பகிர்ந்து
 
Comments

         பிரதமர் திரு நரேந்திர மோடி, பிகாருக்கு நாளை (17.02.2019) வருகை தருகிறார். பரவுனிக்கு வந்து சேரும் அவர், பீகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

     இந்தத் திட்டங்கள் நகரங்களுக்கு இடையே, குறிப்பாக பாட்னா நகரத்திற்கும் அருகே உள்ள பகுதிகளுக்கும், இணைப்பை ஏற்படுத்தும். இவை குறிப்பிடத்தக்க அளவில் நகரிலும் அப்பகுதியிலும் எரிசக்தி இருப்பை மேம்படுத்தும். இந்தத் திட்டங்கள் உர உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் பிகாரில் மருத்துவ, மற்றும் துப்புரவு வசதிகளையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்.

 பிரிவு வாரியாக இந்தத் திட்டங்களின் விவரம் வருமாறு:

நகர்ப்புற மேம்பாடு மற்றும் துப்புரவு:

பிரதமர், பாட்னா மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத்திட்டம், பாட்னா மற்றும் அதைச் சார்ந்த  பகுதிகளில் வாழும் மக்களுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதுடன் எளிதான வாழக்கை முறைக்கும் பயனளிக்கும்.

      பாட்னாவில் ஆற்று முகப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டப் பணியை அவர் துவக்கி வைக்கிறார்

      96.54 கிலோ மீட்டர் தூரத்தினாலான கர்மாலிசாக் கழிவு நீர் சுத்திகரிப்பு தொகுப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 

பார்ஹ், சுல்தான் கஞ்ச் நவ்காச்சியா ஆகிய இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்புடைய பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.  பல்வேறு பகுதிகளில் 22 அம்ருத் திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ரயில்பாதை:

      பிரதமர் பின்வரும் பிரிவுகளில் ரயில்பாதை மின்மய திட்டங்களைத் துவக்கி வைக்கிறார்:

  • பரவுனி – குமட்பூர்
  • முஸாஃபர்பூர் – ரக்ஸாவுல்
  • ஃபதுஹா – இஸ்லாம்பூர்
  • பிகார்ஷெரீப் – தனியாவன்

ராஞ்சி – பாட்னா  இடையே இயக்கப்படும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாராந்திர விரைவு ரயில் சேவையும் இந்நிகழ்வில் துவக்கி வைக்கப்படுகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு:

      பிரதமர் திரு நரேந்திர மோடி, புல்பூரிலிருந்து பாட்னா வரையிலான ஜகதீஷ்பூர் – வாரணாசி இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தையும்துவக்கி வைக்கிறார். மேலும், பாட்னா நகர எரிவாயு விநியோகத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

     9 மில்லியன் மெட்ரிக் டன் ஏ வி யு திறன் கொண்ட பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்டத்திற்கும்  இந்நிகழ்வில் அடிக்கல் நாட்டப்படுகிறது

      பிரதமர், துர்காப்பூரிலிருந்து முஸாஃபர்பூர் மற்றும் பாட்னாவுக்கு, பாரதீப் – ஹால்டியா – துர்காபூர் சமையல் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மேம்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏடிஎஃப் ஹைட்ரோ ட்ரீட்டிங் கூடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்

     இந்தத் திட்டங்கள் இந்நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எரிசக்தி கையிருப்பைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்த வகை செய்யும்.

சுகாதாரம்

     பிரதமர், சரன், சாப்ரா மற்றும் புர்னியா மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

பஹல்பூர், கயா ஆகிய நகரங்களில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் உயர்நிலைத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

உரங்கள் 

     பிரதமர், பரவுனியில் அமோனியா, யூரியா உர உற்பத்தி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

     பரவுனியிலிருந்து பிரதமர், ஜார்கண்ட் செல்கிறார். அங்கு ஹசாரிபாக் மற்றும் ராஞ்சி நகரங்களுக்கு அவர் செல்வார்.

 
Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
'Truly inspiring': PM Modi lauds civilians' swift assistance to rescue operations in Odisha's Balasore

Media Coverage

'Truly inspiring': PM Modi lauds civilians' swift assistance to rescue operations in Odisha's Balasore
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Text of PM’s address to the media on his visit to Balasore, Odisha
June 03, 2023
பகிர்ந்து
 
Comments

एक भयंकर हादसा हुआ। असहनीय वेदना मैं अनुभव कर रहा हूं और अनेक राज्यों के नागरिक इस यात्रा में कुछ न कुछ उन्होंने गंवाया है। जिन लोगों ने अपना जीवन खोया है, ये बहुत बड़ा दर्दनाक और वेदना से भी परे मन को विचलित करने वाला है।

जिन परिवारजनों को injury हुई है उनके लिए भी सरकार उनके उत्तम स्वास्थ्य के लिए कोई कोर-कसर नहीं छोड़ेगी। जो परिजन हमने खोए हैं वो तो वापिस नहीं ला पाएंगे, लेकिन सरकार उनके दुख में, परिजनों के दुख में उनके साथ है। सरकार के लिए ये घटना अत्यंत गंभीर है, हर प्रकार की जांच के निर्देश दिए गए हैं और जो भी दोषी पाया जाएगा, उसको सख्त से सख्त सजा हो, उसे बख्शा नहीं जाएगा।

मैं उड़ीसा सरकार का भी, यहां के प्रशासन के सभी अधिकारियों का जिन्‍होंने जिस तरह से इस परिस्थिति में अपने पास जो भी संसाधन थे लोगों की मदद करने का प्रयास किया। यहां के नागरिकों का भी हृदय से अभिनंदन करता हूं क्योंकि उन्होंने इस संकट की घड़ी में चाहे ब्‍लड डोनेशन का काम हो, चाहे rescue operation में मदद की बात हो, जो भी उनसे बन पड़ता था करने का प्रयास किया है। खास करके इस क्षेत्र के युवकों ने रातभर मेहनत की है।

मैं इस क्षेत्र के नागरिकों का भी आदरपूर्वक नमन करता हूं कि उनके सहयोग के कारण ऑपरेशन को तेज गति से आगे बढ़ा पाए। रेलवे ने अपनी पूरी शक्ति, पूरी व्‍यवस्‍थाएं rescue operation में आगे रिलीव के लिए और जल्‍द से जल्‍द track restore हो, यातायात का काम तेज गति से फिर से आए, इन तीनों दृष्टि से सुविचारित रूप से प्रयास आगे बढ़ाया है।

लेकिन इस दुख की घड़ी में मैं आज स्‍थान पर जा करके सारी चीजों को देख करके आया हूं। अस्पताल में भी जो घायल नागरिक थे, उनसे मैंने बात की है। मेरे पास शब्द नहीं हैं इस वेदना को प्रकट करने के लिए। लेकिन परमात्मा हम सबको शक्ति दे कि हम जल्‍द से जल्‍द इस दुख की घड़ी से निकलें। मुझे पूरा विश्वास है कि हम इन घटनाओं से भी बहुत कुछ सीखेंगे और अपनी व्‍यवस्‍थाओं को भी और जितना नागरिकों की रक्षा को प्राथमिकता देते हुए आगे बढ़ाएंगे। दुख की घड़ी है, हम सब प्रार्थना करें इन परिजनों के लिए।