சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
February 19th, 08:48 am
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாகி, உத்தியுடன் கூடிய சிந்தனையாளர், சுயராஜ்யத்திற்கான வீரராக திகழ்ந்த்தாகவும் அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவிற்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
February 11th, 10:19 am
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மாண்புகளில் வேரூன்றியுள்ள அவரது கோட்பாடுகளும், சிந்தனைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக தொடர்ந்து நீடிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.தேசப்பிதா மகாத்மா காந்திக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
January 30th, 10:41 am
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்புள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாக விளங்கும் சுதேசி கொள்கைக்கு பாபு எப்போதும் வலுவான முக்கியத்துவம் அளித்தார் என்று திரு மோடி கூறினார். அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களைக் கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்கப்படுத்தும் என்று திரு மோடி கூறினார்.பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த தினத்தில், அவருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
January 17th, 10:17 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) பிறந்த தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
January 03rd, 08:16 am
இந்தியாவின் மிகவும் வீரமிக்க போர் வீராங்கனைகளில் ஒருவராகவும், துணிச்சலையும், போர்த்தந்திர திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்திப் புகழ்பெற்றவருமான ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
January 03rd, 08:07 am
இன்று சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, சேவை மற்றும் கல்வி மூலம் சமூக மாற்றத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த முன்னோடியான சமூக சீர்திருத்தவாதியை நினைவுகூர்ந்துள்ளார்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், வலிமை, நீதி, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாகவும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
December 30th, 10:10 am
1943-ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி, போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒப்பற்ற துணிச்சலுடனும் வீரத்துடனும் மூவண்ணக் கொடியை ஏற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.12.2025) நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திரமோடி அஞ்சலி
December 25th, 11:21 am
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ பகுதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். அடல் அவர்களின் வாழ்க்கை பொதுச் சேவைக்கும் நாட்டுச் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது என்றும், அவர் எப்போதும் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பார் என்றும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
December 25th, 08:43 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நல்லாட்சிக்கும், நாட்டைக் கட்டமைப்பதற்கும் அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளார் என்று திரு மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமின்றி, ஒரு உணர்வுபூர்வ கவிஞராகவும் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, பணி, தலைமைத்துவம் ஆகிய பண்புகள் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழும், என்று திரு மோடி கூறினார்.முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
December 23rd, 09:39 am
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சௌத்ரி சரண் சிங்கின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் வளம் மற்றும் வேளாண் துறை வளர்ச்சிக்காகவும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
December 03rd, 09:11 am
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் செயல்மிக்க வீரராகவும், அரசியல் சாசன சபைக்கு தலைமை வகித்தவராகவும் இருந்தது முதல் நமது நாட்டின் முதலாவது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றது வரை இணையற்ற கண்ணியம், அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான நோக்கத்துடன் அவர் நமது நாட்டிற்கு சேவையாற்றியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அவரது நீண்ட கால பொது வாழ்க்கை எளிமை, துணிச்சல் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்புடன் இருந்தது என்றும் அவரது சிறப்பான சேவை மற்றும் தொலைநோக்குப் பார்வை எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
November 19th, 01:46 pm
ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி சென்றடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஸ்ரீராம் என்ற மந்திர உச்சாடனத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.Prime Minister pays tributes to Rani Lakshmibai on her birth anniversary
November 19th, 07:51 am
The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Rani Lakshmibai on her birth anniversary.ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 15th, 08:22 am
ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநிலம் முன்னேற்றத்தை விரும்பும் பழங்குடியினக் கலாச்சார வளமை கொண்ட ஒரு புகழ்பெற்ற நிலபரப்பாக உள்ளது என்று அவர் கூறினார். பகவான் பிர்சா முண்டாவின் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த புனித பூமியின் வரலாறு, துணிச்சல், போராட்டம் மற்றும் கண்ணியம் தொடர்பான உத்வேகம் அளிக்கும் பல்வேறு கதைகளால் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.பீகார் கோகிலா சாரதா சின்ஹா அவர்களுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
November 05th, 10:36 am
பீகார் கோகிலா சாரதா சின்ஹாவின் முதலாமாண்டு நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பீகாரின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் ஒரு புதிய அடையாளத்தை வழங்கினார், அதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். சத் என்ற மாபெரும் பண்டிகையுடன் தொடர்புடைய அவரது மெல்லிசைப் பாடல்கள் மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.பாட்னாவில் தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கருக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்
November 02nd, 10:33 pm
பாட்னாவின் திங்கர் கோலாம்பரில் தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டினார்.இந்தியா முழுவதும் உள்ள மக்களை இணைக்கும் பெருந்திரள் இயக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒற்றுமை சிலை சர்தார் படேலுக்கு மரியாதை செலுத்துவதாகும்: பிரதமர்
October 31st, 12:43 pm
ஒற்றுமை சிலை என்பது சர்தார் படேலுக்கு செலுத்தப்படும் மரியாதை என்றும் நாடு முழுவதும் உள்ள மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற மக்கள் இயக்கத்தின் பாராட்டத்தக்க உதாரணம் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சிலையுடன் மிக நெருக்கமாக இணைந்த உணர்வை அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.Prime Minister pays tributes to Sardar Vallabhbhai Patel at the Statue of Unity in Kevadia
October 31st, 12:41 pm
The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Sardar Vallabhbhai Patel at the ‘Statue of Unity’ in Kevadia.சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது: பிரதமர்
October 31st, 08:05 am
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
October 15th, 09:00 am
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.