பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமர் திரு அன்வர் பின் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார்.

2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த மலேசிய பிரதமரின் அரசு முறைப் பயணத்திற்குப் பிறகு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா - மலேசியா இடையே இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்காக அந்நாட்டு பிரதமர் திரு இப்ராஹிமுக்கு, பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர், பலதரப்புவாதம், பிராந்திய பாதுகாப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

ஆசியான் அமைப்பை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆசியான் – இந்தியா இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மலேசியா அளித்து வரும் ஆதரவிற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியா - ஆசியான் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வுப் பணிகளை விரைவாக இறுதி செய்யும் நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
It was a very good meeting with Prime Minister of Malaysia, Mr. Anwar Ibrahim on the sidelines of the BRICS Summit in Brazil. Malaysia is vital for India, having a key place in our Vision MAHASAGAR and Act East Policy.
— Narendra Modi (@narendramodi) July 7, 2025
We reviewed the ground covered in our bilateral relations,… pic.twitter.com/LolsDORHBE
Satu pertemuan yang sangat baik telah diadakan bersama Perdana Menteri Malaysia, Dato’ Seri Anwar Ibrahim, di sela-sela Sidang Kemuncak BRICS di Brazil. Malaysia merupakan rakan penting bagi India dan memainkan peranan utama dalam Visi MAHASAGAR serta Dasar Tindakan ke Timur (Act… pic.twitter.com/CZBKeEcJMz
— Narendra Modi (@narendramodi) July 7, 2025


