இப்போது அனைவருக்கும் பரவ வேண்டிய நேரம் இது. நீங்கள் எங்கிருந்தாலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், நிச்சயமாக மிஷன் லைஃப் கொடியை ஏந்திச் செல்லுங்கள் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

 

நண்பர்களே,

இன்றைய உலகம் தகவல் உலகம். அறிவுக் கருவூலம் கண்ணுக்குத் தெரிகிறது. ஞானத்தால் மட்டுமே சரியான பாதையைக் காண முடியும் என்று சமண மதம் போதிக்கிறது. இந்தச் சமநிலை நமது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பம் இருக்கும் இடத்தில், தொடுதலும் இருக்க வேண்டும். எங்கே திறமை இருக்கிறதோ அங்கே ஆத்மாவும் இருக்க வேண்டும். நவ்கார் மஹாமந்திரம் இந்த ஞானத்தின் ஆதாரமாக மாற முடியும். புதிய தலைமுறைக்கு, இந்த மந்திரம் வெறும் ஜபம் அல்ல, இது ஒரு திசை.

நண்பர்களே,

இன்று, உலகம் முழுவதிலும் இத்தனை பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ஒன்றாக நவ்கார் மகாமந்திரத்தை உச்சரித்திருக்கும் வேளையில், இன்று நாம் எங்கு அமர்ந்திருந்தாலும், இந்த 9 தீர்மானங்களை நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தொந்தரவு வருகிறது என்பதால் நீங்கள் கைதட்ட மாட்டீர்கள். முதல் தீர்மானம்- தண்ணீரை சேமிப்பது. இப்போது நாம் ஒவ்வொரு துளியின் மதிப்பையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு துளியையும் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

இரண்டாவது தீர்மானம்- அன்னையின் பெயரில் ஒரு மரம். கடந்த சில மாதங்களில், நாட்டில் 100 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. இப்போது ஒவ்வொருவரும் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, தாயின் ஆசியுடன் வளர்க்க வேண்டும்.

மூன்றாவது தீர்மானம் - தூய்மை இயக்கம். தூய்மையில் நுட்பமான அகிம்சை இருக்கிறது, வன்முறையிலிருந்து விடுதலை இருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு நகரமும் சுத்தமாக இருக்க வேண்டும், ஒவ்வொரு நபரும் அதற்கு பங்களிக்க வேண்டும்.

நான்காவது தீர்மானம் - உள்ளூருக்கு குரல். குறிப்பாக என் இளைஞர்களே, நண்பர்களே, மகள்களே, காலையில் எழுவது முதல் இரவு தூங்குவது வரை, பிரஷ், சீப்பு, எதுவாக இருந்தாலும் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

ஐந்தாவது தீர்மானம் - தேச தரிசனம். நீங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்யலாம், ஆனால் முதலில் இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள். நமது ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு கலாச்சாரமும், ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு பாரம்பரியமும் ஆச்சரியமானவை, விலைமதிப்பற்றவை, அதைப் பார்க்க வேண்டும்.

ஆறாவது தீர்மானம் - இயற்கை விவசாயத்தை கைக்கொள்வது. ஒரு உயிரினம் இன்னொரு உயிரைக் கொல்லக் கூடாது என்பது சமண மதத்தின் கொள்கையாகும். ரசாயனங்களிலிருந்து பூமித்தாயை விடுவிக்க வேண்டும். நாம் விவசாயிகளுடன் நிற்க வேண்டும். இயற்கை விவசாயம் என்ற மந்திரத்தை ஒவ்வொரு கிராமத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஏழாவது தீர்மானம்- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். உணவில் இந்திய பாரம்பரியத்திற்கு திரும்ப வேண்டும். முடிந்தவரை சிறுதானியங்களை தட்டில் பரிமாற வேண்டும். மேலும் உணவில் 10% குறைவான எண்ணெய் இருக்க வேண்டும், அப்போதுதான் உடல் பருமனை தவிர்க்க முடியும்!

 

நண்பர்களே,

எட்டாவது தீர்மானம் யோகா மற்றும் விளையாட்டை வாழ்க்கையில் கொண்டு வருவதாகும். வீடு அல்லது அலுவலகம், பள்ளி அல்லது பூங்கா என எதுவாக இருந்தாலும், யோகா விளையாடுவதையும் செய்வதையும் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒன்பதாவது தீர்மானம் ஏழைகளுக்கு உதவுவது. ஒருவரின் கையைப் பிடிப்பது, ஒருவரின் தட்டை நிரப்புவதுதான் உண்மையான சேவை.

நண்பர்களே,

இந்தப் புதிய தீர்மானங்கள் நமக்கு புதிய சக்தியைக் கொடுக்கும், இது எனக்கு உத்தரவாதம். நமது புதிய தலைமுறைக்கு புதிய திசை கிடைக்கும். நமது சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் இரக்கம் அதிகரிக்கும்.

இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எந்த மகிழ்ச்சியை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன், ஏனென்றால் இதற்கு முன்பும் கூட இந்த விஷயங்களுடன் நான் தொடர்பு கொண்டிருந்தேன். இந்த நிகழ்வில் நான்கு பிரிவுகளும் ஒன்றிணைந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்ச்சி நமக்கு உத்வேகம், நமது ஒற்றுமை, நமது ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் சக்தி மற்றும் ஒற்றுமையின் அடையாளம் பற்றிய உணர்வாக மாறியுள்ளது. இந்த வழியில் நாட்டின் ஒற்றுமையின் செய்தியை நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

 

நண்பர்களே,

இன்று நாட்டின் பல இடங்களில் குரு பகவந்தர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவது நமக்கு அதிர்ஷ்டம். இந்த உலகளாவிய நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ஒட்டுமொத்த ஜெயின் குடும்பத்தையும் நான் வணங்குகிறேன். நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் கூடியிருக்கும் நமது ஆச்சார்ய பகவந்த்கள், மாரா சாஹிப், முனி மகராஜ், ஷ்ராவகர்கள், ஷ்ரவிகாக்கள் ஆகியோருக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக ஜிட்டோவை நான் குறிப்பாக பாராட்டுகிறேன். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், உலகின் மூலையிலிருந்தும் வந்துள்ள பிரமுகர்களே, இந்த வரலாற்று நிகழ்வுக்காக உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். நன்றி.

ஜெய் ஜினேந்திரா.

ஜெய் ஜினேந்திரா.

ஜெய் ஜினேந்திரா.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From a carved table gifted by Putin to PM Modi to selection of Chola bronzes, over 100 artefacts find pride of place in new PMO

Media Coverage

From a carved table gifted by Putin to PM Modi to selection of Chola bronzes, over 100 artefacts find pride of place in new PMO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam emphasising on sacred Earth as a source of strength to the nation
March 10, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam emphasising on sacred Earth as a source of strength to the nation:

“यार्णवेऽधि सलिलमग्र आसीद्यां मायाभिरन्वचरन्मनीषिणः।

यस्या हृदयं परमे व्योमन्त्सत्येनावृतममृतं पृथिव्याः।

सा नो भूमिस्त्विषिं बलं राष्ट्रे दधातूत्तमे॥”

The Subhashitam conveys that, the Earth, which is filled with water within the oceans, and surrounded by water outside, which thoughtful scholars have understood through their wisdom, and whose heart is covered by the eternal truth in the vast sky – may that earth, sustain our energy and strength in a noble nation.

The Prime Minister wrote on X;

“यार्णवेऽधि सलिलमग्र आसीद्यां मायाभिरन्वचरन्मनीषिणः।

यस्या हृदयं परमे व्योमन्त्सत्येनावृतममृतं पृथिव्याः।

सा नो भूमिस्त्विषिं बलं राष्ट्रे दधातूत्तमे॥”