தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அன்பு, இரக்கம், பொறுமை, ஒழுக்கம் ஆகியவற்றின் நீடித்த அடையாளமாக புனித தலாய் லாமா திகழ்வதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவரது செய்தி அனைத்து நம்பிக்கைகளிலும் மரியாதையையும் போற்றுதலையும் தூண்டியுள்ளது என்று திரு நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எஸ்தலத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"புனித தலாய்லாமாவின் 90-வது பிறந்தநாளில் அவருக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் 140 கோடி இந்தியர்களுடன் நானும் இணைகிறேன். அவர் அன்பு, இரக்கம், பொறுமை, ஒழுக்கம் ஆகியவற்றின் நீடித்த அடையாளமாக இருந்து வருகிறார். அவரது செய்தி அனைத்து நம்பிக்கைகளிலும் மரியாதையையும் போற்றுதலையும் தூண்டியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். @DalaiLama"
@DalaiLama"
I join 1.4 billion Indians in extending our warmest wishes to His Holiness the Dalai Lama on his 90th birthday. He has been an enduring symbol of love, compassion, patience and moral discipline. His message has inspired respect and admiration across all faiths. We pray for his…
— Narendra Modi (@narendramodi) July 6, 2025


