குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 242025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில்  கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போதுபிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது" என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார்.

பீகார் மாநிலம் முங்கர் பகுதியைச் சேர்ந்த பங்கேற்பாளர் ஒருவருடன் கலந்துரையாடிய பிரதமர்முங்கர் நிலம் யோகாவுக்காக உலக அளவில் புகழ் பெற்றது என்றும்தற்போது முழு உலகமும் யோகாவைத் தழுவுகிறது என்றும் கூறினார்.

தூய்மை இந்தியா இயக்கம்தேசிய சுகாதார இயக்கம் போன்ற முன்முயற்சிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்திருப்பது மட்டுமின்றிஇளைஞர்களையும் ஈர்த்துள்ளது என்று மற்றொரு பங்கேற்பாளர் கூறினார். ஒவ்வொருவரும் காந்தம் போல பிரதமரால் ஈர்க்கப்பட்டனர் என்றும்இதுபோன்ற ஆளுமை கொண்ட ஒரு பிரதமரை பெற்றிருப்பது தேசத்திற்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். 140 கோடி இந்தியர்களும் தூய்மையை பராமரிக்க உறுதி பூண்டால்இந்தியா எப்போதும் தூய்மையான நாடாகவே இருக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

ஒடிசாவைச் சேர்ந்த மற்றொரு பங்கேற்பாளர் திரு மோடியிடம் வெற்றியின் உண்மையான விளக்கம் என்ன என்று கேட்டார். அதற்கு அவர்ஒருவர் ஒருபோதும் தோல்வியை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றார். தோல்வியை ஏற்றுக்கொள்பவர்கள் ஒருபோதும் வெற்றியை அடைவதில்லைஆனால் அதிலிருந்து கற்றுக்கொள்பவர்கள் உச்சத்தை அடைகிறார்கள் என்பதை அவர் எடுத்துரைத்தார். ஒருவர் ஒருபோதும் தோல்வியைக் கண்டு அஞ்சக்கூடாது என்றும்அதிலிருந்து கற்றுக்கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும்தோல்வியிலிருந்து கற்றுக்கொள்பவர்கள் இறுதியில் உச்சியை அடைகிறார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

உங்களை உற்சாகமாகவும்ஆற்றலுடனும் வைத்திருப்பது எது என்று பங்கேற்பாளர் ஒருவர் கேட்டபோது, "உங்களைப் போன்ற இளைஞர்களை சந்திப்பது எனக்கு ஆற்றலையும் உத்வேகத்தையும் அளிக்கிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள விவசாயிகளைப் பற்றி நினைக்கும் போதுஅவர்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை தாம் உணர்வதை அவர் எடுத்துரைத்தார்ராணுவ வீரர்களை நினைக்கும் போதுஎல்லையில் எத்தனை மணி நேரம் காவலுக்கு நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள் என்று கூறிய பிரதமர்நாம் அவர்களைக் கவனித்துஅவர்களைப் போல வாழ முயற்சித்தால்ஓய்வெடுப்பதற்கும் நமக்கு உரிமை இல்லை என்று நாம் உணர்வோம் என்றார் . இத்தகைய அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் போதுநாட்டின் 140 கோடி மக்களும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

 

அதிகாலையில் எழும் பழக்கம் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் என்.சி.சி கேடட்டாக இருந்ததாகவும்முகாம்களின் போது அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் தனக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்ததாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். இன்றும் கூடஅதிகாலையில் எழுந்திருக்கும் தனது பழக்கம் ஒரு மதிப்புமிக்க சொத்தாக உள்ளது என்றும்உலகம் விழித்தெழுவதற்கு முன் பல பணிகளை முடிக்க அவரை அனுமதிக்கிறது என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். அதிகாலையில் எழும் பழக்கத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்ஏனெனில் இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சத்ரபதி சிவாஜி மகராஜ் உட்பட ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி பெரிய ஆளுமைகளிடமிருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார். கடந்த காலத்தின் சிறந்த தலைவர்களிடமிருந்து படிப்பினைகளைப் பெற்றுஅந்தப் படிப்பினைகளை இன்று தேசத்திற்கு சேவை செய்ய பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

குடியரசு தின நிகழ்ச்சி ஏற்பாடுகளின் போது மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது பற்றி பங்கேற்பாளர் ஒருவரிடம் பிரதமர் கேட்டார்அதற்கு அவர் நட்பை உருவாக்குவதுபல்வேறு பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடுவதுஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க ஒன்றிணைவது என்று பதிலளித்தார். பல  வகையான மாற்றங்களைச் செய்வது பற்றியும் இது நிறைய கற்றுக்கொடுத்துள்ளது என்று அவர் கூறினார். காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பங்கேற்பாளர் ஒருவர்இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது தனக்கு  சுதந்திரமாக இருக்க கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறியபோது திரு மோடி மகிழ்ச்சி அடைந்தார். இதற்கு முன்பு வீட்டு வேலைகளைச் செய்ததில்லை என்றாலும்எல்லாவற்றையும் சுயமாக நிர்வகிக்க கற்றுக்கொள்வது ஒரு குறிப்பிடத்தக்க அனுபவமாக இருந்தது என்று அவர் எடுத்துரைத்தார். அவர் வீட்டிற்கு திரும்பியதும்தனது படிப்புடன் வீட்டு வேலைகளிலும் தனது தாய்க்கு உதவுவேன் என்று அவர் குறிப்பிட்டார்.

 

இங்கு கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடங்களில் ஒன்றுகுடும்பம் என்பது வீட்டில் நம்முடன் வசிப்பவர்கள் மட்டுமல்லஇங்குள்ளவர்களையும் உள்ளடக்கியது - நண்பர்கள் மற்றும் மூத்தவர்கள் - அனைவரும் ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்குகிறார்கள் என்று ஓர் இளம் பங்கேற்பாளர் பகிர்ந்து கொண்டபோது பிரதமர் மிகவும் நெகிழ்ந்து போனார். இது எப்போதும் நினைவில் கொள்ளப்படும் ஒரு மதிப்புமிக்க பாடம் என்று பங்கேற்பாளர் கூறினார். "ஒன்றுபட்ட பாரதம்ஒப்பற்ற பாரதம்" என்ற உணர்வை ஏற்றுக்கொள்வது இந்த அனுபவத்திலிருந்து குறிப்பிடத்தக்க பாடம் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

வரவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்களா இல்லையா என்று பங்கேற்பாளர்களிடம் திரு மோடி கேட்டபோதுஒரு பங்கேற்பாளருக்கு தேர்வு அல்லது தேர்வு செய்யப்படாதது வேறு விஷயம்முயற்சி செய்வது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பதிலளித்தார். விளைவைப் பொருட்படுத்தாமல்உங்களால் முடிந்ததைக் கொடுப்பதே மிக முக்கியமான விஷயம் என்று திரு மோடி அப்போது வலியுறுத்தினார்.

ஒரு மாத காலம் இங்கு தங்கியிருந்த பங்கேற்பாளர்களிடம்தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் இந்தியா காரணமாக தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் காணொலிக் காட்சி மூலம் உரையாட முடிந்தது என்று ஒருவர் கூறினார். இந்தியாவைப் போல மலிவான டேட்டாவைக் கொண்ட நாடுகள் உலகெங்கிலும் உள்ளன. இதன் விளைவாகநாட்டில் உள்ள ஏழைகள் கூட காணொலி காட்சி  மூலம் தங்கள் அன்புக்குரியவர்களுடன் வசதியாக பேச முடியும் என்று அவர் மேலும் கூறினார். யுபிஐ மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடிபுதிய தலைமுறையினர் தங்கள் பாக்கெட்டில் பணத்தை எடுத்துச் செல்வதே இல்லை என்று குறிப்பிட்டார்.

 

தேசிய மாணவர் படையில் இதுவரை இல்லாத மதிப்புமிக்க அம்சங்கள் என்னென்ன என்று பிரதமர் மோடியிடம் கேட்டபோதுநேரம் தவறாமைநேர மேலாண்மைதலைமைப் பண்பு என்று ஒருவர் பதிலளித்தார். ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தல்சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் போன்ற பொது சேவை தேசிய மாணவர் படையிலிருந்து கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் என்று மற்றொரு பங்கேற்பாளர் எடுத்துரைத்தார். இந்திய அரசு நடத்தும் மை பாரத் அல்லது மேரா யுவ பாரத் திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர்மூன்று கோடிக்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர் என்றார். வளர்ந்த இந்தியா குறித்த விவாதங்கள்விநாடி வினா போட்டிகள்கட்டுரை எழுதுதல்பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பங்கேற்பாளர்கள் செய்ததாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மை பாரத் வலைதளத்தில் விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை திரு மோடி கேட்டுக் கொண்டார்.

2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக (விக்சித் பாரத்) மாற்ற இந்தியாவும்  இந்தியர்களும்  நிர்ணயித்துள்ள இலக்கு குறித்து விவாதித்த பிரதமர்140 கோடி மக்களும் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய தீர்மானித்தால்இலக்கை அடைவது கடினமாக இருக்காது என்றார். "நமது கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம்வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நாம் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக மாற முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

நம்மில் யார் அன்னையரை ஆழமாக நேசிக்கிறோம்பூமித்தாயை யார் அந்த அளவுக்கு நேசிக்கிறோம்  என்று பங்கேற்பாளர்களிடம் கேட்ட திரு மோடி,   நமது தாய்க்கும்  தாய் பூமிக்கும் மரியாதை செலுத்தும் வகையில் "தாயின் பெயரால் ஒரு மரக்கன்று " என்ற இயக்கம் தொடங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒவ்வொருவரும் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நட்டுஅது ஒருபோதும் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த திட்டத்தின் முதல் பயனாளி பூமித்தாயாக இருப்பாள் என்றும் அவர் கூறினார்.

 

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடிய திரு மோடிசூரியனின் முதல் கதிர்கள் இந்தியாவை வந்தடையும் இடமே அருணாச்சலப் பிரதேசத்தின் சிறப்பம்சம் என்றார். அருணாச்சலப் பிரதேசத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் "ராம் ராம்" அல்லது "நமஸ்தே" என்பதற்கு பதிலாக "ஜெய் ஹிந்த்" என்று வணங்குகிறார்கள் என்று அவர் கூறினார். அருணாச்சலப் பிரதேச மக்களின் பன்முகத்தன்மைகலைஇயற்கை அழகு மற்றும் அன்பை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என்று பிரதமர் ஊக்குவித்தார். மிசோரம்மணிப்பூர்நாகாலாந்துசிக்கிம்திரிபுராஅசாம்மேகாலயா உள்ளிட்ட அஷ்டலட்சுமி பிராந்தியம் முழுவதையும் பார்வையிடுமாறு மக்களை வலியுறுத்திய பிரதமர்அதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட போதாது என்றார் .

நாட்டு நலப்பணித்திட்ட குழுவுடன் பணியாற்றும் போதுதங்கள் பகுதியில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட பணிகள் ஏதேனும் உள்ளதா என்று பங்கேற்பாளர்களிடம் பிரதமர் கேட்டார். தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஜார்க்கண்டைச் சேர்ந்த பங்கேற்பாளர் ஒருவர்மூங்கில் பொருட்களை வடிவமைப்பதில் பெயர் பெற்ற தும்காவில் உள்ள மஹிரி சமூகத்திற்கு உதவுவது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும் என்று கூறினார். அவர்களின் தயாரிப்புகள் பருவகாலத்தில் மட்டுமே விற்கப்படுவதால் சமூகம் சவால்களை எதிர்கொண்டது என்று அவர் கூறினார். இந்த பிரிவு அத்தகைய கைவினைஞர்களை அடையாளம் கண்டுஊதுபத்திகளை (அகர்பத்தி) தயாரிக்கும் தொழிற்சாலைகளுடன் இணைத்தது என்று அவர் கூறினார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள வனப்பகுதிகளில் அகார் மரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும்இது அதன் தனித்துவமான மற்றும் இனிமையான நறுமணத்திற்கு பெயர் பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மிகவும் மதிப்புமிக்கது மற்றும் உலகின் மிகவும் விலையுயர்ந்த எண்ணெய்களில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். அகாரின் வளமான நறுமணம் இந்த நறுமணத்துடன் ஊதுபத்திகளை (அகர்பத்தி) தயாரிக்கும் பாரம்பரியத்திற்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார்.

 

அரசின் மின்னணு சந்தை பற்றி திரு மோடி எடுத்துரைத்தார். உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை போர்ட்டலில் பதிவு செய்ய உதவுமாறு படித்த இளைஞர்களை அவர் ஊக்குவித்தார். பொருட்கள் மற்றும் விலைகளை பட்டியலிடுவதன் மூலம்அந்த பொருட்களுக்கு அரசு ஆர்டர்களை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதுஇது விரைவான பரிவர்த்தனைக்கு உதவும் என்று பிரதமர் விளக்கினார். கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 3 கோடி பெண்களை "லட்சாதிபதி சகோதரி" ஆக மாற்றும் தனது தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொண்ட பிரதமர்அவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 1.3 கோடியை எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு பங்கேற்பாளர் தனது தாய் தையல் கற்றுக்கொண்டதாகவும்இப்போது நவராத்திரியின் போது அணியும் பாரம்பரிய சானியாக்களை உருவாக்குவதாகவும் பகிர்ந்து கொண்டார். இந்த சானியாக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார். இது ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக அமைகிறது என்று கூறிய அவர்வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் "லட்சாதிபதி சகோதரி" திட்டம் முக்கிய பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்தினார்.

நேபாளத்தைச் சேர்ந்த பங்கேற்பாளர் ஒருவர்இந்தியாவுக்கு வருகை தந்த தம்மை பிரதமர் சந்திப்பது  உற்சாகம் அளிப்பதாக தெரிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். தனக்கு வழங்கப்பட்ட நிபந்தனையற்ற உபசரிப்புக்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்க அவர் ஒரு கணம் எடுத்துக் கொண்டார். மொரீஷியஸிலிருந்து வந்த மற்றொரு பங்கேற்பாளர்தாங்கள் புறப்படுவதற்கு முன்மொரீஷியஸுக்கான இந்திய ஐ கமிஷனரை சந்தித்துஇந்தியாவை தங்களின் "இரண்டாவது வீடு" என்று குறிப்பிட்டார். இந்தியா அவர்களின் இரண்டாவது வீடு மட்டுமல்லஅவர்களின் முன்னோர்களின் முதல் இல்லமும் கூட என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்மத்திய இளைஞர் நலன்விளையாட்டுதொழிலாளர் நலன்  மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Nuclear Leap: Bharat’s PFBR Signals New Era of Energy Independence

Media Coverage

Nuclear Leap: Bharat’s PFBR Signals New Era of Energy Independence
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Mr. Péter Magyar on election victory in Hungary
April 13, 2026

Prime Minister Shri Narendra Modi today extended his heartiest congratulations to Mr. Péter Magyar and the Tisza Party on their resounding election victory.

The Prime Minister remarked that India and Hungary are bound by a deep-rooted friendship, shared values, and enduring mutual respect. Shri Modi stated that he looks forward to working closely with Mr. Magyar to further strengthen bilateral cooperation between the two nations and advancing the vital India-EU Strategic Partnership for the shared prosperity and well-being of the people of both regions.

The Prime Minister wrote on X:

"Heartiest congratulations to Mr. Péter Magyar and the Tisza Party on your resounding election victory. India and Hungary are bound by deep-rooted friendship, shared values and enduring mutual respect. I look forward to working closely with you to further strengthen our bilateral cooperation and to advance the vital India-EU Strategic Partnership for the shared prosperity and well-being of our peoples.

@magyarpeterMP "