2020 டிசம்பர் 11-ல் சர்வதேச பாரதி விழாவில் பிரதமர் உரை

December 09th, 10:23 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2020 டிசம்பர் 11, மாலை 04:30 மணிக்கு நடைபெறும் சர்வதேச பாரதி விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார். இந்த ஆண்டு, இந்தத் திருவிழா மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேச அளவிலும், சர்வதேச அளவிலும், பல கவிஞர்களும், கலைஞர்களும் இதில் பங்கேற்க உள்ளார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138 வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வானவில் கலாச்சார மையம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.