மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.ஒரே நேரத்தில் 108 இடங்களில் அதிகமான மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்த குஜராத்துக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 01st, 02:00 pm
ஒரே நேரத்தில் 108 இடங்களில் அதிகமான மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்த குஜராத்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்சூரிய நமஸ்காரம் செய்த 75 லட்சம் பேரை பிரதமர் பாராட்டியுள்ளார்
January 14th, 10:15 pm
இந்தியாவின் தலை சிறந்த விளையாட்டு வீரர்களுடன் இன்று 75 லட்சம் பேர் சூரிய நமஸ்காரம் செய்தது குறித்த இந்திய விளையாட்டுக்கள் ஆணையத்தின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது :