மாண்புமிகு தலைவர்களே,

இந்த சிறப்பு நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

எனது நண்பர் அதிபர் திரு பைடனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று, நாம் அனைவரும் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதைக் கண்டோம்.

இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்புக்கான ஒரு பயனுள்ள ஊடகமாக வரும் காலங்களில் இது மாறும்.

இது உலகளாவிய இணைப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரு நிலையான திசையை வழங்கும்.

இந்த முன்முயற்சி குறித்து

மேதகு அதிபர் பைடன்.

 

இளவரசர், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான்,

மாண்புமிகு அதிபர் ஷேக் முகமது பின் சயீத்,

மேதகு அதிபர் மக்ரோன்,

மேதகு அதிபர் ஷோல்ஸ்,

மேதகு பிரதமர் மெலோனி,

மேதகு அதிபர் வான் டெர் லேயன்

 ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

நண்பர்களே,

வலுவான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை மனித நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தள தூண்களாக செயல்படுகின்றன.

இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தில் இந்த துறைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது.

இது தவிர, முன்னெப்போதும் இல்லாத அளவு முதலீடு, சமூகம், டிஜிட்டல் மற்றும் நிதி சார்ந்த  உள்கட்டமைப்பை நோக்கி செலுத்தப்படுகிறது.

இந்த முயற்சிகள் மூலம், வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறோம்.

உலகளாவிய வளரும் நாடுகளின் பல நாடுகளில் ஒரு நம்பகமான கூட்டாளியாக, எரிசக்தி, ரயில்வே, நீர், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் பல துறைகளில் உள்கட்டமைப்பு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.

இந்த முயற்சிகள் முழுவதிலும், தேவை சார்ந்த மற்றும் வெளிப்படையான அணுகுமுறைக்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான கூட்டாண்மை மூலம், உலகளாவிய வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு இடைவெளியைக் குறைப்பதில் நாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும்.

நண்பர்களே,

பிராந்திய எல்லைகளினால் இந்தியா இணைப்பை  அளவிடுவதில்லை.

அனைத்து பகுதிகளுடனும் இணைப்பை அதிகரிப்பது, இந்தியாவின் முக்கிய முன்னுரிமையாகும்.

பரஸ்பர வர்த்தகம் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையையும் அதிகரிப்பதற்கான ஆதாரமாக இணைப்பு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

இணைப்பு முன்முயற்சிகளை ஊக்குவிக்கும் போது, சில அடிப்படை கொள்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது அவசியம்:

சர்வதேச விதிமுறைகள், விதிகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்குதல் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல், கடன் சுமைக்கு பதிலாக நிதி நம்பகத்தன்மையை ஊக்குவித்தல், அனைத்து சுற்றுச்சூழல் அளவுருக்களையும் பின்பற்றுதல்.

இன்று, இணைப்புக்கான ஒரு பெரிய முயற்சியை நாம் எடுக்கும்போது, வரும் தலைமுறையினரின் கனவுகளை விரிவுபடுத்துவதற்கான விதைகளை நாம் விதைக்கிறோம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் அனைத்துத் தலைவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பொறுப்புத்துறப்பு - இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s data centre boom: Mumbai cracks global top 15, Hyderabad pipeline set to surge 15x

Media Coverage

India’s data centre boom: Mumbai cracks global top 15, Hyderabad pipeline set to surge 15x
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கேலோ இந்தியா கலந்துரையாடல் - இளைஞர்களிடையே நாளை உரையாற்றுகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி
August 26, 2026
Khelo India Dialogue will bring together sports, youth leadership, civic responsibility, volunteering, fitness and nation-building on a common platform
Yuva Samvaad under Khelo India Dialogue to Focus on Five Key Themes: Sports, Olympic Aspirations, Youth Leadership, Viksit Bharat and Nasha Mukt Yuva

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஆகஸ்ட் 27) காலை 11 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம் 'கேலோ இந்தியா கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் விளையாட்டுப் பயணத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதையும், அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவதையும், வளரச்சியடைந்த இந்தியாவுக்கான யோசனைகளை அவர்கள் வழங்குவதையும் இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

2026 தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மை பாரத் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கல்லூரிகளில் இளைஞர்களின் பங்கேற்புடன் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தேசிய வளர்ச்சித் திட்டத்தின் மையத்தில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை வைத்து, ஆரோக்கியமான, ஒழுக்கமான, விளையாட்டுத் திறனுள்ள ஒரு தேசத்தை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நாடு தழுவிய கேலோ இந்தியா கலந்துரையாடல், விளையாட்டு, இளைஞர் தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு, தன்னார்வத் தொண்டு, உடற்தகுதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைக்கும். இது, நாட்டின் விளையாட்டு லட்சியங்களில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஒரு நேரடி வழியை வழங்குவதோடு, இந்தியாவின் இளைஞர்களின் விளையாட்டுச் சூழல் அமைப்பு குறித்த தொடர் உரையாடலில் அவர்களின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் இடம்பெறுவதையும் உறுதி செய்யும்.

தேசிய அளவிலான இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளம் பங்கேற்பாளர்கள், மை பாரத் தன்னார்வலர்கள், உள்ளூர் விளையாட்டு வீரர்கள், பொதுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளூர் அளவிலான கலந்துரையாடல்கள் நடைபெறும். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், முன்னணி இந்திய விளையாட்டு வீரர்கள், பதக்கம் வென்றவர்களுக்கும் இடையேயான நேரடிக் கலந்துரையாடல் இந்த முன்முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் மைய அம்சமாக யுவ சம்வாத் எனப்படும் இளையோர் உரையாடல் இருக்கும். இதில் இளம் பங்கேற்பாளர்கள் தங்களின் சொந்த யோசனைகள், கண்ணோட்டங்கள், எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த அழைக்கப்படுவார்கள். இந்த உரையாடல் கீழ்க்கண்ட ஐந்து கருப்பொருள்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படும்:

* மேம்பட்ட வசதிகள், பயிற்சி, விளையாட்டு அறிவியல், அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் விளையாட்டுச் சூழலை மேம்படுத்துதல்;

* அறிவியல் பூர்வமாக திறமை கண்டறிதல், வெளிப்படையான தேர்வு, நீண்டகால விளையாட்டு வீரர் நலன் ஆகியவற்றின் மூலம் 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்காக திறமையாளர்களை வளர்த்தெடுத்தல்;

* மை பாரத் தலைமையிலான தன்னார்வத் தொண்டு மூலம் இளைஞர் தலைவர்களை உருவாக்குதல்;

* சமூக உணர்வு, எதிர்காலத்திற்குத் தயாரான திறன்கள், கட்டமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி இளைஞர்களுக்கு வலுவூட்டுதல்;

* போதைப்பொருள் அற்ற இளைஞர் இயக்கத்தை ஊக்குவித்தல்.