பாண்டவாணி பாடகி திஜன் பாய் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

July 05th, 12:07 pm

புகழ்பெற்ற பாண்டவாணி பாடகி திஜன் பாய் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமது பிரமாண்டமான நிகழ்ச்சிகளின் மூலம், சத்தீஸ்கரின் பாண்டவாணி நாட்டுப்புறக் கலை வடிவத்திற்கு திஜன் பாய் உலகெங்கிலும் ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கியதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு, கலை, கலாச்சார உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.