It is the need of the hour that we transform 'Vocal for Local' into a mass movement: PM Modi in Vadodara

May 11th, 06:15 pm

Addressing a special gathering during the inauguration of Sardardham Hostel in Vadodara, PM Modi said education, skill development and women’s empowerment are key to shaping India’s future workforce and entrepreneurial growth. Highlighting the impact of global economic challenges and the West Asia crisis, he urged citizens to support “Vocal for Local”, reduce dependence on imports, conserve foreign exchange and strengthen self-reliance through collective responsibility and everyday actions.

குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார்தாம் விடுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

May 11th, 06:00 pm

குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார்தாம் விடுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.05.2026) திறந்து வைத்தார். சோம்நாத் கோவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டதன் 75-வது புனித நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் அதே நாளில் வதோதராவில் சர்தார்தாமில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கல்வி நிலையம் திறப்பு நிகழ்ச்சியும் ஆன்மீக நினைவு நிகழ்ச்சியும் ஒரே சமயத்தில் நடைபெற்றிருப்பதை குறிப்பிட்டார். கற்பித்தல் உதவித் திட்டத்தை தொடங்கிவைத்ததோடு டாக்டர் துஷ்யந்த் மற்றும் தக்ஷா படேல் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர், இந்த முன்முயற்சி இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கு முன்னோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பிரபாஸ்பதானில் சோம்நாத் அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்றது குறித்தும் தற்போது நாம் மாற்றத்தக்க கல்வி நிறுவனங்களின் திறப்பு நிகழ்ச்சியில் உள்ளதை குறித்தும் குறிப்பிட்ட அவர், பாரம்பரியமும், வளர்ச்சி மேம்பாடும் எவ்வாறு ஒன்றாக இணைந்துள்ளதற்கு அடையாளமாக இது திகழ்கிறது என்று கூறினார்.

வதோதரா செல்லும் வழியில் எடுக்கப்பட்ட சோம்நாத் கோயில் புகைப்படத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

May 11th, 05:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, சோம்நாத்திலிருந்து வதோதராவுக்குச் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட சோம்நாத் கோயிலின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சோம்நாத்தில் இந்திய விமானப்படையின் சூரியக்கிரண் குழுவின் மெய்சிலிர்க்கும் சாசக நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார்

May 11th, 04:13 pm

சோம்நாத் அம்ருத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் சூரியக்கிரண் குழுவின் மெய்சிலிர்க்கும் சாசக நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டுகளித்தார்.

குஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலில் பிரதமர் மகாபூஜை மற்றும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்

May 11th, 03:49 pm

குஜராத் சோம்நாத் கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி மகாபூஜை மற்றும் கும்பாபிஷேகத்தில் இன்று (11.05.2026) கலந்து கொண்டார்.

சோமநாதர் ஆலயத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார்

May 11th, 12:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சோமநாதர் ஆலயத்திற்குச் சென்று, புனரமைக்கப்பட்ட அக்கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வில் தாம் ஆசி பெற்ற உணர்வை வெளிப்படுத்தினார்.

Somnath Amrut Mahotsav is a grand festival of inspiration for India for the next thousand years: PM Modi in Prabhas Patan, Gujarat

May 11th, 10:20 am

Addressing the Somnath Amrut Mahotsav at Somnath Temple, PM Modi described the 75th anniversary of the temple’s reconstruction as a milestone in Bharat’s civilisational journey and a symbol of India’s enduring spiritual consciousness. He said Somnath reflects the nation’s resilience, cultural continuity and unwavering faith, while also highlighting the importance of preserving heritage alongside development and modern progress.

குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் திறக்கப்பட்டு 75 வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற சோமநாதரின் அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

May 11th, 10:15 am

சோமநாதர் ஆலய வளாகத்தில் அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்நிகழ்ச்சியை ஒரு சடங்கு ரீதியான நிகழ்வு என்பதை விட, இந்தியாவின் நிலைத்த உணர்வு மற்றும் நாகரிகத்தின் மீள்திறனுக்கான ஒரு பிரகடனம் என்று பாராட்டினார். வேத மந்திரங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு ஆகியவை ஒன்றிணைந்து அந்தப் புனிதத் தலத்தின் புனரமைப்பைக் கொண்டாடியதால், தெய்வீக பக்தியும் தேசியப் பெருமிதமும் பின்னிப் பிணைந்திருந்த அந்த மகத்தான கூட்டத்தில், தெய்வீக பக்திக்கு நிகராக தேச பக்தி வெளிப்பட்டது.

PM Modi’s special address at a public meeting in Jamnagar, Gujarat

May 10th, 09:35 pm

PM Modi addressed a public meeting in Jamnagar, Gujarat. Reflecting on Gujarat’s remarkable development journey, he said the state has transformed from being known only for salt production to becoming a hub for semiconductors, metro coaches, railway engines, renewable energy and emerging aviation manufacturing. He credited the people of Gujarat and BJP workers for the state’s continued growth and progress.

மே 10-11 தேதிகளில் பிரதமர் குஜராத் செல்கிறார்

May 09th, 11:19 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மே 10-ம் தேதி இரவு, அவர் ஜாம்நகர் வருகிறார். மே 11-ம் தேதி காலை 10:15 மணியளவில், சோம்நாத் கோயிலில் நடைபெறும் 'சோம்நாத் அமுதப் பெருவிழாவில்' பிரதமர் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, வதோதரா செல்லும் அவர், அங்கு மாலை 6 மணியளவில் 'சர்தார்தாம் விடுதி'யை திறந்து வைக்கிறார். இவ்விரு நிகழ்வுகளிலும் திரண்டிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார்.

The history of Somnath is not one of destruction or defeat, it is a history of victory and renewal: PM Modi during Somnath Swabhiman Parv

January 11th, 12:00 pm

PM Modi addressed the Somnath Swabhiman Parv in Somnath, recalling the sacrifices of those who dedicated their lives to the protection and reconstruction of the temple. Emphasising that the festival is not merely a remembrance of the destruction that took place a thousand years ago, the PM said it is a celebration of a thousand-year journey of resilience, as well as of India’s existence and pride. He underscored the resolve to move forward with the vision of “Dev se Desh.”

குஜராத்தின் சோம்நாத்தில், சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

January 11th, 11:41 am

குஜராத்தின் சோம்நாத்தில் இன்று (11.01.2026) நடைபெற்ற சோம்நாத் ஸ்வாபிமான் பர்வ் எனப்படும் சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தச் சூழலும், இந்த கொண்டாட்டமும் அசாதாரணமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒருபுறம் பகவான் மகாதேவரின் அருளும், மறுபுறம் சூரியனின் கதிர்களும், மந்திரங்களின் எதிரொலியும், பக்தியின் எழுச்சியும் இணைந்திருப்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த தெய்வீக சூழல் இந்த நிகழ்வை மேலும் அதிக தெய்வீகமாகவும், பிரமாண்டமாகவும் ஆக்குகிறது என்று அவர் கூறினார். சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக, சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவில் தீவிரமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதை ஒரு பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த கொண்டாட்டம் பெருமை, மரியாதை, கண்ணியம் மற்றும் அறிவு, மகத்துவம், பாரம்பரியம், ஆன்மீகம், உணர்தல், அனுபவம், மகிழ்ச்சி, நெருக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று பிரதமர் எடுத்துரைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது மகாதேவரின் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

சோம்நாத் பயணத்தின் சில காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 10th, 11:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலம் சோம்நாத் பயணத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.

குஜராத்தில் உள்ள சோம்நாத்துக்கு ஜனவரி 10-11 தேதிகளில் பிரதமர் பயணம்

January 09th, 12:10 pm

குஜராத்தில் உள்ள சோமநாத்துக்கு 2026, ஜனவரி 10-11 தேதிகளில் செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி சோமநாதர் சுயமரியாதை விழாவில் பங்கேற்பார். ஜனவரி 10 அன்று இரவு சுமார் 8 மணியளவில், பிரதமர் ஓம்கார் மந்திரம் பாராயணம் நிகழ்வில் பங்கேற்பார். பின்னர் சோமநாதர் ஆலயத்தில் ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்வையிடுவார்.

ஜனவரி 10-12 தேதிகளில் பிரதமர் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்

January 09th, 12:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026, ஜனவரி 10 முதல் 12 வரை குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 10 அன்று மாலை பிரதமர் சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்வார். இரவு சுமார் 8 மணியளவில் பிரதமர் ஓம்கார மந்திரம் பாராயணம் நிகழ்வில் பங்கேற்பார். அதன் பின் சோமநாதர் ஆலயத்தில் ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்வையிடுவார்.

நாட்டின் கூட்டான உணர்வை விழிப்புறச்செய்வதில் சோம்நாத் தாம் வகிக்கும் காலத்தால் அழியாத பங்களிப்பை ஒரு சுபாஷிதம் மூலம் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

January 09th, 08:44 am

நாட்டின் கூட்டான உணர்வை விழிப்புறச்செய்வதில் சோமநாத் ஆலயம் தாம் வகிக்கும் காலத்தால் அழியாத பங்களிப்பை சுட்டிக்காட்டி அதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சோம்நாத் சுயமரியாதை திருவிழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 08th, 10:22 am

சோம்நாத் சுயமரியாதை திருவிழா தொடங்குவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் மனங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் காலத்தால் அழியாத நாகரீக உணர்வை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

காந்தி நகரில் குஜராத் நகர வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 27th, 11:30 am

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவர்களே, முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர்லால் அவர்களே, சி ஆர் பாட்டீல் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே!

குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுக் கால கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

May 27th, 11:09 am

குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது, 2005-ம் ஆண்டின் நகர்ப்புற வளர்ச்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை நகர்ப்புற வளர்ச்சி ஆண்டாக அவர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வதோதரா, தாஹோத், பூஜ், அகமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களுக்கு கடந்த 2 நாட்களில் பயணம் செய்தபோது, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் முழக்கத்துடனும், பறக்கும் மூவர்ணக் கொடிகளுடனும் தேசபக்தியின் உற்சாகத்தை தாம் அனுபவித்து வருவதாகக் கூறினார். இது காண்பதற்கு ஒரு காட்சி என்றும், இந்த உணர்வு குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இருப்பதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத்தின் முள்ளை அகற்ற இந்தியா முடிவு செய்தது, அதை மிகுந்த உறுதியுடன் செய்தது என்று பிரதமர் கூறினார்.

குஜராத் மாநிலம் தாஹோத் நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

May 26th, 11:45 am

குஜராத் மாநில முதலமைச்சர் திரு. பூபேந்திர பாய் அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, குஜராத் மாநில அமைச்சரவையைச் சேர்ந்த எனது அனைத்து சகாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிற சிறப்புமிக்க பிரமுகர்கள் மற்றும் தாஹோத் நகரத்தைச் சேர்ந்த எனது அன்பான சகோதர சகோதரிகளே!