இந்தியா - ஸ்லோவாக்கியா கூட்டறிக்கை

June 15th, 05:32 pm

ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 15 ஜூன் 2026 அன்று ஸ்லோவாக் குடியரசிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வுக்குப் பிரதமர் வரவேற்பு

June 15th, 01:21 pm

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு செயல்திட்டம் 2030

June 15th, 05:42 am

இந்தியா – பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவை பிரதமர் திரு நரேந்திர மோடியும், அதிபர் திரு இமானுவேல் மேக்ரானும் இணைந்து சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளனர். 2026 பிப்ரவரி 17 அன்று இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ தொடங்கி வைத்து, செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், இணையவழி, சுகாதாரம், கலாச்சாரம், பொருளாதாரம், கல்வித் தொடர்புகள், மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் விரிவான, பன்முகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.

Bharat Innovates is becoming a bridge between Indian talent and European capital: PM Modi in Nice, France

June 14th, 04:36 pm

PM Modi and French President Emmanuel Macron jointly inaugurated Bharat Innovates 2026 in Nice, France. Addressing a gathering, PM Modi highlighted India’s deep-tech revolution and the transformative potential of AI, satellite technology, advanced manufacturing and clean energy. He called for trusted, inclusive and human-centric innovation, while reaffirming India’s vision of becoming a global innovation hub.

பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

June 14th, 03:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.

Daman has become a living example of Mini India: PM Modi

June 05th, 07:20 pm

Addressing a public gathering in Daman, PM Modi lauded Daman as a living example of Mini India. Launching multiple transformative projects spanning connectivity, health, education, tourism, and urban infrastructure, he highlighted the region's prowess in solar energy and cleanliness. Listing various government initiatives that transformed the lives of the people, he assured the Union Territory of the central government's continued support.

டாமனில் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

June 05th, 07:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, டாமனில் சுமார் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி இப்போது நாட்டின் பன்முகத்தன்மையைப் பெருமையுடன் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் டாமனில் வசிப்பது, 'மினி இந்தியா'வின் உதாரணமாக மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 05th, 09:53 am

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், பாதுகாப்பில் ஆர்வமுள்ள அனைவரையும் அவர் பாராட்டியுள்ளார்.

டென்மார்க் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திருமதி மெட்டே ஃப்ரெட்ரிக்சனுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

June 03rd, 06:45 pm

டென்மார்க் நாட்டின் பிரதமராக, தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திருமதி மெட்டே ஃப்ரெட்ரிக்சனுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார், மேலும் குடிமக்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

May 31st, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது. இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய-இத்தாலி கூட்டுப் பிரகடனம்

May 20th, 10:28 pm

இத்தாலியக் குடியரசின் அமைச்சர்கள் குழுவின் தலைவர் திருமிகு ஜார்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 மே 19-20 தேதிகளில் இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2024 ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி இத்தாலிக்குச் சென்றிருந்ததையும், 2023-ல் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் திருமிகு மெலோனி இந்தியாவுக்கு வந்திருந்ததையும் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பயணம், இருதரப்பு உறவுகளுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. இந்திய-இத்தாலி உறவுகளை ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கு இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

3-வது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டுக்கு இடையே பின்லாந்து பிரதமருடன், பிரதமர் சந்திப்பு

May 19th, 06:42 pm

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் நடைபெறும் 3-வது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி, பின்லாந்து பிரதமர் திரு. பெட்டேரி ஓர்போவை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

‘No compromise, no double standards on terrorism’: PM Modi at Nordic Summit

May 19th, 04:25 pm

Attending the joint press meet with Nordic leaders, PM Modi highlighted the growing India-Nordic partnership across trade, investment, green technology and innovation. He said both sides decided to shape India-Nordic ties into a Green Technology and Innovation Strategic Partnership and underlined a shared resolve against terrorism, with a clear message of “No compromise. No double standards.

பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்

May 18th, 08:21 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.05.2026) ஓஸ்லோவில் நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கார் ஸ்டோரே-யுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும் நார்வே-வுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளின் அடையாளமாக, இன்று காலை ஓஸ்லோ விமான நிலையத்திற்கு அவர் சென்றடைந்தபோது, நார்வே பிரதமர் ஸ்டோரே நேரடியாக வந்து அவரை அன்புடன் வரவேற்றார்.

The Green Strategic Partnership between India and Norway will be beneficial for the entire world: PM Modi at the India - Norway Joint Press Meet

May 18th, 04:44 pm

In his remarks during the India-Norway Joint Press Meet, PM Modi appreciated Norway for standing firmly with India against terrorism. He noted India’s target of attracting one hundred billion dollars in investment and creating one million jobs over the next fifteen years. He reiterated that both India and Norway believe in a rules-based order and advocated the early restoration of peace in Ukraine and West Asia.

India-Europe partnership can deliver world-class outcomes: PM Modi at the European Round Table for the Industry

May 18th, 05:00 am

PM Modi addressed the European Round Table for Industry (ERT) in Gothenburg, Sweden, saying that the India-EU FTA could create new opportunities. He reiterated India’s vision of Design for India, Make in India and Export from India and invited European companies to deepen their engagement with India as a trusted and reliable economic partner. He concluded by suggesting that the India-Europe CEO Roundtable be held annually.

PM Modi, Swedish PM Ulf Kristersson, European Commission President attend joint press meet

May 17th, 11:43 pm

At the India-Sweden-EU Joint Press Meet, PM Modi said that India-Sweden relations had been elevated to the level of a Strategic Partnership. He noted that by bringing together Sweden’s technology and India’s scale, climate solutions benefiting the whole world could be created. Welcoming European Commission President Ursula von der Leyen, the PM said that through shared efforts, India-Sweden and India-Europe partnerships will continue to move forward.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்

May 17th, 03:45 am

நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.

இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் 2026-2030-ன் முக்கிய அம்சங்கள்

May 17th, 03:15 am

பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்துப் பிரதமர் திரு ராப் ஜெட்டனும், 2026 மே 16 அன்று ஹேக்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள், கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, இந்தியாவும் நெதர்லாந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2026-2030) இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.

தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

May 17th, 12:12 am

சுவீடனின் கோதன்பர்க்கில் 2026 மே 17 அன்று நடைபெற்ற தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வால்வோ குழுமம் ஏற்பாடு செய்திருந்த இந்த உரையாடலில், சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய முன்னணி தொழில்துறை தலைவர்கள், முன்னணி ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.