காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்
August 10th, 09:30 am
இந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 12 முதல் 13 ஆண்டுகால தனது பதவிக்காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களைத் தனது இல்லத்தில் வரவேற்பது வழக்கமான மகிழ்ச்சிக்குரிய மரபு என்று கூறினார். நாட்டின் வெற்றிக்காக இந்திய விளையாட்டு வீரர்களுடைய அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும், தொடர் வெற்றிகளும் வழக்கமான அறிவுரையைவிட பள்ளி மாணவர்களுக்கு மேலும் திறன்மிக்க வகையில் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். தாங்கள் பள்ளிக்குச் சென்று, உரையாற்றுவதைவிட அவர்களுடைய பதக்கம் மாணவர்களை மேலும் ஊக்குவிப்பதாகத் திரு மோடி கூறினார்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வல்லூரி அஜய பாபுவுக்குப் பிரதமர் வாழ்த்து
July 28th, 02:07 pm
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில், ஆடவர் 79 கிலோ எடைப்பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்ற வல்லூரி அஜய பாபுவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.