உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

May 20th, 04:42 pm

மேன்மை தங்கியவர்களே மற்றும் பிரதிநிதிகளே, வணக்கம். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

May 20th, 04:00 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டின் கருப்பொருளான 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்' என்பதை எடுத்துரைத்து, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் அது இந்தியாவின் உலகளாவிய சுகாதாரத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். 2023-ம் ஆண்டு உலக சுகாதார கூட்டமைப்பில் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' பற்றி அவர் பேசியதை அவர் நினைவு கூர்ந்தார். ஆரோக்கியமான உலகின் எதிர்காலம் உள்ளடக்கம், ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.