பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது

December 18th, 04:30 pm

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது

22-வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

July 09th, 09:54 pm

இந்தப் பயணத்தின்போது, அதிபர் திரு. விளாடிமிர் புடின் ரஷ்யாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரை பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கினார். இந்தியா, ரஷ்யா இடையேயான சிறப்பான மற்றும் முன்னுரிமை பெற்ற பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புறவு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக. இந்த விருது வழங்கப்பட்டது.

ரஷ்யாவின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

July 09th, 08:12 pm

இந்திய - ரஷ்ய உறவுகளை வளர்ப்பதில் சிறப்பான பங்களிப்புக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் மிக உயர்ந்த தேசிய விருதான புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரின் ஆணை விருதை, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடின் வழங்கினார். 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த விருது, கிரெம்ளினில் உள்ள புனித ஆண்ட்ரூ ஹாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.