கோர் லோடிங் பணி முடிந்தவுடன், முதல் அணுகுமுறை நிறைவடைந்து, பின்னர் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும்
தற்சார்பு இந்தியா என்ற உணர்வில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை உட்பட 200- க்கும் மேற்பட்ட இந்திய தொழில்களின் பங்களிப்புடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் அணுசக்தித் திட்டம் எரிசக்தி பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி என்ற இரட்டை இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது விரைவு ஈனுலையில் (500 மெகாவாட் "கோர் லோடிங்" பணித் தொடங்கப்பட்டதை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

 

பிரதமர், அணு உலையின் பெட்டகம், கட்டுப்பாட்டு அறையை சுற்றிப் பார்த்தார். இந்த அணு உலையின் முக்கிய அம்சங்கள் குறித்து அவரிடம் விளக்கப்பட்டது.

இந்தியாவின் மிக மேம்பட்ட அணு உலை-முன்மாதிரி விரைவு உற்பத்தி உலையை கட்டுவதற்கும், இயக்குவதற்கும் பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் (பாவினி) உருவாக்க 2003-ம் ஆண்டில் அரசு ஒப்புதல் அளித்தது.

தற்சார்பு இந்தியாவின் உண்மையான உணர்வுக்கு ஏற்ப, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இந்திய தொழில் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் புரோட்டோ வகை விரைவு  ஈனுலை முழுமையாக வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே கட்டப்பட்டுள்ளது.  இந்த ஈனுலை செயல்பாட்டுக்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும் விரைவு ஈனுலை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்.

 

விரைவு ஈனுலை தொடக்கத்தில் யுரேனியம்-புளூட்டோனியம் கலந்திப ஆக்சைடு எரிபொருளைப் பயன்படுத்தும். எரிபொருள் மையத்தைச் சுற்றியுள்ள யுரேனியம் -238 பிளாங்கட் அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய அணுசக்தி மாற்றத்திற்கு உட்படும். இதனால் 'ஈனுலை' என்ற பெயரைப் பெறுகிறது. த்ரோயம் -232-ன் பயன்பாடு, இது ஒரு பிளவுப் பொருள் அல்ல. உருமாற்றத்தின் மூலம், தோரியம் பிளவுபடும் யுரேனியம் -233 ஐ உருவாக்கும், இது மூன்றாம் கட்டத்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். இந்தியாவின் அபரிமிதமான தோரியம் இருப்புக்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான ஒரு படிநிலையாக விரைவு ஈனுலை உள்ளது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, விரைவு ஈனுலை ஒரு மேம்பட்ட மூன்றாம் தலைமுறை உலை ஆகும், இது அவசரநிலை ஏற்பட்டால் ஆலையை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் மூடுவதை உறுதி செய்யும் உள்ளார்ந்த செயலமிக்க பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.  முதல் கட்டத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதால், அணுக்கழிவுகள் உருவாகும் கணிசமான குறையும்  என்ற வகையில் விரைவு ஈனுலை பெரும் நன்மையை வழங்குகிறது. இதன் மூலம் பெரிய புவி சார்ந்த அகற்றல் வசதிகளின் தேவை தவிர்க்கப்படுகிறது.

 

கோர் லோடிங் பணி முடிந்ததும், முக்கியமான நிலைக்கான முதல் அணுகுமுறை நிறைவடையும், இது பின்னர் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

குறிப்பிடத்தக்க வகையில், மேம்பட்ட தொழில்நுட்பம் இருந்தபோதிலும், முதலீட்டு செலவு, ஒரு யூனிட் மின்சார செலவு இரண்டும் மற்ற அணுசக்தி, மரபுசார் மின் நிலையங்களுடன் ஒப்பிடத்தக்கது.

 

எரிசக்தி பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி என்ற இரட்டை இலக்குகளை அடைவதற்கு இந்திய அணுமின் திட்டத்தின் வளர்ச்சி இன்றியமையாததாகும். மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய பொறுப்புள்ள அணுசக்தி என்ற முறையில், அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், மின்சாரம் மற்றும் மின்சாரம் சாராத துறைகளில் அணுசக்தி தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
National Technology Day Special: India’s patent boom is rewiring the auto industry

Media Coverage

National Technology Day Special: India’s patent boom is rewiring the auto industry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 12, 2026
May 12, 2026

Building a Trusted India: Modi's Leadership in Finance, Manufacturing, and Global Partnerships