பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் தகவல், தொடர்பு, தொழில்நுட்பம் அடிப்படையிலான, செயல்திறன் சார் ஆளுமை மற்றும் உரிய நேரம் செயலாக்கத்திற்கான பல்-மாதிரி தளமான-26வது பிரகதி கலந்துரையாடல் நடைபெற்றது.

இது வரை 25 பிரகதி சந்திப்புகளில் ரூ பத்து லட்ச கோடி முதலீட்டை கொண்ட 227 திட்டங்களின் மொத்த ஆய்வு நடைபெற்று உள்ளது. பல்வேறு துறைகளுக்கான பொது மக்கள் குறை தீர்ப்பும் ஆய்வு செய்யப்பட்டது.

|

26வது சந்திப்பில் இன்று பிரதமர் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ரயில்வே தொடர்பான கையாளுதல் மற்றும் குறை தீர்ப்பு குறித்தும் ஆய்வு செய்தார். அஞ்சல் மற்றும் ரயில்வேத் துறைகளில் கணினி முறையிலான பரிமாற்றங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் குறிப்பாக பீம் செயலி பயன்பாட்டின் மூலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

ரயில்வே, சாலை, பெட்ரோலியம், எரிசக்தித் துறைகளில் உள்ள ஒன்பது உள்கட்டமைப்புத் திட்டங்களின் வளர்ச்சியை பிரதமர் ஆய்வு செய்தார். ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரேதசம், ஒடிசா, பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டங்களில் மேற்கு மாநிலப் பிரத்யேக சரக்குப் பாதை மற்றும் சார் தாம் மஹாமார்க் விகாஸ் பரியோஜனா திட்டமும் அடங்கும்.

அம்ருத் இயக்கத்தின் செயலாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் முழுமையான கணினி மையமாக்கல் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
LIC posts 14.6% growth in June individual premium income

Media Coverage

LIC posts 14.6% growth in June individual premium income
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 10, 2025
July 10, 2025

From Gaganyaan to UPI – PM Modi’s India Redefines Global Innovation and Cooperation