ஆந்திரப்பிரதேச பயணம் குறித்தப் பார்வையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
October 16th, 09:55 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆந்திரப்பிரதேச பயணம் குறித்த கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்பா மல்லிகார்ஜூன சுவாமி கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ சிவாஜி தியான மந்திர் மற்றும் ஸ்ரீ சிவாஜி தர்பார் மண்டபத்தையும் பார்வையிட்டார். பின்னர், கர்நூலில் 13,430 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.