சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிருக்கான வி.எல் 2 படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் முதல் பதக்கம் வென்றதன் மூலம் பிராச்சி யாதவ் இந்திய விளையாட்டு வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.
மகளிர் வி.எல் 2 பாரா படகுப் போட்டியில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை வென்ற பிராச்சி யாதவுக்கு வாழ்த்துக்கள்.
அவரது அசாத்தியமான செயல்திறன் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது.”
Prachi Yadav etches her name in the history of Indian sports by securing the first medal at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 23, 2023
Congratulations to @ItzPrachi_ on winning the remarkable Silver medal win in the Para Canoeing Women's VL2 final.
Her incredible performance has made the entire… pic.twitter.com/6ZdXEAS1U0


