The inauguration of Micron’s semiconductor facility marks a milestone in India’s journey towards technology leadership: PM
India, long known for its software strength, is now firmly establishing its identity in the hardware sector as well: PM
Today, India is rapidly becoming an integral part of the global semiconductor value chain: PM
This century belongs to the AI revolution: PM
If oil was the regulator of the last century, microchips will be the regulator of this century: PM
India has just one message for investors around the world, India is ready, India is Reliable, India Delivers: PM
The message has reached the world loud and clear: India is Capable, India is Competitive, India is Committed: PM

குஜராத் மாநிலம் சனந்தில் மைக்ரான் ஏடிஎம்பி (சேர்த்தல், பரிசோதித்தல், குறியிடுதல், பேக்கிங் செய்தல்) தொழிற்சாலையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகளாவிய  தொழில்நுட்ப தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லாக வணிக உற்பத்தி தொடங்கும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

 

உலகின் மிகப் பெரிய மிகவும் வெற்றிகரமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சிமாநாட்டிற்குப் பின் தற்போது மற்றொரு மைல்கல் நிகழ்வை நாம் காண்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஏற்கனவே, மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்காக அறியப்பட்ட இந்தியா தற்போது வன்பொருள் துறையில் தனது அடையாளத்தை வெகு வேகமாக பலப்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.

 

 

மைக்ரான் ஏடிஎம்பி தொழிற்சாலையைப் பொறுத்தவரை ஜூன் 2023-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டு சனந்தில் செப்டம்பர் 2023-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னோடி நிறுவனமான இதில் பிப்ரவரி 2024-ல் எந்திரங்களை நிறுவும் பணி தொடங்கியது. பிப்ரவரி 2026-ல் மனித உற்பத்தி தொடங்கியிருப்பது இந்தத் திட்டத்தின் வேகமான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

 

இந்த நூற்றாண்டு ஏஐ புரட்சியின் நூற்றாண்டாகும். இந்த மாற்றத்தில் பாலமாக திகழ்பவை செமிகண்டக்டர்கள். 20-ம் நூற்றாண்டை மேம்படுத்துவதாக எண்ணெய் இருந்த நிலையில், 21-ம் நூற்றாண்டை மேம்படுத்துவதாக மைக்ரோ சிப்கள் உள்ளன என்று திரு மோடி கூறினார். ஒரு சிறிய சிப் என்பது தொழில்புரட்சியையும், ஏஐ புரட்சியையும் இணைக்கிறது. இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் செமிகண்டக்டர் துறையும் தீவிரமாக முன்னேறுவது என இந்தியா முடிவு செய்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் எல்லாம் விழுந்துவிட்டது என பலரும் எண்ணிய போது, நாம் உறுதியோடு விதைத்த விதைகள் இப்போது வளர்ந்து பயன்தர தொடங்கியுள்ளது என்ற திரு நரேந்திர மோடி கூறினார்.

 

இந்த நூற்றாண்டு ஏஐ புரட்சியின் நூற்றாண்டாகும். இந்த மாற்றத்தில் பாலமாக திகழ்பவை செமிகண்டக்டர்கள். 20-ம் நூற்றாண்டை மேம்படுத்துவதாக எண்ணெய் இருந்த நிலையில், 21-ம் நூற்றாண்டை மேம்படுத்துவதாக மைக்ரோ சிப்கள் உள்ளன என்று திரு மோடி கூறினார். ஒரு சிறிய சிப் என்பது தொழில்புரட்சியையும், ஏஐ புரட்சியையும் இணைக்கிறது. இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் செமிகண்டக்டர் துறையும் தீவிரமாக முன்னேறுவது என இந்தியா முடிவு செய்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் எல்லாம் விழுந்துவிட்டது என பலரும் எண்ணிய போது, நாம் உறுதியோடு விதைத்த விதைகள் இப்போது வளர்ந்து பயன்தர தொடங்கியுள்ளது என்ற திரு நரேந்திர மோடி கூறினார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
In 2019, India launched its first Vande Bharat Express; seven years later came the sleeper version, and Railways now plans 260 Vande sleeper rakes with world-class features

Media Coverage

In 2019, India launched its first Vande Bharat Express; seven years later came the sleeper version, and Railways now plans 260 Vande sleeper rakes with world-class features
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 3, 2026
September 03, 2026

A- Rating to Third-Largest Wind Producer: How Modi’s Policies Are Rewriting India’s Global Rank