கடந்த 11 ஆண்டுகளில், மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
மத்திய அரசுமேற்கொண்டு வரும் முழுமையான வளர்ச்சித் திட்டப் பணிகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளதுடன் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு பயனளித்துள்ளன: பிரதமர்

கடந்த 11 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்துடன் ஏழைகள் நலனுக்கான  திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தெரிவித்துள்ளார். அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு  சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் கூறினார். இவை வீட்டுவசதி, சுத்தமான சமையல் எரிவாயு, வங்கி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளன. மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் பலன்களை வெளிப்படையாகவும் திறமையாகவும் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நேரடி பணப் பரிமாற்றம், மற்றும்  டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:  “ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட  கருணையுடன் கூடிய மத்தியஅரசு !.

கடந்த பத்தாண்டுகளில், அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்படுவதன் மூலம் வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைத்துள்ளன. பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் வீட்டுவசதி, தூய்மையான சமையல் எரிவாயு, வங்கி சேவைகள், சுகாதாரப் பராமரிப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளன. நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில், டிஜிட்டல் பரிமாற்ற நடவடிக்கைகள், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதையும் உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாகவே 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீண்டுள்ளனர். ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ்வதற்கும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது.

11YearsOfGaribKalyan"

 

 

"बीते 11 साल में हमारी सरकार का हर कदम सेवा, सुशासन और गरीब कल्याण को समर्पित रहा है। इस दौरान हमारी उपलब्धियां ना सिर्फ अभूतपूर्व हैं, बल्कि 140 करोड़ देशवासियों के जीवन को आसान बनाने वाली हैं। मुझे पूरा विश्वास है कि देश को आगे ले जाने के अपने इन प्रयासों के साथ हम विकसित और आत्मनिर्भर भारत के लक्ष्य को जरूर हासिल करेंगे।

11YearsOfGaribKalyan"

 

 

"Our Government’s efforts towards all round development have led to transformative outcomes and benefitted the poor and marginalised.

11YearsOfGaribKalyan"

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Project Cheetah: How A Species Declared Extinct During Nehru Era Returned To India Under Modi Govt

Media Coverage

Project Cheetah: How A Species Declared Extinct During Nehru Era Returned To India Under Modi Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister visits L&T complex at Hazira, Gujarat
June 05, 2026

Prime Minister Shri Narendra Modi today visited the Larsen & Toubro (L&T) complex at Hazira, Gujarat, where he witnessed pioneering innovations being developed by the company across various sectors.

The Prime Minister highly commended the significant role played by L&T in furthering self-reliance in India's defence sector. Sharing glimpses from the visit, Shri Modi appreciated the engineering achievements and advancements being spearheaded at the facility.

In a series of posts on X, the Prime Minister shared:

"This afternoon, went to the L&T complex at Hazira. Witnessed some of their pioneering innovations across different sectors. The role played by L&T in furthering self-reliance in the defence sector is commendable.
@larsentoubro"

"Here are some more glimpses from the visit to the L&T complex in Hazira, Gujarat."