List of Outcomes: State Visit of the President of the Russian Federation to India

December 05th, 05:53 pm

The state visit of Russian President Putin to India resulted in several key MoUs and agreements covering Migration & Mobility, Health & Food safety, Maritime Cooperation & Polar waters, Fertilizers, Customs & Commerce and Academic & Media collaborations. Programme for the Development of Strategic Areas of India - Russia Economic Cooperation till 2030 is also announced.

Joint Statement following the 23rd India - Russia Annual Summit

December 05th, 05:43 pm

At the invitation of PM Modi, Russian President Putin paid a State Visit to India for the 23rd India–Russia Annual Summit. The Leaders positively assessed the multifaceted and mutually beneficial India–Russia relations that span all areas of cooperation. As this year marks the 25th anniversary of the Declaration on Strategic Partnership between India and Russia, the two Leaders reaffirmed their support for further strengthening the Special and Privileged Strategic Partnership.

வாரணாசியிலிருந்து நான்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 08th, 08:39 am

உத்தரப்பிரதேசத்தின் துடிப்பான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக ஊழியர் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைத்து வரும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு தலைமை தாங்குபவரான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, எர்ணாகுளத்திலிருந்து தொழில்நுட்பம் மூலம் எங்களுடன் இணையும் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சுரேஷ் கோபி மற்றும் ஜார்ஜ் குரியன் அவர்களே, கேரளாவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே,

பிரதமர் திரு நரேந்திர மோடி, வாரணாசியில், நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்

November 08th, 08:15 am

இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் வரவேற்று, பாபா விஸ்வநாதரின் புனித நகரமான வாரணாசியின் அனைத்து குடும்பங்களுக்கும் தனது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். தேவ் தீபாவளிப் பண்டிகையின் போது காணப்பட்ட அசாதாரண கொண்டாட்டங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், மேலும் இன்று ஒரு நல்ல தருணம் அமைத்திருக்கிறது என்றும், இந்த வளர்ச்சிக்கானத் திருவிழாவையொட்டி அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மகாராஷ்டிராவில் அக்டோபர் 8, 9 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறார்

October 07th, 10:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாராஷ்டிராவில் அக்டோபர் 8, 9 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறார். நவி மும்பைக்கு, பிற்பகல் 3 மணி அளவில் சென்றடையும் பிரதமர், புதிதாக கட்டப்பட்டுள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தைப் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர், மும்பையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றுகிறார்.

அசாம் மாநிலம் தாரங்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

September 14th, 11:30 am

பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே! அசாமின் பிரபல முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு சர்பானந்த சோனாவால் அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர அரசு பிரதிநிதிகளே, தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இடையே எங்களை ஆசிர்வதிக்க பெருமளவில் குழுமியுள்ள எனது சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம்,

அசாமின் தர்ராங்கில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

September 14th, 11:00 am

இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். அதேபோல, அஸ்ஸாம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். அஸ்ஸாம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கியதாகவும், நாட்டின் பிற பகுதிகளுடன் வேகத்தை பராமரிக்க போராடியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், இன்று, அஸ்ஸாம் கிட்டத்தட்ட 13 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் முன்னேறி வருகிறது. இதை ஒரு பெரிய சாதனையாகக் குறிப்பிட்ட திரு மோடி, அஸ்ஸாம் மக்களின் கடின உழைப்பும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியும் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார். அஸ்ஸாம் மக்கள் இந்தக் கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மிசோரமில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய முழுஉரையின் தமிழாக்கம்

September 13th, 10:30 am

மிசோரம் ஆளுநர் வி கே சிங் அவர்களே, முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மிசோரம் அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே, மிசோரமின் அற்புதமான மக்களுக்கு வாழ்த்துகள்.

மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

September 13th, 10:00 am

மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டு தொலைநோக்கு: சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வழிநடத்த எட்டு வழிகாட்டுதல்கள்

August 29th, 07:11 pm

சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் நீண்ட பாரம்பரியத்தையும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும் கொண்ட இந்தியாவும் ஜப்பானும், அடுத்த பத்தாண்டுகளில் உள் நாட்டிலும் உலகிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை கூட்டாக வழிநடத்தவும், அந்தந்த நாட்டு இலக்குகளை அடைய உதவவும், நமது நாடுகளையும் அடுத்த தலைமுறை மக்களையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டுவரவும் எங்கள் நோக்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.

கர்நாடகா, தெலுங்கானா, பீகார், அசாம் மாநிலங்களுக்கு பயனளிக்கும் நான்கு ரயில்வே திட்டங்கள், குஜராத்தில் கட்ச்-சின் தொலைதூரப் பகுதிகளை இணைக்க ஒரு புதிய ரயில் பாதை ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

August 27th, 04:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் நான்கு திட்டங்களுக்கு மொத்தம் 12,328 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் பின்வருவன அடங்கும்: -

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 22nd, 05:15 pm

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, சாந்தனு தாக்கூர் அவர்களே, ரவ்னீத் சிங் அவர்களே, சுகந்த மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவான ஷோமிக் பட்டாச்சார்யா அவர்களே, இங்கு கூடியிருக்கும் இதர மக்கள் பிரதிநிதிகளே, பெரியோர்களே, தாய்மார்களே,

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ரூ.5,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

August 22nd, 05:00 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ரூ.5,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்தார், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார். நோபராவிலிருந்து ஜெய்ஹிந்த் விமான நிலையம் வரையிலான கொல்கத்தா மெட்ரோ ரயில் பயணத்தின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட திரு. மோடி, இந்தப் பயணத்தின் போது, பல்வேறு சக ஊழியர்களுடன் கலந்துரையாடியதாகவும், கொல்கத்தாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் நவீனமயமாக்கல் குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். ஆறு வழி கோனா உயர்மட்ட விரைவுச் சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்களுக்காக, கொல்கத்தா மக்களுக்கும் மேற்கு வங்கத்தின் அனைத்து மக்களுக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

துவாரகா விரைவுச் சாலை மற்றும் நகர விரிவாக்க சாலை-II திட்டங்களின் தில்லி பிரிவைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 17th, 12:45 pm

எனது அமைச்சரவை நண்பர் திரு நிதின் கட்கரி அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் சக்சேனா அவர்களே, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திரு ஹர்ஷ் மல்கோத்ரா அவர்களே, தில்லி மற்றும் ஹரியானாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாநில அமைச்சர்களே, இதர பிரதிநிதிகளே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே,

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்

August 17th, 12:39 pm

தில்லியின் ரோஹிணியில் சுமார் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.08.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விரைவுச் சாலையின் பெயர் துவாரகா என்றும், நிகழ்ச்சி ரோஹிணியில் நடைபெறுவதாகவும் கூறி, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜென்மாஷ்டமிப் பண்டிகையின் உணர்வை எடுத்துரைத்த அவர், துவாரகாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது தற்செயல் நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டார். முழு நிகழ்வும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியால் நிரம்பி இருப்பதாகப் பிரதமர் கூறினார்.

மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

July 18th, 02:35 pm

மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி வி ஆனந்த போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான ஹர்தீப் சிங் பூரி, சந்தானு தாக்கூர், சுகந்த மஜூம்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சௌமிக் பட்டாச்சார்யா, ஜோதிர்மய் சிங் மகத்தோ அவர்களே, ஏனைய மக்கள் பிரதிநிதிகளே, எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம்!

மேற்கு வங்கத்தின் துர்காபூரில் சுமார் ₹5,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்தார்.

July 18th, 02:32 pm

மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி சுமார் 5,400 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், எஃகு நகரம் என்று அழைக்கப்படும் துர்காபூர், இந்தியாவின் தொழிலாளர் சக்தியின் முக்கிய மையமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் பாராட்டினார், மேலும் இன்று அந்தப் பங்கை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று கூறினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும், எரிவாயு அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை அதிகரிக்கும் மற்றும் எஃகு நகரமாக துர்காபூரின் அடையாளத்தை வலுப்படுத்தும் என்று திரு. மோடி குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் இந்தியாவில் தயாரித்தல், உலகத்திற்காக தயாரித்தல் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன என்றும், மேற்கு வங்கத்தை முன்னேற்ற உதவும் என்றும் பிரதமர் கூறினார். பிராந்திய இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அனைவருக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வேலை வாய்ப்புத் திருவிழாவின் கீழ் 51,000- க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 12th, 11:30 am

மத்திய அரசில் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் இயக்கம் சீராகத் தொடர்கிறது. பரிந்துரை இல்லை, ஊழல் இல்லை. இன்று, 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் இப்போது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். இன்று, உங்களில் பலர் இந்திய ரயில்வேயில் உங்கள் பொறுப்புகளைத் தொடங்கியுள்ளீர்கள். சிலர் இப்போது பாதுகாப்பு துறையில் இணைந்து நாட்டின் பாதுகாவலர்களாக மாறுகிறீர்கள். அஞ்சல் துறையில் நியமிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசு சேவைகளை வழங்க உதவுவார்கள். சிலர் அனைவருக்கும் சுகாதாரம் என்ற திட்டத்தில் பங்களிப்பை வழங்குவார்கள். பல இளம் தொழில் வல்லுநர்கள் நிதி சேர்க்கையை விரைவுபடுத்த உதவுவார்கள். மற்றவர்கள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துவார்கள். உங்கள் துறைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்த இலக்கு என்ன? நாம் அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். துறை, பணி, பதவி அல்லது பிராந்தியம் எதுவாக இருந்தாலும் ஒரே குறிக்கோள் தேசத்திற்கு சேவை செய்வதே. வழிகாட்டும் கொள்கை என்பது மக்களே முதன்மையானவர்கள் என்பதாகும். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு ஒரு சிறந்த தளம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த பெரிய வெற்றியை அடைந்ததற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்க்கையில் இந்த புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்

July 12th, 11:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் இருந்தபோதிலும், அவர்களின் பொதுவான குறிக்கோள் முதலில் குடிமகன் என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் தேசிய சேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரால் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியின் கீழ் சிறப்பு மரக்கன்று நடும் இயக்கத்திற்கு பிரதமர் தலைமை ஏற்பார்

June 04th, 01:20 pm

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், பசுமை போக்குவரத்திற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினமான 2025 ஜூன் 5 அன்று புதுதில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் நடைபெறும் சிறப்பு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்குவார்.