ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிக நீளமான 9.2 கி.மீ நீளமுள்ள செனானி-நஸ்ரி சாலை சுரங்கப்பாதையை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
அந்த சுரங்கத்தின் முழு நீளத்திற்கும் பயணம் மேற்கொண்ட பிரதமருக்கு அந்த சுரங்கத்தின் முக்கிய அம்சங்கள் விளக்கி கூறப்பட்டது.
உதம்பூரில் கூடியிருந்த பொது மக்களிடம் உரையாற்றிய பிரதமர் இந்த சுரங்கப்பாதை சர்வதேச தரத்தில் அமைந்திருப்பதாகவும் அனைத்து சிறந்த தரக்கோட்படுகளுக்கு இணையாக உள்ளதாகவும் கூறினார். இந்த சுரங்கப்பாதை சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதாகவும் அது உலக வெப்பமயமாதலை எதிர்த்து நடக்கு போராட்டத்திற்கு உதவும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். சில வழி தவறிய இளைஞர்கள் கற்களை எறிந்தாலும் காஷ்மீரின் இளைஞர்கள் உட்கட்டமைப்பு அமைக்க கற்களை வெட்டுகின்றனர். இந்த சுரங்கப்பாதை சுற்றுலாவை ஊக்குவிக்கும், அதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும், என்று கூறினார்.
வன்முறை மற்றும் பயங்கரவாதம் என்றும் எவருக்கும் உதவாது என்று பிரதமர் கூறினார். ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சர் மெஹ்பூபா முப்தி அவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மத்திய அரசு அம்மாநிலத்திற்காக அறிவித்த திட்டங்களின் பணிகள் துவங்கிவிட்டது என்று கூறினார்.
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் கொள்கைகள் மற்றும் பணிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மத்திய அரசின் மூல மந்திரம் வளர்ச்சி என்றும் அது மக்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியம் என்றும் கூறினார்.
Youth of Kashmir have a choice to select one of the two paths- one of tourism the other of terrorism: PM
Youth of Jammu & Kashmir worked very hard in the making of the Chenani - Nashri Tunnel: PM
With our mantra of Kashmiriyat, Jamhuriyat & Insaniyat, we would take Kashmir to newer heights of progress: PM
Chenani-Nashri tunnel is built at the cost of thousands of crores rupees. But it defines the hard work of the youth of J&K: PM




