பிரதமர் அலுவலக அலுவலர்கள் மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படை வீரர்களை பிரதமர் சந்தித்தார்
January 02nd, 06:34 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புது தில்லியில் லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் அலுவலக அலுவலர்கள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். இந்த கலந்துரையாடலில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் ஆற்றும் நற்பணிகளை பாராட்டிய பிரதமர், வருங்காலத்திலும் அவர்கள் தங்கள் முயற்சிகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.