பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.
ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், முழுமையான வளர்ச்சி, பொருளாதார சுதந்திரத்தை நோக்கிய இந்தியாவின் பரந்த இலக்கை முன்னெடுத்துச் செல்வதில் அதன் முக்கியப் பங்கை சுட்டிக் காட்டினார். இந்த மாபெரும் சுத்திகரிப்பு நிலையம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கும் எனவும் இந்தச் சாதனைக்காக ராஜஸ்தான் இளைஞர்களை வாழ்த்துவதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
நிர்வாகப் பணி கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், தமது அரசின் இடைவிடாத திட்டச் செயல் வேகத்தை முந்தைய ஆட்சிகளுடன் ஒப்பிட்டார். சவால் எவ்வளவு பெரியதாகவோ அல்லது எதிர்பாராததாகவோ இருந்தாலும், புதிய இந்தியா தனது கடுமையான தீர்மானங்களிலிருந்து பின்வாங்காது எனவும் தனது வளர்ச்சி வேகத்தையும் குறைக்காது என்றும் திரு நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.

மேற்கு ஆசிய மோதல்களை 21-ம் நூற்றாண்டின் மிகக் கடுமையான எரிசக்தி நெருக்கடி என்று அவர் கூறினார். இதனால் வளர்ந்த நாடுகள் கூட எரிபொருள் பற்றாக்குறையுடன் போராடி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்த சர்வதேச சூழலை உள்நாட்டு மீள்திறனுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், துல்லியமான உத்திசார் மதிப்பீடுகள், சமச்சீரான வளப் பயன்பாடு, ராஜதந்திரம் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளதாகத் தெரிவித்தார்.

விரிவான நுகர்வோர் பாதுகாப்பு உத்திகளை எடுத்துரைத்த பிரதமர், பாரம்பரிய சிலிண்டர் எரிவாயுவுக்கான மிகப்பெரிய தேவையைக் குறைப்பதற்காக, குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகளைத் தீவிரமாக விரிவுபடுத்தியதை விளக்கினார். குறுகிய காலத்திற்குள் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளைக் குழாய்வழி கட்டமைப்புடன் அரசு வெற்றிகரமாக இணைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலரிலிருந்து 120 டாலராக உயர்ந்த, கடுமையான விலை உயர்வு குறித்துப் பேசிய பிரதமர், மக்களைப் பாதுகாப்பதற்காக அரசு செய்த நிதித் தியாகங்களை எடுத்துரைத்த பிரதமர், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெரும் இழப்பை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

நாட்டின் நவீன உள்கட்டமைப்பு மையமாக ராஜஸ்தான் திகழ்கிறது என்பதை மீண்டும் எடுத்துரைத்த பிரதமர், புதிய ஜோத்பூர் விமான நிலைய முனையம், ஜெய்ப்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்திகளாகக் குறிப்பிட்டார். பெருமளவில் விரிவாக்கப்பட்ட போக்குவரத்து கட்டமைப்புகளும் எரிசக்தித் திட்டங்களும் மாநிலத்தின் மாற்றத்திற்கான பயணத்தின் தொடக்கமே என்றும் இது தொடரும் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்து, தமது உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.

மேற்கு ஆசிய மோதல்களை 21-ம் நூற்றாண்டின் மிகக் கடுமையான எரிசக்தி நெருக்கடி என்று அவர் கூறினார். இதனால் வளர்ந்த நாடுகள் கூட எரிபொருள் பற்றாக்குறையுடன் போராடி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்த சர்வதேச சூழலை உள்நாட்டு மீள்திறனுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், துல்லியமான உத்திசார் மதிப்பீடுகள், சமச்சீரான வளப் பயன்பாடு, ராஜதந்திரம் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளதாகத் தெரிவித்தார்.
விரிவான நுகர்வோர் பாதுகாப்பு உத்திகளை எடுத்துரைத்த பிரதமர், பாரம்பரிய சிலிண்டர் எரிவாயுவுக்கான மிகப்பெரிய தேவையைக் குறைப்பதற்காக, குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகளைத் தீவிரமாக விரிவுபடுத்தியதை விளக்கினார். குறுகிய காலத்திற்குள் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளைக் குழாய்வழி கட்டமைப்புடன் அரசு வெற்றிகரமாக இணைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலரிலிருந்து 120 டாலராக உயர்ந்த, கடுமையான விலை உயர்வு குறித்துப் பேசிய பிரதமர், மக்களைப் பாதுகாப்பதற்காக அரசு செய்த நிதித் தியாகங்களை எடுத்துரைத்த பிரதமர், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெரும் இழப்பை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

மேற்கு ஆசிய மோதல்களை 21-ம் நூற்றாண்டின் மிகக் கடுமையான எரிசக்தி நெருக்கடி என்று அவர் கூறினார். இதனால் வளர்ந்த நாடுகள் கூட எரிபொருள் பற்றாக்குறையுடன் போராடி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்த சர்வதேச சூழலை உள்நாட்டு மீள்திறனுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், துல்லியமான உத்திசார் மதிப்பீடுகள், சமச்சீரான வளப் பயன்பாடு, ராஜதந்திரம் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளதாகத் தெரிவித்தார்.

விரிவான நுகர்வோர் பாதுகாப்பு உத்திகளை எடுத்துரைத்த பிரதமர், பாரம்பரிய சிலிண்டர் எரிவாயுவுக்கான மிகப்பெரிய தேவையைக் குறைப்பதற்காக, குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகளைத் தீவிரமாக விரிவுபடுத்தியதை விளக்கினார். குறுகிய காலத்திற்குள் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளைக் குழாய்வழி கட்டமைப்புடன் அரசு வெற்றிகரமாக இணைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலரிலிருந்து 120 டாலராக உயர்ந்த, கடுமையான விலை உயர்வு குறித்துப் பேசிய பிரதமர், மக்களைப் பாதுகாப்பதற்காக அரசு செய்த நிதித் தியாகங்களை எடுத்துரைத்த பிரதமர், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெரும் இழப்பை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
நாட்டின் நவீன உள்கட்டமைப்பு மையமாக ராஜஸ்தான் திகழ்கிறது என்பதை மீண்டும் எடுத்துரைத்த பிரதமர், புதிய ஜோத்பூர் விமான நிலைய முனையம், ஜெய்ப்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்திகளாகக் குறிப்பிட்டார். பெருமளவில் விரிவாக்கப்பட்ட போக்குவரத்து கட்டமைப்புகளும் எரிசக்தித் திட்டங்களும் மாநிலத்தின் மாற்றத்திற்கான பயணத்தின் தொடக்கமே என்றும் இது தொடரும் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்து, தமது உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.
Click here to read full text speech
चुनौती चाहे कितनी भी बड़ी और अप्रत्याशित क्यों न हो... नया भारत अपने संकल्पों से न पीछे हटता है... न अपनी रफ्तार कम करता है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 4, 2026
आज ही, जोधपुर में नए एयरपोर्ट टर्मिनल का उद्घाटन किया गया है।
— PMO India (@PMOIndia) July 4, 2026
ये मारवाड़ में पर्यटन, व्यापार और रोजगार को नई गति देगा: PM @narendramodi
21वीं सदी के सबसे बड़े ऊर्जा संकट पर... 21वीं सदी के नए भारत की इच्छा-शक्ति और भारत के प्रयास भारी पड़े हैं।
— PMO India (@PMOIndia) July 4, 2026
भारत ने हर स्तर पर सही फैसले लिए... संकट का समय रहते सटीक आंकलन किया... प्रभावी रणनीति बनाई... भारत के संसाधनों का संतुलित प्रयोग किया।
भारत की diplomatic power का…
आज, मैं 140 करोड़ देशवासियों का आभार प्रकट करता हूँ... उन्हें धन्यवाद कहता हूँ...
— PMO India (@PMOIndia) July 4, 2026
जिस तरह, वो इस मुश्किल समय में देश के साथ मजबूती से खड़े रहे...
जिस तरह, देशवासियों ने अफवाह, डर और भ्रम फैलाने वालों का सामना किया...
देश में अस्थिरता फैलाने की साज़िशों को नाकाम किया... देश…
अब राजस्थान और हरियाणा सरकार मिलकर शेखावटी तक पानी पहुंचाएंगे।
— PMO India (@PMOIndia) July 4, 2026
हाल ही में दोनों राज्यों के बीच समझौते पर मुहर भी लग चुकी है।
इस समझौते के तहत हथिनीकुंड बैराज से पानी राजस्थान लाया जाएगा।
इसके लिए अंडरग्राउंड पाइपलाइन बिछाई जाएगी।
इसका लाभ सीकर, चूरू, झुंझुनूं और आसपास के पूरे…


