'Vande Mataram' rekindled an idea deeply rooted in India for thousands of years: PM Modi in Lok Sabha

December 08th, 12:30 pm

During the special discussion on 150 years of Vande Mataram in the Lok Sabha, PM Modi said that the discussion serves as a source of education for future generations. He called upon all to move forward together to fulfil the dreams envisioned by the freedom fighters, making Vande Mataram at 150 the source of inspiration and energy for all. The PM reaffirmed the resolve to build a self-reliant nation and achieve the vision of a developed India by 2047.

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

December 08th, 12:00 pm

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையெட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

'மன் கீ பாத்' (மனதின் குரல்) என்பது மக்களின் கூட்டு முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறந்த தளமாகும்: பிரதமர் மோடி

November 30th, 11:30 am

இந்த மாத 'மன் கீ பாத்'தில் (மனதின் குரல்), அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு, அயோத்தியில் தர்ம த்வஜ் ஏற்றுதல், ஐஎன்எஸ் 'மஹே' கப்பல் அறிமுகம் மற்றும் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீத மஹோத்சவம் உள்ளிட்ட நவம்பர் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உணவு தானியங்கள் மற்றும் தேன் உற்பத்தியில் சாதனை, இந்தியாவின் விளையாட்டு வெற்றிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பல முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

தென்னாப்பிரிக்கா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை

November 21st, 06:45 am

தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இருபதாவது ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள, திரு. சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், நவம்பர் 21 முதல் 23 வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன்.

ஜி7 உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை

June 18th, 03:05 pm

கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று (2025 ஜூன் 17) நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினார். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் உரையாடல்

June 18th, 02:51 pm

கனடாவின் கனனாஸ்கிஸில் 2025 ஜூன் 17 அன்று நடைபெற்ற 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக அளித்த கூட்டறிக்கையை பல ஜி20 நாடுகள், விருந்தினர் நாடுகள் அங்கீகரித்தன

November 20th, 07:52 am

டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவுகள் குறித்து இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் வழங்கிய முக்கூட்டு அறிக்கைக்கு ஜி20 உச்சிமாநாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.

நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

November 12th, 07:44 pm

பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு நவம்பர் 16-21 தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். நைஜீரியாவில், மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இந்திய சமூகத்தில் உரையாற்றவும் அவர் உயர்மட்ட விவாதங்களில் ஈடுபடுவார். பிரேசிலில் அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். கயானாவில், பிரதமர் மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார், கரீபியன் பிராந்தியத்துடனான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் CARICOM-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பார்.

தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக மேதகு சிரில் ரமஃபோசா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 17th, 05:11 pm

தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக மேதகு சிரில் ரமஃபோசா இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான உத்திபூர்வக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த அதிபர் ரமஃபோசாவுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொமாரோஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாலி அசௌமானிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 29th, 10:30 pm

கொமாரோஸ் நாட்டின் அதிபராக இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு ஆசாலி அசௌமானிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

November 05th, 10:22 pm

நடப்பு உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 26th, 04:12 pm

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரை

September 26th, 04:11 pm

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 பாரத் தலைமைத்துவத்தின் மகத்தான வெற்றி: தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்தியாவின் ஜி20 தலைமை: வசுதைவ குடும்பகம்; ஜி20 பல்கலைக்கழக இணைப்பு திட்டத்தின் தொகுப்பு; மற்றும் ஜி20 இல் இந்திய கலாச்சாரத்தை காட்சிப்படுத்துதல் என்ற 4 வெளியீடுகளையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

காமோரோஸ் அதிபருடன் பிரதமரின் சந்திப்பு

September 10th, 05:20 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 10 செப்டம்பர் 2023 அன்று தில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது காமோரோஸ் அதிபர் திரு. அசாலி அசோமானியை சந்தித்தார்.

இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா-அமெரிக்கா கூட்டறிக்கை

September 09th, 09:11 pm

இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களாகிய நாங்கள் புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு இடையே சந்தித்து, நமது பகிரப்பட்ட உலகிற்கு தீர்வுகளை வழங்குவதற்கான சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பிற்கான முதன்மை மன்றமாக ஜி 20 க்கான எங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து திரும்பிய பின்னர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 26th, 01:18 pm

இன்று காலை நான் இஸ்ரோவுக்கு வந்தபோது, சந்திரயான் எடுத்த படங்களை முதல் முறையாக வெளியிடும் பாக்கியம் கிடைத்தது. ஒருவேளை, அந்த படங்களை நீங்கள் இப்போது தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கலாம். அந்த அழகான படங்கள் ஒரு குறிப்பிடத்தக்க அறிவியல் வெற்றியாக இருந்தன. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய இடத்திற்கு ஒரு பெயர் வைக்கப்பட வேண்டும் என்றும், அந்த பெயர் 'சிவசக்தி' என்றும் நான் நினைத்தேன். சிவபெருமானைப் பற்றி நாம் பேசும்போது, அது மங்களகரமானதைக் குறிக்கிறது, மேலும் அதிகாரத்தைப் பற்றி பேசும்போது, அது என் நாட்டின் பெண்களின் வலிமையைக் குறிக்கிறது. சிவபெருமானைப் பற்றிப் பேசும்போது இமயமலையும், சக்தி (சக்தி) என்றதும் நினைவுக்கு வருவது கன்னியாகுமரிதான். எனவே, இமயமலை முதல் கன்னியாகுமரி வரை இந்த உணர்வின் சாராம்சத்தைப் பதிவு செய்வதற்காக அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தில்லி வந்தடைந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

August 26th, 12:33 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லி திரும்பியபோது இன்று (26.08.2023) சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து இஸ்ரோ குழுவினருடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் இருந்து தில்லி வந்தார். தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பெங்களூரு சென்றார். பின்னர் தில்லி வந்த பிரதமரை திரு. ஜே.பி.நட்டா வரவேற்று, அவரது வெற்றிகரமான பயணம் மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான சாதனைகள் குறித்துப் பாராட்டினார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களூரு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு

August 26th, 10:08 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பெங்களூரு வந்தடைந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர், பின்னர் கிரீஸ் சென்றார். பிரதமர் பல்வேறு இருதரப்பு சந்திப்புகள் மற்றும் உள்ளூர் சிந்தனைத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தினார். இரு நாடுகளிலும் உள்ள துடிப்பான இந்திய சமூகங்களையும் அவர் சந்தித்தார். காணொலி மூலம் சந்திரயான்-3-ன் லேண்டர், நிலவில் தரையிறங்குவதை நேரில் கண்டு களித்த பிரதமர், பின்னர் இஸ்ரோ குழுவினருடன் கலந்துரையாட நேராக பெங்களூரு வந்தடைந்தார்.

India & Greece have a special connection and a relationship spanning centuries: PM Modi

August 25th, 09:30 pm

PM Modi addressed the Indian community at Athens Conservatoire, in Athens. In his address, PM Modi emphasized the unprecedented transformation that India is currently undergoing and the strides being made in various sectors. He lauded the success of the Chandrayaan mission. Prime Minister highlighted the contribution of the Indian community in Greece in advancing the multi-faceted India-Greece relations and urged them to be a part of India’s growth story.

ஏதென்ஸில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்

August 25th, 09:00 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.082023 அன்று ஏதென்ஸில் உள்ள ஏதென்ஸ் கன்சர்வேட்டரியில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார்.