Rozgar Mela reflects our Government’s commitment to empowering the Yuva Shakti with new opportunities: PM Modi

May 23rd, 11:15 am

At the 19th Rozgar Mela, PM Modi distributed over 51,000 appointment letters and said India’s growing investments, global partnerships and expanding sectors are creating new opportunities for the youth. He highlighted rising opportunities across technology, manufacturing, startups, defence, infrastructure and public service as India moves towards the vision of Viksit Bharat.

வேலைவாய்ப்பு முகாமின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நியமனக் கடிதங்களை வழங்கினார்

May 23rd, 11:00 am

பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நியமனக் கடிதங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்று விவரித்தார். அரசு சேவையில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்ற அவர், ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்களின் உடனடி பங்களிப்பை வலியுறுத்தினார். வரவிருக்கும் ஆண்டுகளில், வளர்ந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்கு வகிப்பீர்கள் என்று திரு மோடி கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்

May 17th, 03:45 am

நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.

செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பாக ஏஎஸ்எம்எல், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைப் பிரதமர் பார்வையிட்டார்

May 16th, 10:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, குஜராத்தின் தோலேராவில் உள்ள குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) உற்பத்தி ஆலைக்கு ஆதரவளிப்பதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ், ஏஎஸ்எம்எல் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை பார்வையிட்டார்.

நெதர்லாந்து தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

May 16th, 10:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, எரிசக்தி, துறைமுகங்கள், சுகாதாரம், வேளாண் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி டச்சு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த தொழில் துறைத் தலைவர்கள், குறைக்கடத்திகள், தொழில்நுட்பம், புத்தாக்கம்; உள்கட்டமைப்பு, கடல்சார் போக்குவரத்து, எரிசக்தி வேளாண்மை உள்ளிட்டவற்றில், இந்தியாவுக்கான தங்களது உத்திகள் குறித்து எடுத்துரைத்தனர்.