பயிற்சி முடித்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள், பிரதமருடன் சந்திப்பு
August 19th, 08:34 pm
2024-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறைப் பணியில் பயிற்சி முடித்த அதிகாரிகள் தில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 33 இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.